தீர் நகரத்தைப் பற்றிய இறைவாக்கு: தர்ஸீசின் மரக் கலங்களே, கதறியழுங்கள்; ஏனெனில் உங்கள் துறைமுகம் அழிக்கப்பட்டு விட்டது; சேத்திம் நாட்டினின்று அவை வரும் போது, இந்தச் செய்தி எட்டியது.
சீதோனே, நீ வெட்கப்படு; "நான் பிரசவ வேதனை அடையவுமில்லை, பிள்ளை பெறவுமில்லை; இளைஞர்களை உண்பிக்கவுமில்லை, கன்னிப் பெண்களை வளர்க்கவுமில்லை" என்று கடல் சொல்லுகிறது, கடற்கரைக் கோட்டை கூறுகிறது.
மணிமுடிகளை மன்னர்களுக்கு வழங்கி வந்ததும், இளவரசர் போன்ற வணிகர்களைக் கொண்டிருந்ததும், உலகத்தில் மதிப்பு வாய்ந்த வியாபாரிகளைப் பெற்றிருந்ததுமான தீர் நகருக்கெதிராக இதைத் திட்டமிட்டவர் யார்?
கடல் மீது தம் கையை அவர் நீட்டியுள்ளார், அரசுகளை அவர் ஆட்டி வைத்திருக்கிறார், கானானின் பலமான கோட்டைகளைப் பாழ்படுத்துமாறு அதற்கெதிராக ஆண்டவர் கட்டளை தந்தார்.
ஒடுக்கப்பட்ட கன்னிப் பெண்னே, சீதோன் மகளே, இனிமேல் நீ அக்களிப்பு அடையமாட்டாய்; எழுந்து, கடல் கடந்து செத்தீமுக்குப் போ; அங்கேயும் உனக்கு அமைதி இராது" என்று அவர் சொல்லியிருக்கிறார்.
இதோ, கல்தேயர் நாட்டைப் பார்; இப்பொழுது அது ஒரு நாடாகவே இல்லை, அசீரியர்கள் அதைக் காட்டு மிருகங்களுக்கு விட்டு விட்டனர், முற்றுகையிட அதைச் சுற்றிக் கொத்தளங்கள் எழுந்தன, அரண்மனைகள் இடித்துத் தகர்க்கப்பட்டன, நாடும் பாழாகிக் கிடக்கின்றது.
அப்போது, எழுபது ஆண்டுகளுக்கு தீர் நகரம் மறக்கப்பட்டு விடும்; ஆனால் எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், வேறொரு அரசனுடைய நாட்களில், தீர் நகருக்கு விலைமகளின் கவிதையில் சொல்லியுள்ளபடி நிறைவேறும்:
எழுபது ஆண்டுகளுக்குப் பின் ஆண்டவர் தீர் பட்டணத்தைச் சந்திப்பார்; அவள் திரும்பவும் தன் பழைய தொழிலிலேயே ஈடுபடுவாள்; பூமியின் மேலுள்ள உலகத்து அரசுகள் எல்லாவற்றுடனும் வேசித்தனம் செய்வாள்.
ஆனால் அவளுடைய வாணிகப் பொருட்களும் வருமானமும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்படும்; அவற்றைச் சேர்த்து வைக்க மாட்டார்கள்; அவை குவிந்து கிடக்க மாட்டா; ஆனால் அவளுடைய வாணிகப் பொருட்களைக் கொண்டு ஆண்டவர் திருமுன் வாழ்பவர்க்கு ஏராளமான உணவும் நல்ல உடையும் வழங்கப்படும்.