1
|
பாஸ்காவுக்கு ஆறுநாள் இருக்கும்போது, இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கேதான் அவர் லாசரை இறந்தோரினின்று உயிர்ப்பித்தது. |
2
|
அங்கு அவருக்கு விருந்து அளித்தனர். மார்த்தாள் பணிவிடை செய்தாள். அவரோடு பந்தியமர்ந்தவர்களுள் லாசரும் ஒருவன். |
3
|
மரியாள் நரந்தம் என்னும் விலையுயர்ந்த நல்ல பரிமளத்தைலம் ஓர் இராத்தல் கொண்டுவந்து, இயேசுவின் பாதங்களில் பூசி அவற்றைக் கூந்தலால் துடைத்தாள். தைலத்தின் நறுமணம் வீடு முழுவதும் பரவியது. |
4
|
அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவனும், அவருடைய சீடருள் ஒருவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து, |
5
|
"ஏன் இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிக்காசுக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாது ?" என்றான். |
6
|
ஏழைகள்மீது கவலையிருந்ததாலன்று அவன் இப்படிக் கூறியது; திருடனாயிருந்ததால்தான். தன்னிடம் ஒப்படைத்திருந்த பொதுப்பணத்திலிருந்து காசை அவன் எடுத்துக்கொள்வதுண்டு. |
7
|
இயேசுவோ, "விட்டுவிடு: எனது அடக்க நாளைக் குறிக்கும்படி இதைச் செய்யட்டும். |
8
|
ஏனெனில், ஏழைகள் உங்களோடு என்றும் உள்ளனர்; நானோ உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" என்றார். |
9
|
அவர் அங்கிருப்பதைக் கேள்வியுற்ற யூதர் பெருங்கூட்டமாக வந்தனர். இயேசுவுக்காக மட்டும் வரவில்லை; இறந்தவர்களிடமிருந்து இயேசு உயிர்ப்பித்த லாசரைக் காண்பதற்காகவும் வந்தனர். |
10
|
அவன் பொருட்டு யூதருள் பலர் இயேசுவிடம் போய் அவரில் விசுவாசங்கொண்டனர். |
11
|
ஆதலால், லாசரையும் கொன்றுபோடத் தலைமைக் குருக்கள் முடிவு செய்தனர். |
12
|
மறுநாள் திருவிழாவுக்கு வந்திருந்த பெருங்கூட்டம் இயேசு யெருசலேமுக்கு வருகிறார் எனக் கேள்வியுற்று, |
13
|
கையில் குருத்தோலைகளோடு அவரை எதிர்கொண்டுபோய், ' ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! இஸ்ராயேலின் அரசர் வாழி! ' என்று ஆர்ப்பரித்து வரவேற்றனர். |
14
|
வழியிலிருந்த ஒரு கழுதைக்குட்டியின்மேல் இயேசு அமர்ந்தார். |
15
|
இதைக் குறித்தே, ' சீயோன் மகளே, அஞ்சவேண்டாம். இதோ! உன் அரசர், கழுதைக்குட்டியின் மேல் ஏறி வருகிறார் ' என்று எழுதியுள்ளது. |
16
|
முதலில் அவருடைய சீடர் இதையெல்லாம் உணரவில்லை. இயேசு மகிமை அடைந்தபொழுது, அவரைப்பற்றி இங்ஙனம் எழுதியிருந்ததென்றும், எழுதியபடியே அவருக்கு நடந்ததென்றும் நினைவுகூர்ந்தனர். |
17
|
கல்லறையிலிருந்த லாசரை இயேசு அழைத்து இறந்தோரினின்று உயிர்ப்பித்தபொழுது அவரோடிருந்த மக்கள், அந்தப் புதுமையைக் குறித்துச் சாட்சியம் சொல்லி வந்தனர். |
18
|
அவர் செய்த இவ்வருங்குறியைப்பற்றிக் கேள்வியுற்றதால்தான் மக்கள் கூட்டமாக அவரை எதிர்கொண்டு வந்தார்கள். |
19
|
இதைக் கண்ட பரிசேயர், "பார்த்தீர்களா! உங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதோ! உலகமே அவன்பின் ஓடுகிறது! " என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர். |
20
|
வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தவர்களுள் கிரேக்கர் சிலர் இருந்தனர். |
21
|
கலிலேயா நாட்டு பெத்சாயிதா ஊரினராகிய பிலிப்புவினிடம் இவர்கள் வந்து, "ஐயா! இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று கேட்டுக்கொண்டார்கள். |
22
|
பிலிப்பு வந்து பெலவேந்திரரிடம் சொல்ல, பெலவேந்திரரும் பிலிப்புவும் இயேசுவிடம் சொன்னார்கள். |
23
|
அதற்கு இயேசு, "மனுமகன் மகிமைபெறும் நேரம் வந்துவிட்டது. |
24
|
உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய, அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான், மிகுந்த பலனளிக்கும். |
25
|
தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்துவிடுகிறான்; இவ்வுலகில் தன் உயிரை வெறுப்பவனோ அதை முடிவில்லா வாழ்வுக்குக் காப்பாற்றிக்கொள்கிறான். |
26
|
எனக்குப் பணிவிடை செய்பவன் என்னைப் பின்செல்லட்டும்; எங்கே நான் இருக்கிறேனோ, அங்கே என் பணியாளனும் இருப்பான். எவனாவது எனக்குப் பணிவிடைசெய்தால், அவனுக்கு என் தந்தை மதிப்பளிப்பார். |
