Indian Language Bible Word Collections
Job 9:17
Job Chapters
Job 9 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 9 Verses
1
|
அதற்கு யோபு கூறிய மறுமொழி இதுவே: |
2
|
நீ சொல்வது உண்மை தான், எனக்கும் தெரியும்; ஆனால் கடவுள் முன்னிலையில் மனிதன் எப்படி நீதிமானாகத் தோன்றக் கூடும்? |
3
|
அவரோடு வழக்காட எவனாவது துணிவானாயின், ஆயிரத்தில் ஒன்றுக்குக் கூட அவனால் பதில் சொல்ல முடியாதே! |
4
|
அவரோ உள்ளத்தில் ஞானமிக்கவர், ஆற்றலில் வல்லவர்; அவரை எதிர்த்து நின்று வெற்றி கண்டவன் யார்?- அவர் மலைகளைப் பெயர்க்கிறார், |
5
|
அவை அதை அறியமாட்டா; சினமுற்ற போது அவர் அவற்றை விழத்தாட்டுகிறார். |
6
|
மண்ணுலகை அதனிடத்தினின்று அசைக்கிறார், அதன் தூண்கள் அதிர்கின்றன. |
7
|
அவர் ஆணையிட்டால் கதிரவன் எழமாட்டான், விண்மீன்களையும் அவரே முத்திரையிடுகிறார். |
8
|
அவர் ஒருவரே வான்வெளியை விரித்தார், கடலின் பேரலைகளைக் காலால் மிதித்தார், |
9
|
சப்தரிஷிகணம், மிருகசீரிடம், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை மண்டல விண்மீன் குழுக்களையும் அவரே படைத்தார். |
10
|
ஆராய்ச்சியறிவுக்கு எட்டாத அரிய செயல்களையும் கணக்கற்ற விந்தைகளையும் அவர் செய்கிறார். |
11
|
அவர் என்னைக் கடந்து போனாலும் நான் காண்கிறதில்லை, அவர் அசைந்து போவதுகூட எனக்குப் புலப்படுகிறதில்லை. |
12
|
அவர் ஒன்றைப் பறித்துச் சென்றால், அவரை மறிப்பவன் யார்? 'என்ன செய்கிறீர்?' என அவரைக் கேட்பவன் யார்? |
13
|
கடவுள் தம் சினம் ஆறமாட்டார், ராகாபின் துணைவர்கள் அவர் காலடியில் கிடக்கின்றனர். |
14
|
அப்படியிருக்க, அவருக்கு நான் மறுமொழி கூறுவதெப்படி? அவரோடு வழக்காட எவ்வாறு சொற்களைத் தேர்ந்தெடுப்பேன்? |
15
|
நான் குற்றமற்றவனே என்றாலும், வழக்காடுவதால் பயனென்ன? என் நீதிபதியையே நான் கெஞ்சி மன்றாடுவேன். |
16
|
நான் அழைக்கும் போது மறுமொழி கூற அவர் வந்தாலும், என் கூக்குரலைக் கேட்பாரென நான் நம்புவதெப்படி? |
17
|
ஏனெனில் கடும் புயலால் என்னை நசுக்குகிறார், காரணமின்றி என் காயங்களைப் பலுகச்செய்கிறார். |
18
|
மூச்சு விடவும் என்னை விடாதபடி மனக் கசப்பினால் என்னை நிரப்புகிறார். |
19
|
வலிமையைப் பயன்படுத்தலாமா? அவரோ ஒப்பற்ற வலிமையுள்ளவர். நீதி மன்றத்திற்குப் போகலாமா? அவருக்கு அழைப்பாணை விடுப்பவன் யார்? |
20
|
நான் குற்றமற்றவன் என எண்பிக்க முயன்றால், என் வாயே என் மேல் குற்றம் சுமத்துகிறது; நான் மாசற்றவன் எனக் காட்டினால் எதிர்மாறானதை அவர் எண்பிக்கிறார். |
21
|
ஆனால் நான் மாசற்றவனா? எனக்கே தெரியாதே! வாழ்க்கையை நான் வெறுக்கிறேன். |
22
|
எல்லாம் ஒன்றுதான்; ஆதலால் நான் சொல்கிறேன். மாசற்றவனையும் கொடியவனையும் அவர் ஒருங்கே அழிக்கிறார். |
23
|
திடீரெனப் பேரிடர் சாகடித்தாலும் அவர் மாசற்றவர்களின் துன்பத்தைக் கண்டு நகைக்கிறாரே! |
24
|
மாநிலம் கொடியவன் கையில் விடப்பட்டுள்ளது, அதன் நீதிபதிகளின் முகங்களை அவன் மூடிவிடுகிறான், அவனில்லை என்றால் வேறெவன் அதைச் செய்யக்கூடும்? |
25
|
அஞ்சற்காரனிலும் விரைவாய் என் நாட்கள் ஓடுகின்றன, அவை பறக்கின்றன, நன்மையைக் காண்பதில்லை. |
26
|
நாணற் படகு போல் அவை விரைந்தோடுகின்றன, இரை மேல் பாயும் கழுகு போல் பறந்து போகின்றன. |
27
|
என் முறையீட்டை மறந்து விடுவேன், வருத்தம் நிறைந்த என் முகத்தை மாற்றிக் கொண்டு முகமலர்ச்சியோடு இருப்பேன்' என்று நான் சொல்வேனாகில், |
28
|
என் துன்பங்களையெல்லாம் கண்டு அஞ்சுகிறேன்; ஏனெனில் என்னை மாசற்றவன் என்று நீர் ஏற்றுக் கொள்ள மாட்டீர் என அறிவேன். |
29
|
எனக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைக்கப் போகிறது, நான் எதற்கு வீணாக வாதாட வேண்டும்? |
30
|
வெண்பனியால் என்னைக் கழுவினாலும், கடும் காரத்தில் என் கைகளைக் கழுவித் தூய்மைப்படுத்தினாலும், |
31
|
நீர் என்னைச் சேற்றுப் பள்ளத்தில் அமிழ்த்துவீர், என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும். |
32
|
அவருக்கு நான் பதில் சொல்லவும், இருவரும் சேர்ந்து வழக்காடவும், அவர் என்னைப் போல் ஒரு மனிதன் அல்லரே! |
33
|
எங்களிருவர் மேலும் தன் கைகளை வைத்து, இடை நின்று வழக்குத் தீர்ப்பவன் எவனுமில்லையே! |
34
|
தம் கோலால் என்னை அடிக்காமல் அவர் நிறுத்தட்டும், அவரைப் பற்றிய அச்சம் எனக்கு நடுக்கம் தராதிருக்கட்டும். |
35
|
அப்போது நான் அவருக்கு அஞ்சாமல் பேசுவேன், ஏனெனில் அஞ்சுவதற்கு என்னில் ஒன்றும் இல்லை. |