Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 40 Verses

1 எங்கள் சிறை வாழ்வின் இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில், மாதத்தின் பத்தாம் நாளில், யெருசலேம் நகரம் பிடிபட்ட பதினான்காம் ஆண்டின் நிறைவு நாளாகிய அன்று ஆண்டவரின் கரம் என் மேல் இருந்தது.
2 கடவுள் தந்த காட்சிகளில், அவர் என்னை இஸ்ராயேல் நாட்டுக்குக் கொணர்ந்து, மிக உயரமான ஒரு மலை மேல் நிறுத்தினார்; ஆங்கே தென்முகமாய் நோக்கும் நகரம் போன்ற ஓர் அமைப்பு இருந்தது.
3 அவர் என்னை அதனுள் அழைத்துச் சென்றார்; இதோ, அங்கே ஓரு மனிதரைக் கண்டேன். அவருடைய தோற்றம் வெண்கல மயமாய் இருந்தது; தமது கையில் சணல் பட்டுக் கயிறும், ஓர் அளவு கோலும் வைத்துக் கொண்டு வாயிலில் நின்று கொண்டிருந்தார்.
4 அவர் என்னை நோக்கி, "மனிதா, கண்ணாரப் பார், காதாரக் கேள்; நான் உனக்குக் காட்டுவதையெல்லாம் உன் மனத்தில் பதியவை; அதைப் பார்க்கும்படியே நீ இங்குக் கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ராயேல் வீட்டார்க்குத் தெரிவிக்கவேண்டும்" என்றார்.
5 அப்போது இதோ, கோயிலுக்கு வெளியில் கோயிலைச் சுற்றி ஒரு மதிலிருக்கக் கண்டேன்; அந்த மனிதர் தாம் கையில் வைத்திருந்த ஆறு முழம் நான்கு விரற்கடை நீளமுள்ள கோலால் மதிலை அளந்தார்; அதன் அகலம் ஒரு கோல்; அதன் உயரம் ஒரு கோல்.
6 பிறகு அவர் கிழக்கு வாயிலுக்கு வந்து அதன் படிக்கட்டுகள் வழியாக ஏறி வாயிற்படியை அளந்தார்; அதன் அகலம் ஒரு கோல்; அதாவது வாயிற்படிக்கு இப்பக்கமும் அப்பக்கமும் ஒரு கோல் அளவு இருந்தது;
7 அவ்வாறே, பக்க அறைகளை அளந்தார்; ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமும் இருந்தது; அவ்வறைகளுக்கு இடையில் ஐந்து முழ இடம் விடப்பட்டிருந்தது.
8 வாயிலின் மண்டபத்தினருகில் இருக்கும் வாயிற்படியின் உள்ளளவு ஒரு கோல் இருந்தது.
9 வாயிலுக்கு முன்னிருந்த முகமண்டபத்தையும் அளந்தார்; அதன் அளவு எட்டு முழம்; அதன் புடை நிலையின் அளவு இரண்டு முழம்; இந்த முகமண்டபம் உட்புறத்தை நோக்கியது.
10 கிழக்கு வாயிலின் இருபக்கமும் பக்கத்திற்கு மூன்று அறைகள் இருந்தன; மூன்றுக்கும் ஒரே அளவு; மூன்றின் புடைநிலைகளுக்கும் ஒரே அளவு.
11 பின்னர் அவர் வாசற்படியின் அகலத்தை அளந்தார்; பத்து முழம் இருந்தது; அதன் நீளமோ பதின்மூன்று முழம்.
12 இருபக்கமும் அறைகளுக்கு முன்னால் ஒரு முழம் இடைவெளி விட்டு ஒரு சிறிய கைபிடிச் சுவர் இருந்தது; ஆறு முழ அளவுள்ள அறைகள் இருபக்கமும் இருந்தன;
13 ஓர் அறையின் மேற்கூரையிலிருந்து மற்ற அறையின் மேற்கூரை வரையில் தாழ்வாரத்தை அளந்த போது இருபத்தைந்து முழ அகலமிருந்தது; கதவுகள் எதிரெதிராய் இருந்தன.
14 புடைநிலைகளை அளந்த போது அறுபது முழங்கள் இருந்தன; முற்புறத்து வாயிலின் முற்றமொன்று சுற்றிலுமிருந்தது.
15 நுழையும் வாயிலின் புடைநிலையிலிருந்து உட்புற வாயிலின் மண்டபத்துப் புடைநிலை வரை ஐம்பது முழமிருந்தது.
