Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Hosea Chapters

Hosea 2 Verses

1 எம் மக்கள்" என்று உன் சகோதரர்க்குச் சொல், "அன்பு பெற்றவள்" என்று உன் சகோதரிக்குச் சொல்.
2 வழக்குத் தொடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்- அவள் எமக்கு மனைவியுமல்லள், நாம் அவளுக்கு கணவனுமல்லோம்- அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும், விபசாரக் குறிகளைத் தன் கொங்கைகளினின்றும், அகற்றட்டும்.
3 இல்லையேல் அவளை நிருவாணமாய்த் துகிலுரிந்து, பிறந்த நாளின் கோலமாய் அவளை ஆக்குவோம்; பாலை நிலம் போலச் செய்து, உலர்ந்த தரை போல விட்டுத் தாகத்தினால் அவளைச் சாகடிப்போம்.
4 அவள் பிள்ளைகள் மேலும் நாம் அன்பு கொள்ளோம், ஏனெனில், அவர்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள்.
5 அவர்களைப் பெற்றவள் வேசியாய் இருந்தான், அவர்களைக் கருத்தாங்கியவள் ஒழுக்கம் கெட்டு நடந்தாள்; 'உணவும் நீரும், மயிராடையும் சணலாடையும், எண்ணெயும் பானமும் எனக்குத் தரும் என் காதலர்களோடே போவேன்' என்றாள்.
6 ஆகவே உன் வழியில் முள்ளடைத்து மறிப்போம்; அவள் பாதையில் சுவரெழுப்பித் தடுப்போம்; வழி கண்டு பிடித்து அவளால் போக முடியாது.
7 தன் காதலர்களைத் தொடர்ந்து ஓடுவாள், ஆயினும் அவள் அவர்களிடம் போய்ச் சேர மாட்டாள்; அவர்களை அவள் தேடித்திரிவாள், ஆயினும் அவர்களைக் காணமாட்டாள்; அப்போது அவள், 'என் முதல் கணவனிடம் நான் திரும்பிப் போவேன்; இப்போது இருப்பதை விட அப்போது மகிழ்ச்சியாய் இருந்தேன்' என்று சொல்லுவாள்.
8 நாமே அவளுக்குக் கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெயும் கொடுத்து, வெள்ளியும் பொன்னும் அவளுக்குப் பெருகப்பண்ணினோம் என்பதை அவள் அறியவில்லை; அந்தப் பொன், வெள்ளியைக் கொண்டே பாகால் சிலை செய்தார்கள்.
9 ஆகையால் நாம் கொடுத்த கோதுமையை அதன் காலத்திலும், நாம் தந்த இரசத்தை அதன் பருவத்திலும் திரும்ப எடுத்து விடுவோம்; அவளது அம்மணத்தை மறைத்து மூடியிருந்த நமது மயிராடையும் சணலாடையும் உரிந்து விடுவோம்.
10 இப்போது அவளுடைய காதலர் கண் முன் ஆடைகளை உரிந்து அவளை நாணச் செய்வோம்; நம்முடைய கைகளிலிருந்து அவளை விடுதலை செய்பவன் எவனுமில்லை.
11 அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும் விழாக்களையும், அமாவாசைகளையும் ஓய்வு நாட்களையும், அவளுடைய திருநாள் அனைத்தையுமே நாம் நிறுத்தி விடுவோம்.
12 இவை என்னுடைய உடைமைகள், என் காதலர் எனக்கு இவற்றைக் கொடுத்தார்கள்' என்று அவள் சொல்லிக் கொண்ட திராட்சைத் தோட்டங்கள், அத்திமரங்கள் அனைத்தையும் பழாக்குவோம்; அவற்றை நாம் காடாக்கி விடுவோம்; காட்டு மிருகங்கள் அவற்றைப் பாழ்படுத்தும்.
13 பாகால்களின் விழாக்களை அவள் கொண்டாடி, அவற்றுக்கு நறுமணப் பொருட்கள் கொளுத்தி, வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து, தன் காதலர்கள் பின்னாலேயே போய் நம்மை மறந்ததற்கு அவளைப் பழிவாங்குவோம், என்கிறார் ஆண்டவர்.
14 ஆதலால், இதோ, நாம் அவளை நயமாகக் கவர்ந்திழுத்துப் பாலை நிலத்துக்குக் கூட்டிப் போய் அவள் நெஞ்சோடு பேசுவோம்.
15 நாம் அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்போம்; ஆக்கோர் என்கிற பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாய் ஆக்குவோம்; அப்பொழுது அவள் தன் இளமையின் நாட்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் செய்தது போல் அன்புக்கன்பு செய்வாள்.
16 அந்நாளில்- 'என் கணவன்' என நம்மை அவள் சொல்லுவாள், 'என் பாகாலே' எனச் சொல்லமாட்டாள், என்கிறார் ஆண்டவர்
17 அவளுடைய வாயினின்று பாகால்களின் பெயர்களை எடுத்து விடுவோம், இனி மேல் அவர்களைப் பெயரிட்டு அழைக்கமாட்டாள்.
18 அந்நாளில்- வயல்வெளி மிருகங்களோடும், வானத்துப் பறவைகளோடும் நிலத்தில் ஊர்வனவற்றோடும் அவளுக்காக நாம் ஓர் உடன்படிக்கை செய்வோம்; வில்லையும் வாளையும் போரையும் நாட்டினின்றே நாம் அகற்றிவிட்டு, அவளை அச்சமின்றி ஒய்ந்திருக்கச் செய்திடுவோம்.
19 முடிவில்லாக் காலத்திற்கும் உன்னை மணமுடிப்போம், நேர்மையிலும் நீதியிலும் நிலையான அன்பிலும், இரக்கத்திலும் உன்னை நாம் திருமணம் செய்து கொள்வோம்.
20 பிரமாணிக்கத்துடன் நாம் உன்னை மணந்து கொள்வோம், நாமே ஆண்டவர் என்பதை நீயும் அறிந்து கொள்வாய்.
21 அந்நாளில்- நாம் வானத்தின் மன்றாட்டை ஏற்போம், அது நிலத்தின் கோரிக்கையைக் கேட்கும்;
22 நிலமானது கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் இவற்றின் மன்றாட்டை ஏற்கும், என்கிறார் ஆண்டவர்.
23 நிலத்தில் நமக்காக அவளை விதைப்போல விதைப்போம். 'அன்பு பெறாதவள்' மேல் நாம் அன்பு கூருவோம். (24) 'எம் மக்களல்லர்' என்பவனை நோக்கி 'எம் மக்கள்' என்போம்; அவனும் 'நீரே என் கடவுள்' என்பான்."
×

Alert

×