Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

John Chapters

John 14 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

John Chapters

John 14 Verses

1 உள்ளம் கலங்கவேண்டாம். கடவுள்மீது விசுவாசம்வையுங்கள், என்மீதும் விசுவாசம் வையுங்கள்.
2 என் தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள் பல உள்ளன; இல்லாதிருந்தால் உங்களுக்குச் சொல்லி இருப்பேன். ஏனெனில், உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்.
3 நான் போய் உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்தபின், திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்; அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.
4 நான் போகும் இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்."
5 தோமையார் அவரிடம், "ஆண்டவரே, நீர் செல்லுமிடமே எங்களுக்குத் தெரியாதிருக்க, அங்கே போகும்வழி எப்படித் தெரியும் ?" என்றார்.
6 இயேசு அவரிடம் கூறியதாவது: "நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை.
7 நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தவர்களாய் இருக்கிறீர்கள், அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்."
8 "இதைக் கேட்ட பிலிப்பு, "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்" என்றார்.
9 இயேசு அவரை நோக்கிக் கூறினார்: "பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும், நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா ? "என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான். பின், ' தந்தையை எங்களுக்குக் காட்டும் ' என்று நீ கேட்பதெப்படி ?
10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா ? நான் உங்களுக்குக் கூறும் சொற்களை நானாகவே கூறுவதில்லை: என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் என் தந்தையே.
11 நான் சொல்வதை நம்புங்கள்: நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்பாவிடில், செயல்களின் பொருட்டேனும் நம்புங்கள்.
12 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: என்னில் விசுவாசங்கொள்பவன் நான் செய்யும் செயல்களையும் செய்வான்; ஏன், அவற்றினும் பெரியனவும் செய்வான்; ஏனெனில், நான் தந்தையிடம் செல்லுகிறேன்.
13 நீங்கள் என் பெயரால் கேட்பதெல்லாம் செய்வேன்; இதனால் தந்தை மகனில் மகிமை பெறுவார்.
14 என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்.
15 உங்களுக்கு என்மீது அன்பிருந்தால், என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.
16 நானும் தந்தையைக் கேட்பேன்: தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்; அவர் உங்களோடு என்றும் இருப்பார்.
17 அவர் உண்மையின் ஆவியானவர்; உலகம் அவரைப் பெற்றுக்கொள்ள முடியாது; ஏனெனில், உலகம் அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்களோ அவரை அறிவீர்கள்; ஏனெனில், அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்.
18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்; உங்களிடம் திரும்பி வருவேன்.
19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள்; ஏனெனில், நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள்.
20 நான் என் தந்தையினுள்ளும், நீங்கள் என்னுள்ளும், நான் உங்களுள்ளும் இருப்பதை நீங்கள் அந்நாளில் அறிந்துகொள்வீர்கள்.
21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவனே எனக்கு அன்புகாட்டுகிறவன்; எனக்கு அன்புகாட்டுகிறவன் மேல் என் தந்தையும் அன்புகூர்வார். நானும் அவன்மேல் அன்புகூர்ந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்."
22 யூதாஸ்- இஸ்காரியோத்து யூதாஸ் அல்லன்- அவரை நோக்கி: "ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாது எங்களுக்கு மட்டும் வெளிப்படுத்துவதாகச் சொல்லுகிறீரே, ஏன் அப்படி?" என,
23 இயேசு மறுமொழியாகக் கூறினார்: "ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான்; என் தந்தையும் அவன்மேல் அன்புகூர்வார்; நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம்.
24 எனக்கு அன்பு செய்யாதவன் என் வார்த்தைகளைக் கேட்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தையோ என்னுடையதன்று: என்னை அனுப்பிய தந்தையுடையதே.
25 இதெல்லாம் நான் உங்களோடிருக்கும் போதே உங்களுக்குச் சொன்னேன்.
26 தந்தை என் பெயரால் அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியான துணையாளரும் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துவார்; நான் உங்களுக்குக் கூறியதெல்லாம் நினைவூட்டுவார்.
27 சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன்; நான் உங்களுக்கு அளிக்கும் சமாதனமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று. உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம்.
28 நான் போகிறேன், போய் உங்களிடம் திரும்பிவருவேன் என்று நான் சொன்னதை கேட்டீர்கள்; உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால், நான் தந்தையிடம் போவதுபற்றி மகிழ்வீர்கள். ஏனெனில், தந்தை என்னிலும் மேலானவர்.
29 இவை நிகழும்போது, நீங்கள் விசுவசிக்கும்பொருட்டு, இவை நிகழ்வதற்கு முன்னதாக, இப்பொழுதே உங்களுக்குச் சொன்னேன்.
30 நான் உங்களோடு பேச இனி அதிக நேரமில்லை; ஏனெனில், இவ்வுலகின் தலைவன் வருகிறான். அவனுக்கோ என்மேல் அதிகாரமில்லை.
31 ஆனால், நான் தந்தைக்கு அன்புசெய்கிறேன் என்பதையும், அவர் எனக்குக் கட்டளையிட்டபடியே நடக்கிறேன் என்பதையும் உலகம் தெரிந்துகொள்ளவேண்டும். எழுந்திருங்கள், இங்கிருந்து போவோம்.

John 14:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×