Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 38 Verses

1 அப்படியிருக்க மாத்தான் மகன் சாப்பாத்தியாசும், பாசூர் மகன் கெதேலியாசும், செலேமியாஸ் மகன் யூக்காலும், மெல்கியாஸ் மகன் பாசூரும் எரெமியாஸ் மக்கள் எல்லாருக்கும் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகளைக் கேள்வியுற்றார்கள்:
2 ஆண்டவர் கூறுகிறார்: இப் பட்டணத்திலேயே இருப்பவன் வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான்; ஆனால் (பட்டணத்தை விட்டு வெளியேறிக்) கல்தேயரிடம் ஓடிவிடுபவன் உயிர் பிழைப்பான்; அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப் பொருளாய் இருக்கும்; அவன் உயிர் வாழ்வான்.
3 ஆண்டவர் கூறுகிறார்: இப்பட்டணம் பபிலோனிய அரசனுடைய படையின் கையில் விடப்படும் என்பது திண்ணம்; அவர்கள் அதைப் பிடிப்பார்கள்."
4 அப்போது தலைவர்கள் அரசனை நோக்கி, "இம்மனிதனைக் கொன்று போடுங்கள்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இப்பட்டணத்திலிருக்கிற போர் வீரர்களின் ஊக்கத்தையும் மக்கள் எல்லோருடைய ஊக்கத்தையும் வேண்டுமென்றே தளரச்செய்கிறான்; ஆதலால் இவன் மக்களுக்குத் தீமையைத் தேடுகிறானேயன்றி நன்மையைத் தேடுவதில்லை" என்றார்கள்.
5 அதற்குச் செதேசியாஸ் அரசன், 'இதோ, அவனை உங்களுக்கே கையளிக்கிறேன்; நீங்கள் கேட்கும் எதையும் அரசன் மறுக்க இயலாது" என்றான்.
6 அவர்களோ எரெமியாசைக் கொண்டு போய் அமெலேக்கின் மகனான மெல்கியாசுடைய சிறைக்கூடத்து முற்றத்திலிருந்த பாழ்கிணற்றில் கயிற்றால் இறக்கி விட்டார்கள்; அந்தக் கிணற்றில் நீரினின்று வெறும் சேறு மட்டுமே இருந்தது; இவ்வாறு எரெமியாஸ் அச் சேற்றில் இறங்கினார்.
7 அரசனுடைய மாளிகையிலிருந்த அப்தேமேலேக்கு என்றும் எத்தியோப்பிய அண்ணகன் ஒருவன் எரெமியாசைக் குழியில் தள்ளினார்கள் என்று கேள்விப்பட்டான்; அப்போது அரசன் பென்யமீன் வாயிலில் கொலு வீற்றிருந்தான்;
8 அப்தேமேலேக்கு அரசன் மாளிகையை விட்டுப் புறப்பட்டு அரசனிடம் சென்று,
9 என் ஆண்டவனே, அரசே, இறைவாக்கினரான எரெமியாசுக்கு அந்த மனிதர்கள் செய்ததெல்லாம் அநியாயம்; பட்டணத்தில் உணவு நெருக்கடி இருக்கும் இக்காலத்தில் அவரைக் குழியில் தள்ளிப் போட்டால், அவர் பட்டினியால் செத்துப் போவாரே!" என்றான்.
10 அதைக்கேட்ட அரசன் எத்தியோப்பியனான அப்தேமேலேக்கை நோக்கி, "உன்னோடு இங்கிருந்து முப்பது பேரைக் கூட்டிக் கொண்டு போய், இறைவாக்கினராகிய எரெமியாஸ் சாவதற்குள் அவரைக் குழியிலிருந்து தூக்கி விடு" என்று கட்டளையிட்டான்.
11 அவ்வாறே அப்தேமேலேக்கு அந்த மனிதர்களைத் தன்னோடு கூட்டிக் கொண்டு, அரசனுடைய மாளிகையில் துணியறைக்குப் போய்க் கிழிந்த துணிகளையும், பழங்கந்தல்களையும் எடுத்துக் கயிற்றில் கட்டிக் குழியில் எரெமியாசுக்கு விட்டான்:
12 விட்டு எத்தியோப்பியனான அப்தேமேலேக்கு எரெமியாசை நோக்கி, "இந்தக் கிழிந்த துணிகளையும், நைந்த பழங்கந்தல்களையும் உமது அக்குளில் போட்டுக் கயிற்றிலும் சுற்றிக் கொள்ளும்" என்றான்; எரெமியாஸ் அவ்வாறே செய்தார்.
13 அப்போது அவர்கள் எரெமியாசை கயிற்றின் வழியாய் இழுத்துக் குழியை விட்டு மேலே தூக்கினார்கள்; அதன் பின் எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்தில் இருந்தார்.
14 செதேசியாஸ் அரசன் ஆளனுப்பி எரெமியாஸ் இறைவாக்கினரை வரவழைத்து, ஆண்டவருடைய திருக்கோயிலின் மூன்றாம் வாயிலில் அவரைச் சந்தித்து, அவரை நோக்கி, "நான் உம்மை ஒன்று கேட்கிறேன்; நீர் எதையும் என்னிடம் மறைக்கக் கூடாது" என்றான்.
