Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Genesis Chapters

Genesis 6 Verses

1 மனிதர்கள் பூமியில் பலுகிப் பெருகத் தொடங்கிப் பெண் மக்களைப் பெற்றெடுத்த பின்,
2 மனிதப் புதல்வியர் அழகு மிகுந்தவர்களாய் இருக்கக் கண்ட தெய்வப் புதல்வர் அவர்களுள் தங்களுக்கு விருப்பமானவர்களை மணந்து கொண்டார்கள்.
3 அப்போது கடவுள்: நம் ஆவி மனிதனிடம் என்றென்றும் தங்காது. ஏனென்றால் அவன் மாமிசமே! இனி அவனுக்கு வாழ்நாள் நூற்றிருபது ஆண்டுகளாய் அமையும் என்றார்.
4 அக்காலத்தில் பூமியின் அரக்கர் இருந்தனர். ஏனென்றால், தெய்வப் புதல்வர் மனிதப் புதல்வியரை மணந்து கொண்ட பின் இவர்களும் பிள்ளைகள் பெற்றனர். இவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தொடக்கத்தில் பேர் பெற்ற வல்லவர்களாய் இருந்தனர்.
5 மண்ணுலகில் மனிதருடைய அக்கிரமம் பெருகினதையும், அவர்கள் எண்ணமெல்லாம் எப்போதும் தீமையையே நாடியிருந்ததையும் கண்டு, கடவுள், இவ்வுலகில் மனிதனைப் படைத்து குறித்து வருந்தினார்.
6 அப்போது அவர் மனம் நொந்து: நாம் படைத்த மனித இனத்தைப் பூமியில் இல்லாதபடி அழித்து விடுவோம்;
7 மனிதன் முதல் மிருகங்கள் வரையிலும், ஊர்வன முதல் வானத்துப் பறவைகள் வரையிலும், எல்லாவற்றையும் அழித்தொழிப்போம்; ஏனென்றால், அவற்றைப் படைத்ததை நினைத்து வருந்துகிறோம் என்றார்.
8 ஆனால் நோவா ஒருவர் மட்டும் ஆண்டவர் திருமுன் அருள் பெற்றவர் ஆனார்.
9 நோவாவின் தலைமுறை அட்டவணையாவது: நோவா தம் காலத்தில் இருந்தவர்களுள் நீதிமானும் உத்தமனுமாய்க் கடவுளுக்கு ஏற்க நடந்து வந்தார்.
10 அவர் சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று புதல்வரைப் பெற்றார்.
11 பூமியோ கடவுள் கண்ணுக்குக் கெட்டிருந்தது; அதிக அக்கிரமத்தால் நிறைந்திருந்தது.
12 மாமிசம் கொண்ட மனிதர் யாவரும் பூமியிலே கெட்ட வழியில் நடக்கிறார்கள்; அதனால் உலகம் கெட்டுப் போயிற்று எனக் கடவுள் கண்டு, நோவைவை நோக்கி:
13 மாமிசம் கொண்டுள்ள மனிதர்களை நாம் அழித்து விடத் தீர்மானித்துள்ளோம். அவர்களாலே பூமி அக்கிரமத்தில் நிறைவுற்றபடியால், அவர்களைப் பூமியோடு அழிப்போம்.
14 நன்கு இசையும் மரங்களால் நீ ஒரு பெட்டகத்தைச் செய்து, அப்பெட்டகத்திலே சிற்றறைகளை உண்டாக்கி, அதன் உள்ளும் புறமும் தார் பூசு.
15 அப்பெட்டகத்தின் நீளம் முந்நூறு முழமும், அகலம் ஐம்பது முழமும், உயரம் முப்பது முழமுமாக இருக்கட்டும்.
16 பெட்டகத்தின் மேல் தட்டுக்கு ஒரு முழம் தாழ்த்தி ஒரு சன்னல் இருக்கட்டும். பெட்டகத்தின் கதவை ஒரு பக்கத்தில் அமைத்து, ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று தட்டுகளையும் அமை.
17 ஏனென்றால் வானத்தின் கீழிருக்கிற உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிக்க, இதோ நாம் பூமியின் மேல் வெள்ளப் பெருக்கு வரப் பண்ணுவோம். பூமியிலுள்ள யாவும் அடியோடு அழியும்.
18 ஆனால் உன்னோடு நம்முடைய உடன்படிக்கையை நிலை நிறுத்துவோம். பெட்டகத்துள் நீயும் புகுவாய்; உன்னோடு உன் புதல்வர்களும், உன் மனைவியும், உன் புதல்வர்களின் மனைவியரும் நுழைவார்கள்.
19 அன்றியும், உன்னுடன் உயிரோடு காக்க வேண்டிய எல்லாவித உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக இனத்திற்கு ஒரு சோடியைப் பெட்டகத்திலே சேர்ப்பாய்.
20 இவ்வாறு பல்வேறுப்பட்ட பறவைகளிலும் மிருகங்களிலும், பூமியில் ஊர்வனவற்றிலும் இனத்திற்கு ஒரு சோடி உயிரோடு காக்கப்பட உன்னுடன் நுழையும்.
21 ஆதலால், நீ உண்ணத் தக்க உணவுப் பொருட்களையும் சேகரித்துப் பெட்டகத்தில் வைத்துக் கொள். அது உனக்கும் அவைகளுக்கும் உணவாய் அமையும் என்று கூறினார்.
22 நோவா கடவுள் கட்டளைப்படி எல்லாம் செய்து முடித்தார்.
×

Alert

×