Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Galatians Chapters

Galatians 3 Verses

1 அறிவிலிகளான கலாத்தியரே, உங்களை மயக்கியவன் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது உங்கள் கண்முன்னால் சித்தரித்துக் காட்டப்படவில்லையா? உங்களிடம் ஒன்று கேட்டறிய விரும்புகிறேன்;
2 நீங்கள் ஆவியானவரைப் பெற்றுக்கொண்டது எவ்வாறு? திருச்சட்டம் விதித்த செயல்களைச் செய்ததினாலோ? நற்செய்தியைக் கேட்டு விசுவசித்ததினாலோ?
3 ஆவியைச் சார்ந்த வாழ்க்கையைத் தொடங்கினீர்களே; இப்பொழுது ஊனுடலைச் சார்ந்தவற்றில் நிறைவு காணப்போகிறீர்களா? அத்தகைய அறிவிலிகளா நீங்கள்?
4 இதனால், உங்களுக்குக் கிடைத்த இத்துணை மேலான நன்மைகளும் வீண்தானா?
5 வீணாகத்தான் முடியுமா? அப்படியானால், உங்களுக்கு ஆவியானவரை அளித்து உங்களிடையே வல்லமை மிக்க செயல்களைச் செய்பவர் ஏன் அப்படிச் செய்கிறார்? நீங்கள் திருச்சட்டம் விதித்த செயல்களை நிறைவேற்றுவதால் செய்கிறாரா? நீங்கள் நற்செய்தியைக் கேட்டு விசுவசித்ததால் செய்கிறாரா?
6 ஆபிரகாமைப் பாருங்கள்! ' அவர் கடவுளை விசுவசித்தார்; அதனால் கடவுள் அவரைத் தமக்கு ஏற்புடையவரென மதித்தார்.'
7 ஆகவே யார் விசுவாசத்தால் வாழ்கிறார்களோ அவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
8 கடவுள் புறவினத்தாரை விசுவாசத்தினால் தமக்கு ஏற்புடையவராக்குவார் என்பதை மறைநூல் முன்னறிந்தே, ' புறவினத்தார் அனைவரும் உன் வழியாய் ஆசி பெறுவர் ' என்ற நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது.
9 ஆகவே, விசுவாசத்தால் வாழ்பவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாம் பெற்ற ஆசியில் பங்கு பெறுவர்.,
10 சட்டம் விதித்த செயல்களையே நம்பி வாழ்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள். ஏனெனில், 'திருச்சட்ட நூலில் எழுதப்பட்டிருக்கும் யாவற்றையும் கடைப்பிடிப்பதில் நிலைத்திராத எவனும் சபிக்கப்படுக! ' என்று எழுதியுள்ளது.
11 திருச்சட்டத்தினால் எவனும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவனாவதில்லை என்பதும் தெளிவு; ஏனெனில், 'விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப்பட்டவனே வாழ்வு பெறுவான்' என்று எழுதியுள்ளது.
12 திருச்சட்டம் விசுவாசத்தைச் சார்ந்ததன்று; மாறாக, " கட்டளைகளைக் கடைப் பிடிப்பவன் அவற்றால் உயிர் வாழ்வான் " என்று எழுதப்பட்டுள்ளது.
13 'மரத்தில் தொங்குபவன் எவனும் சபிக்கப்பட்டவனே' என்று எழுதியுள்ளவாறு நமக்காக கிறிஸ்து சாபமாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக்கொண்டார்.
14 ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் புறவினத்தார்க்குக் கிடைக்கவும். இவ்வாறு வாக்களிக்கப்பட்ட ஆவியானவரை நாம் விசுவாசத்தின் வழியாய்ப் பெற்றுக்கொள்ளவும் இப்படிச் செய்தார்.
15 சகோதரர்களே, உலக வழக்கிலிருந்து ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறேன்: மனிதர் செய்யும் சாதாரண உடன்படிக்கை கூட, முறைப்படி செய்து முடிக்கப்பட்டதாயின், அதை யாரும் வெறுமையாக்குவதில்லை; அதனுடன் ஒன்றையும் விட்டுவதுமில்லை.