27
|
இப்பொழுது எனது ஆன்மா கலக்கமடைந்துள்ளது. நான் என்ன சொல்வேன் ? ' தந்தாய், இந்நேரத்தின் சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றும் என்பேனோ ? ' இல்லை, இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்தேன். |
28
|
தந்தாய், உமது பெயரை மகிமைப்படுத்தும்!" அப்பொழுது வானத்திலிருந்து, "மகிமைப்படுத்தினேன், மீண்டும் மகிமைப்படுத்துவேன்" என்ற குரலொலி வந்தது. |
29
|
சூழ்ந்துநின்ற மக்கள் அதைக் கேட்டு, இடி இடித்தது என்றனர். வேறு சிலரோ, "வானதூதர் ஒருவர் அவரோடு பேசினார்" என்றனர். |
30
|
ஆனால் இயேசு கூறினார்: "இக்குரலொலி உங்கள்பொருட்டு உண்டானதேயன்றி, என்பொருட்டன்று. |
31
|
"இப்பொழுதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இப்பொழுதே இவ்வுலகின் தலைவன் புறம்பே தள்ளப்படுவான். |
32
|
நானோ உலகினின்று உயர்த்தப்பெற்றபின் அனைவரையும் என்பால் ஈத்துக்கொள்வேன்." |
33
|
தாம் இறக்கப்போவது எவ்வாறு என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார். |
34
|
அதற்கு மக்கள், "மெசியா என்றுமே நிலைத்திருப்பார் எனத் திருச்சட்டநூலிலிருந்து நாங்கள் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க, ' மனுமகன் உயர்த்தப்பட வேண்டும் ' என்று நீர் சொல்லுவதெங்ஙனம் ? யார் அந்த மனுமகன்?" என்று கேட்டார்கள். |
35
|
இயேசு அவர்களை நோக்கிக் கூறினார்: "இன்னும் சற்று நேரமே ஒளி உங்களோடு இருக்கும். இருளில் நீங்கள் அகப்படாதபடி ஒளி இருக்கும்பொழுதே நடந்துசெல்லுங்கள். இருளில் நடப்பவனுக்குத் தான் போவது எங்கே என்பது தெரியாது. |
36
|
ஒளி உங்களோடு இருக்கும்பொழுதே, ஒளியின்மீது விசுவாசங்கொள்ளுங்கள்; அப்போது ஒளியின் மக்களாவீர்கள்." இதைச் சொன்னபின், இயேசு அவர்களை விட்டுப் போய் மறைந்துகொண்டார். |
37
|
அவர்கள் கண்ணுக்கு முன்பாக இத்தனை அருங்குறிகளை இயேசு செய்திருந்தும் அவர்கள் அவரில் விசுவாசங்கொள்ளவில்லை. |
38
|
இவ்வாறு, "ஆண்டவரே நாங்கள் அறிவித்ததைக் கேட்டு எவன் விசுவசித்தான்? ஆண்டவருடைய கைவண்மை யாருக்கு வெளிப்பட்டது ?" என்று இறைவாக்கினர் இசையாஸ் மொழிந்தது நிறைவேறவேண்டியிருந்தது. |
39
|
ஆகையால், அவர்களால் விசுவசிக்க முடியவில்லை. |
40
|
மேலும், "அவர்கள் கண்ணால் காணாமலும் உள்ளத்தால் உணராமலும் மனந்திரும்பாமலும் இருக்கவும், நானும் அவர்களைக் குணமாக்காதிருக்கவும், அவர்களுடைய கண்களைக் குருடாக்கி உள்ளத்தை மழுங்கச்செய்தார்" என்றும் இசையாஸ் கூறியுள்ளார் அன்றோ ? |
41
|
அவருடைய மகிமையைக் கண்டபொழுது இசையாஸ் இதைக் கூறினார்; இப்படிச் சொன்னது அவரைப்பற்றியே. |
42
|
எனினும், தலைவர்களுள்கூடப் பலர் அவரில் விசுவாசம் கொண்டனர். ஆனால் செபக்கூடத்துக்குப் புறம்பாகாதவாறு அதை வெளிப்படையாகக் காட்டவில்லை. ஏனெனில், பரிசேயர்களுக்கு அஞ்சினர். |
43
|
கடவுள் தரும் மகிமையைவிட மனிதரால் கிடைக்கும் மகிமையையே விரும்பினர். |
44
|
இயேசு, உரக்கக் கூவிச் சொன்னது: "என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான். |
45
|
என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான். |
46
|
என்னில் விசுவாசங்கொள்பவன் எவனும் இருளிலேயே இருந்துவிடாதபடி, நான் ஒளியாக இவ்வுலகிற்கு வந்தேன். |
47
|
நான் சொல்வதை ஒருவன் கேட்டபின் அதன்படி நடவாவிடில், அவனுக்குத் தீர்ப்பிடுவது நானல்லேன்; ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன். |
48
|
என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவனுக்குத் தீர்ப்பிடும் ஒன்று உண்டு: நான் கூறிய வார்த்தையே அவனுக்கு இறுதி நாளில் தீர்ப்பிடும். |
49
|
ஏனெனில், நானாகவே பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன கூறவேண்டும், என்ன பேசவேண்டும் என்று எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். |
50
|
அவருடைய கட்டளையோ முடிவில்லா வாழ்வு என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் சொல்வதெல்லாம் என் தந்தை எனக்குக் கூறியவாறே சொல்லுகிறேன்." |
John 12:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...