Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 27 Verses

1 தமது பேருரையை யோபு தொடர்ந்து ஆற்றினார்.
2 அவர் சொன்னதாவது: "எனக்கு நீதிவழங்க மறுத்த உயிருள்ள கடவுள் மேல் ஆணை! என் உள்ளத்தைக் கசப்பாக்கிய எல்லாம் வல்லவர் மேல் ஆணை!
3 எனக்குள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வரை, என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்குமளவும்,
4 என் உதடுகள் பொய்யுரை பேசமாட்டா, என் நாக்கு வஞ்சகத்தை உரைக்காது.
5 நீர் சொல்வது சரியென்று நான் சொல்லவே மாட்டேன், சாகும் வரை என் நேர்மையை நான் விடவே விடேன்.
6 என் நேர்மையைப் பற்றிக் கொள்வேன், விடவே மாட்டேன்; என் வாழ்நாளில் நான் தவறியதாக என் மனம் உறுத்தவே இல்லை.
7 என் பகைவன் பொல்லாதவனாய் எண்ணப்படட்டும், எனக்கெதிராய் எழுபவன் நேர்மையற்றவனாய்க் கருதப்படட்டும்.
8 ஏனெனில் இறைப்பற்றில்லாதவனைக் கடவுள் அழித்து, அவனுடைய உயிரை வாங்கும் போது, அவனுக்கு இருக்கும் நம்பிக்கை தான் என்ன?
9 அவனுக்குத் துன்பம் வரும் போது, அவன் கூக்குரலைக் கடவுள் கேட்பாரா?
10 எல்லாம் வல்லவரின் அவன் அகமகிழ்வானோ? எக்காலத்திலும் கடவுளைக் கூவியழைப்பானோ?
11 கடவுளின் கைவன்மை பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன், எல்லாம் வல்லவரின் எண்ணங்களை மறைக்க மாட்டேன்.
12 இதோ, இவற்றையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்; பின்னர் ஏன் வீணாக வாதாடுகிறீர்கள்?
13 பொல்லாதவனுக்குக் கடவுள் விதிக்கும் பங்கு இதுவே, கொடியவர்களுக்கு எல்லாம் வல்லவர் தரப்போகும் உரிமைச் சொத்து இதுவே:
14 அவன் மக்கள் பெருகிப் பலுகுவது வாளுக்கு இரையாகும்படியே; அவனுடைய சந்ததிக்குப் போதிய உணவு கிடைக்காது.
15 அவர்களில் எஞ்சியிருப்பவர்கள் கொள்ளை நோயால் மடிவர்; அவர்களுடைய கைம்பெண்கள் புலம்பி அழமாட்டர்கள்.
16 தூசியைப் போல் வெள்ளியை அவன் சேர்த்து வைத்தாலும், களிமண்ணைக் குவிப்பது போல், உடைகளை அடுக்கி வைத்தாலும்,
17 அவன் அடுக்கி வைத்தவை அவனல்ல, நீதிமான் ஒருவன் உடுத்திக் கொள்வான், வெள்ளியையோ மாசற்றவர்கள் பிரித்துக்கொள்வர்.
18 அவன் கட்டுகிற வீடு சிலந்திக்கூடு போன்றது, காவல் காரன் போடும் குடிசைக்குச் சமமானது.
19 பணக்காரனாக அவன் உறங்கப் போகிறான்; ஆனால் இனி முடியாது; அவன் கண்ணைத் திறக்கும் போது, செல்வம் போயிற்றெனக் காண்பான்.
20 திகில்கள் வெள்ளம் போல் அவனை விரட்டிப் பிடிக்கின்றன, இரவில் சுழற்காற்று அவனை வாரிப் போகிறது.
21 கீழைக்காற்று அவனைத் தூக்கிச் செல்கிறது, அவனைக் காணோம்; அவனிடத்திலிருந்தே அவனை அடித்துச் செல்லுகிறது.
22 இரக்கமின்றிக் கடவுள் அவன் மேல் அம்பு எய்கிறார், தலைதெறிக்க அவன் அவர் கையினின்று தப்பியோடுகிறான்.
23 கை கொட்டி அவர் அவனை ஏளனம் செய்வார், தம் இடத்தினின்றும் அவனைப் பார்த்துச் சீழ்க்கையடிப்பார்.
×

Alert

×