16 வாக்குறுதிகளோ ஆபிரகாமுக்கும் அவரது வழித்தோன்றலுக்கும் தரப்பட்டன. 'வழித் தோன்றல்களுக்கு' என்று பன்மையில் குறிப்பிடாமல், ஒருமையில் 'உன் வழித் தோன்றலுக்கு' என்றுள்ளது. கிறிஸ்துவே அந்த வழித் தோன்றல்.
17 என் கருத்து இதுவே: கடவுள் வாக்குறுதி தந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து முடித்தார்; நானூற்று முப்பது ஆண்டுகளுக்குப் பின் வந்த திருச்சட்டம், அவ்வுடன்படிக்கையைச் செல்லாததாக்கி, வாக்குறுதியை வெறுமையாக்கிவிட முடியாது.
18 உரிமைப் பேறாக இறைவன் தருவது திருச்சட்டத்தின் வழியாய்க் கிடைப்பதாய் இருந்தால், அது வாக்குறுதியின் வழியாய்த் தரப்படுவதன்று என்றாகிறது; ஆனால் கடவுள் அதை ஆபிரகாமுக்கு வாக்குறுதியின் வழியாகவே அருளினார்.
19 அப்படியானால் திருச்சட்டம் எதற்கு? குற்றங்களை முன்னிட்டு அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. வாக்குறுதியைப் பெற்றுக் கொண்ட வழித்தோன்றல் வரும்வரை அது நீடிக்க வேண்டியிருந்தது. வானதூதர்களின் வழியாய் நிறுவப்பட்ட அச்சட்டம் இணைப்பாளர் ஒருவர் வழியாய்த் தரப்பட்டது.
20 ஒருவர் மட்டும் இருந்தால். இணைப்பாளருக்கு இடமில்லை. கடவுளோ ஒருவர்தான்.
21 அப்படியானால் திருச்சட்டம் கடவுளின் வாக்குறுதிகளுக்கு முரணானதா? ஒருகாலும் இல்லை. வாழ்வு அளிக்க வல்லதொரு சட்டம் தரப்பட்டிருந்தால், சட்டத்தின் வழியாய் மெய்யாகவே மனிதன் இறைவனுக்கு ஏற்புடையவனாகி இருக்கலாம்.
22 ஆனால், அனைத்துமே பாவத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதாக மறைநூல் சாற்றுகிறது. வாக்களிக்கப்பட்ட அப்பேறு விசுவசிப்பவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தின் அடிப்படையில் கிடைக்கவேண்டுமென்று இவ்வாறு ஆயிற்று.
23 ஆனால் அந்த விசுவாசம் அளிக்கப்படுமுன், அவ்விசுவாசம் வெளிப்படும் வரை, சட்டத்தின் கீழ் அடைப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம்.
24 அவ்வாறு, விசுவாசத்தால் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்குத் திருச்சட்டம் நம்மைக் கிறிஸ்துவினிடம் அழைத்துச் செல்லும் வழித்துணையாய் அமைந்தது.
25 இப்பொழுது விசுவாசம் அளிக்கப்பட்டதால், இனி நாம் வழித்துணைவனின் கண்காணிப்பில், இல்லை.
26 ஏனெனில், கிறிஸ்து இயேசுவின் மீது வைத்த விசுவாசத்தின் வழியாய் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.
27 எவ்வாறெனில், கிறிஸ்துவுக்குள் ஞானஸ்தானம் பெற்ற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.
28 இனி யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை; அடிமையென்றும் உரிமைக் குடிமகனென்றும் இல்லை; ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் அனைவரும் ஒருவரே.
29 நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாயின், ஆபிரகாமின் வழி வந்தவர்களாய் இருக்கிறீர்கள்; வாக்குறுதியின்படி உரிமையாளர்களுமாய் இருக்கிறீர்கள்.
×

Alert

×