Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 35 Verses

1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, நீ செயீர் மலைக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அதற்கு எதிராக இறைவாக்குக் கூறு:
3 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: செயீர் மலையே, இதோ நாம் உனக்கு எதிராக வருவோம்; உனக்கு விரோதமாக நமது கையை நீட்டி உன்னைப் பாழும் பாலைநிலமாக்குவோம்:
4 உன் பட்டணங்களை அழிக்கப்போகிறோம்; மனித நடமாட்டம் இல்லாத நிலமாவாய்; நாமே ஆண்டவர் என்பதை அறிவாய்.
5 நீடித்த பகைமையை நீ விரும்பினாய் அன்றோ? இஸ்ராயேல் மக்களை அவர்களுடைய துன்ப நாட்களில்- அவர்கள் கொடிய தண்டனை அடைந்த நாட்களில்- நீ வாளின் வலிமைக்குக் கையளித்தாய்;
6 ஆதலால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்; நம் உயிர்மேல் ஆணை! நாம் உன்னை இரத்தப்பழிக்கு உட்படுத்துவோம்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும்; நீ இரத்தம் சிந்திக் குற்றம் செய்ததால், இரத்தப்பழி உன்னைவிடாது தொடரும்.
7 நாம் செயீர் மலையைப் பாழும் பாலை நிலமாக்குவோம்; அதில் போவார் வருவார் இல்லாதபடி செய்வோம்.
8 உன்னுடைய மலைகளைக் கொலையுண்டவர்களால் நிரப்புவோம்; குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் கணவாய்களிலும் வாளால் வெட்டுண்டவர்கள் வீழ்வார்கள்.
9 உன்னை என்றென்றும் பாழ்வெளியாய் இருக்கச் செய்வோம்; உன் பட்டணங்கள் குடியற்றுப் போகும்; அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வாய்.
10 ஆண்டவர் அங்கே குடியிருந்ததை அறிந்திருந்தும், நீ, 'இந்த இரண்டு இனத்தாரும், இரண்டு நாடுகளும் எனக்கு உரித்தாகும்; இவ்விரண்டையும் நானே உரிமையாக்கிக் கொள்வேன்' என்று சொல்லத் துணிந்தாய்;
11 ஆதலால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர் மேல் ஆணை! நீ அவர்களுக்கு எதிராக வர்மம் கொண்டு அவர்கள் மேல் கோபமும் பொறாமையும் காட்டி நடத்தியது போலவே நாமும் உன்னை நடத்துவோம்; உன் மீது தீர்ப்புச் செலுத்தும் போது நாம் யாரென்பதை உன் நடுவில் வெளிப்படுத்துவோம்.
12 இஸ்ராயேல் மலைகளுக்கு எதிராக, 'அவை பாழாக்கப்பட்டன, ஆதலால் அவை எங்களுக்கு இரையாகத் தரப்பட்டன' என்று நீ சொன்ன இழிச்சொற்களையெல்லாம் ஆண்டவராகிய நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம் என்பதை அப்போது நீ அறிந்து கொள்வாய்.
13 உன் வாயால் நமக்கு எதிராக உன்னையே நீ பெருமையாகப் பேசி, நமக்கு எதிரான வார்த்தைகளைச் சொன்னாய்; அவற்றை நாம் கேட்காமல் போகவில்லை.
14 ஆதலால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உலகமெல்லாம் மகிழ உன்னை நாம் பாழாக்குவோம்.
15 இஸ்ராயேல் வீட்டாரின் உரிமைச் சொத்து பாழான போது, அதைக் கண்டு நீ அக்களித்ததால் உனக்கும் அவ்வாறே நடக்கச் செய்வோம்; செயீர் மலையே, நீ பாழாவாய்; ஏதோம் முழுவதும் பாழாகும்; அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்."
×

Alert

×