16 வாயிலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமிருந்த அறைகளுக்கும், அவற்றின் முகப்புகளுக்கும் செய்யப்பட்டிருந்த பலகணிகள் வளைந்தவை; மண்டபங்களிலும் அத்தகைய பலகணிகளே இருந்தன; உட்புறத்தில் சுற்றிலுமிருந்த பலகணிகளும் அத்தகையவையே; புடைநிலைகளின் மேல் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப் பட்டிருந்தன.
17 பின்பு அம்மனிதர் என்னை வெளிப் பிராகாரத்திற்குக் கூட்டிக்கொண்டு போனார்; அங்குக் கருவூல அறைகளைக் கண்டேன்; பிராகாரத்தைச் சுற்றிலும் தளவரிசை கல்லால் அமைக்கப்பட்டிருந்தது; பிராகாரத்தின் நான்கு பக்கங்களிலும் முப்பது கருவூல அறைகள் இருந்தன.
18 பிராகாரத்தின் நெடுக அறைகளின் ஓரத்தில் தளவரிசை சற்றே தாழ்வாய் இருந்தது.
19 பிறகு அவர் கீழ்வாயிலின் புடைநிலை துவக்கி உட்புறத்துப் பிராகார முகப்பு வரையில் இருந்த அகலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறு முழம் இருந்தது.
20 வடக்கு வாயில்: பின்னும் வெளிப் பிராகாரத்தின் வடப்பக்கத்திற்கு எதிரில் இருந்த வாயிலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார்.
21 அதற்கு இருபக்கமும் மும்மூன்று அறைகள் இருந்தன; முதல் வாயிலின் அளவுக்கு இவ்வாயிலின் அளவு சரியாக இருந்தது. அதாவது: நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
22 அதன் பலகணிகளும், தாழ்வாரமும், சித்தரிக்கப்பட்ட சிற்ப வேலைகளும் கீழ்த் திசைக்கு எதிரான வாயிலின் இருந்தவற்றின் அளவுக்கு இணையாக இருந்தன; அதில் ஏறிப்போவதற்கு ஏழு படிகளிருந்தன; அதன் முன்புறத்தில் மண்டபமொன்று இருந்தது.
23 வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாயிலுக்கும் எதிராக உட்பிராகாரத்திலும் வாயில்கள் இருந்தன; அவர் ஒரு வாயில் துவக்கி மறுவாயில் வரைக்கும் அளந்தார்; நூறு முழம் இருந்தது.
24 பின்னும் அவர் என்னைத் தெற்கே கூட்டிச் சென்றார்; அங்கே தென்திசைக்கு நேர்முகமாய் இருந்த வாயிலொன்றைக் கண்டேன்; அவர் அதன் புடைநிலையையும் அதன் தாழ்வாரத்தையும் அளந்தார்; இவற்றின் அளவு முன்சொன்னவற்றின் அளவுக்குச் சரியாய் இருந்தது.
25 பலகணிகளும் சுற்றிலுமுள்ள தாழ்வாரங்களும் மற்றவை போலவே இருந்தன; நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
26 அதில் ஏறிப்போக ஏழு படிகள் இருந்தன; கதவுகளுக்கு முன்பாகத் தாழ்வாரங்கள் இருந்தன; வாயிலின் புடைநிலையில் இரு புறமும் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன.
27 உட்பிராகாரத்துக்கும் ஒரு வாயில் தென் திசைக்கு நேர்முகமாய் இருந்தது; அவர் தென்திசை வாயில் துவக்கி மறுவாயில் மட்டும் அளந்தார்; நூறு முழம் இருந்தது.
28 பிறகு அவர் தென்திசையின் வாயில் வழியாய் என்னை உட்பிராகாரத்துக்குள் கூட்டிச் சென்றார்; அந்த வாயிலின் அளவு முன் சொன்னவற்றின் அளவுக்குச் சரியாய் இருந்தது.
29 அதன் பக்க அறைகளையும் புடைநிலைகளையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்து பார்த்தார்; மேற்சொன்னவற்றின் அளவாகவே இருந்தது; அதாவது, நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
30 சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தின் நீளம் இருபத்தைந்து முழம்; அகலம் ஐந்து முழம்.
31 தாழ்வாரத்தின் வழியாய் வெளிப் பிராகாரத்துக்குப் போகலாம்; புடைநிலையில் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன; மேலேறிப் போவதற்கு எட்டுப் படிகள் இருந்தன.
32 பின்னர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்திற்கு அழைத்துப் போனார்; இவ்வாயிலின் அளவும் முன் சொல்லியவற்றின் அளவும் ஒன்றே.