15 எரெமியாஸ் செதேசியாசை நோக்கி, "நான் உமக்கு உண்மையைச் சொன்னால், நீர் என்னை கொல்ல மாட்டீரோ? நான் உமக்கு ஆலோசனை கொடுத்தாலும் நீர் கேட்க மாட்டீரே? என்றார்.
16 அப்போது செதேசியாஸ் இரகசியமாய் எரெமியாசிடம் ஆணையிட்டு, "உமக்கும் எனக்கும் இவ்வுயிரைக் கொடுத்த ஆண்டவர் பேரில் ஆணை! நான் உம்மைக் கொல்ல மாட்டேன்; உம் உயிரைப் பறிக்கத் தேடும் இந்த மனிதர்களுக்கு உம்மைக் கையளிக்கவும் மாட்டேன்" என்று வாக்குக் கொடுத்தான்.
17 அப்போது எரெமியாஸ் செதேசியாசைப் பார்த்து, "இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீர் வெளியேறிப் பபிலோனிய அரசனுடைய தலைவர்களிடம் சரணடைந்தால், உம் உயிர் தப்பும்; இப்பட்டணம் நெருப்புக்கு இரையாகாது; உம் வீட்டாரும் நீரும் உயிர் பிழைப்பீர்கள்.
18 நீர் பபிலோனிய அரசனின் தலைவர்களிடம் சரணடையாவிடில், இப்பட்டணம் கல்தேயருக்குக் கையளிக்கப்படும்; அவர்கள் அதனை நெருப்பினால் எரிப்பார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பமாட்டீர்" என்றார்.
19 அதற்குச் செதேசியாஸ் எரெமியாசை நோக்கி, "கல்தேயரிடம் ஓடிப்போன யூதர்களைக் குறித்து எனக்கு அச்சமாயிருக்கிறது; ஒருகால் கல்தேயர் என்னை அந்த யூதர்களிடம் கையளித்தால், அவர்கள் என்னை ஏளனம் செய்வார்களோ என்னவோ!" என்றான்.
20 அதற்கு எரெமியாஸ், "இல்லை; அவர்களிடம் உம்மைக் கையளிக்க மாட்டார்கள்; நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்: நான் உமக்கு அறிவித்த ஆண்டவருடைய வாக்கைக் கேளும்; நீரும் நலமாயிருப்பீர்; உம் உயிரும் பிழைத்திருக்கும்.
21 ஆனால் நீர் வெளியேறிச் சரணடைய மறுப்பீராகில், ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே:
22 இதோ யூதாவின் அரசனுடைய மாளிகையில் எஞ்சியிருந்த பெண்கள் எல்லாரும் பபிலோனிய அரசனின் தலைவர்களிடம் அழைத்துச் செல்லப்படுவார்கள்; அப்போது அவர்கள், ' நீர் நம்பியிருந்த நண்பர்கள் உம்மை வஞ்சித்தார்கள்; உம்மை மேற்கொண்டு விட்டார்கள்; உம் கால்கள் சேற்றில் அமிழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்கள் உம்மை விட்டு அகன்று போயினர்' என்று சொல்லிக் கொண்டு போவார்கள்.
23 உம்முடைய மனைவியர் அனைவரும் உம் மக்களும் கல்தேயரிடம் கொண்டு போகப்படுவார்கள்; நீரும் அவர்களுடைய கைகளுக்குத் தப்பமாட்டீர்; பபிலோனிய அரசன் கையில் பிடிபடுவீர்; அவன் இந்நகரத்தைத் தீக்கிரையாக்குவான்" என்றார்.
24 செதேசியாஸ் எரெமியாசை நோக்கி, "இவ்வார்த்தைகளை யாருக்கும் சொல்லாதீர்; அப்போது உம்மைக் கொல்லமாட்டேன்;
25 ஆனால் தலைவர்கள் நான் உம்மோடு உரையாடியதாகக் கேள்விப்பட்டு, உம்மிடம் வந்து, 'அரசனோடு நீ என்ன பேசினாய்? மறைக்காமல் சொல், நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம்; அரசன் உன்னிடம் என்ன சொன்னான்?' என்றுகேட்டால்,
26 நீ அவர்களுக்கு விடையாக, நான் அரசனை நோக்கி, ' யோனத்தான் வீட்டில் என்னைச் சிறை வைக்க வேண்டாம்; நான் அங்கேயே செத்துப் போவேன் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டேன்' என்று சொல்லிவிடும்" என யோசனை கொடுத்தான்.
27 அவ்வாறே, தலைவர்கள் அனைவரும் எரெமியாசிடம் வந்து, அவரை வினவினார்கள்; அவர் அரசன் சொல்லிக் கொடுத்தபடியே எல்லாவற்றுக்கும் விடைகொடுத்தார்; அவர்கள் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார்கள். ஏனெனில் அவர் அரசனுடன் பேசியதை எவரும் மறைந்திருந்து கேட்கவில்லை.
28 யெருசலேம் பிடிபட்ட நாள் வரையில் எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்திலேயே இருந்தார்.
×

Alert

×