33 அதன் அறைகளையும் புடைநிலையையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்தார். மேற்சொன்னவற்றின் அளவாகவே இருந்தது; அதாவது, நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
34 தாழ்வாரத்தின் வழியாய் வெளிப் பிராகாரத்திற்குப் போகலாம்; புடைநிலையில் பேரீச்ச மரங்கள் இருபுறமும் சித்திரிக்கப்பட்டிருந்தன; மேலேறிப் போக எட்டுப் படிகள் இருந்தன.
35 அடுத்து அவர் என்னை வடக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்றார்; வாயில் முன் சொன்னவற்றின் அளவுக்குச் சரியாய் இருந்தது.
36 அதன் பக்க அறைகளையும் புடைநிலையையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்தார்; மேற் சொன்னவற்றின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதாவது நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
37 அதன் தாழ்வாரம் வெளிப் பிராகாரத்துக்கு நேர்முகமாயிருந்தது; இருபுறமும் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன; மேலே ஏற எட்டுப் படிகள் இருந்தன.
38 கருவூல அறைகளில் எல்லாம் வாயில்களின் புடைநிலைகளுக்கு நேராக ஒரு கதவு இருந்தது; அங்கே தகனப் பலிகளைக் கழுவுவார்கள்.
39 வாயில் மண்டபத்தின் இரு புறமும் இரண்டிரண்டு பீடங்கள் உண்டு; அவற்றின் மேல் தகனப் பலிகளும், பாவப் பரிகாரப் பலிகளும், குற்றப் பரிகாரப் பலிகளும் செலுத்தப்படும்.
40 வடக்கு வாயிலுக்குச் செல்ல ஏறிப்போகும் வெளிப்புறத்தில் இரண்டு பீடங்கள் உண்டு; வாயில் மண்டபத்து முன்னாலிருக்கும் மறுபுறத்தில் இரண்டு பீடங்கள் உள்ளன.
41 வாயிலுக்கு அருகில் இரு பக்கமும் நந்நான்கு பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன; அவற்றின் மேல் பலிகள் செலுத்தப்படும்.
42 தகனப் பலிக்குரிய நான்கு பீடங்கள் சதுரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன; அவற்றின் அளவு: நீளம் ஒன்றரை முழம்; அகலம் ஒன்றரை முழம்; உயரம் ஒரு முழம்; அவற்றின் மேல் தகனப் பலிகளையும், சாதாரண பலிகளையும் இடுவதற்கான கருவிகள் வைக்கப்படும்.
43 ஒரு சாண் அளவாகிய அவற்றின் விளிம்பு உட்புறத்தின் சுற்றிலும் வளைந்திருந்தது; அப்பீடங்களின் மீது பலி இறைச்சித் துண்டுகள் வைக்கப்படும்.
44 உட்புறத்து வாயிலுக்குப் புறம்பே உட்பிராகாரத்தில் சங்கீதம் பாடுபவரின் அறைகள் இருந்தன; அந்த உட்பிராகாரம் வடதிசையை நோக்கும் வாயிலின் பக்கமாகவே இருந்தது; அறைகளோ தென் திசைக்கு எதிர் முகமாய் இருந்தன; கீழ்வாயிலின் பக்கத்திலிருந்த அறையொன்று வடக்கை நோக்கியிருந்தது.
45 அப்பொழுது அந்த மனிதர் என்னைப் பார்த்து: "தெற்கு நோக்கியிருக்கும் இந்த அறை கோயிலைக் காவல் காக்கும் அர்ச்சகர்களின் அறை;
46 வடக்கு நோக்கியிருக்கும் அறை பலி பலிபீடத்தைக் காவல்காக்கும் அர்ச்சகர்களின் அறை; லேவியின் வழிவந்த சதோக்கின் புதல்வர்களான இவர்கள் ஆண்டவருக்கு வழிபாடு செய்ய வருவார்கள்" என்றார்.
47 பிறகு அவர் பிராகாரத்தின் அளவு பார்த்தார்; அது சதுரமானது; அதன் நீளம் நூறு முழம்; அகலம் நூறு முழம்; கோயிலுக்கு எதிரிலுள்ள பீடத்தையும் அளந்தார்.
48 அப்பொழுது அவர் என்னைக் கோயில் மண்டபத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அம்மண்டபத்தின் புடைநிலைகளை அளந்தார்; அவற்றின் அளவு இருபக்கமும் அவ்வைந்து முழம் இருந்தது; வாயிலின் அகலம் மும்மூன்று முழம் இருந்தது.
49 மண்டபத்தின நீளம் இருபது முழம்; அகலம் பதினொரு முழம் இருந்தது; ஏறிப்போக எட்டுப்படிகள் உள்ளன; புடைநிலைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இரு தூண்கள் இருந்தன.
×

Alert

×