Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 30 Verses

1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, நீ இறைவாக்குரைத்துச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: 'ஆபத்தான நாள்' என்று அலறி அழுங்கள்.
3 ஏனெனில் அந்த நாள் வருகிறது, ஆண்டவரின் நாள் வந்துவிட்டது; அந்த நாள் இருண்ட நாளாகும், புறவினத்தார்க்கு அழிவின் நாளாகும்;
4 எகிப்தின் மேலே வாளொன்று விழும்; எகிப்திலே கொலையுண்டு வீழ்ந்தார்கள், அதன் செல்வமெல்லாம் பறிபோயிற்று, அதன் அடிப்படைகள் அழிந்து போயின என்று எத்தியோப்பியர் கேட்டுத் திகைத்து மயங்குவர்.
5 எத்தியோப்பியரும் பூத்தியரும் லீதியரும், அராபியர் யாவரும், கூபியரும், உடன்படிக்கை செய்து கொண்ட மக்கள் யாவரும் அவர்களோடு கூட வாளுக்கு இரையாவார்கள்.
6 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: எகிப்தை ஆதரித்தவர்கள் வீழ்ச்சி அடைவார்கள், அதன் வல்லமையின் செருக்கு தாழ்ந்து நாசமாகும்; மிக்தோல் முதல் சியேனே வரை வாழ்பவர்கள் வாளால் வெட்டுண்டு வீழ்வார்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவராகிய இறைவன்.
7 பாழாகப் போன நாடுகளின் நடுவிலே அது பாழாகப் போன ஒரு நாடாகும்; அழிக்கப்பட்ட நகரங்களின் நடுவிலே, அதன் நகரங்கள் அழிந்து போன நகரங்கள் ஆகும்;
8 எகிப்துக்கு நாம் தீ வைத்து, அதற்குத் துணையாயிருந்தவர்கள் யாவரும் தோற்கடிக்கப்படும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
9 அந்நாளில் எத்தியோப்பியர்களுடைய இறுமாப்பை அழிக்க நாம் தூதர்களை அனுப்புவோம்; அப்பொழுது அவர்கள், எகிப்தின் அழிவு நாள் வந்தது, தங்களுக்கும் அது வந்தே தீரும்" எனக் கண்டு அஞ்சித் திகைப்பார்கள்.
10 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பபிலோன் மன்னனாகிய நபுக்கோதனசாரைக் கொண்டு நாம் எகிப்து மக்களை அழிக்கப்போகிறோம்.
11 வேற்றினத்தாரில் மிகக் கொடுமையான அவனையும் அவன் சேனைகளையும் கொண்டு வந்து, எகிப்து நாட்டை அழிக்கச் செய்வோம்; அவர்கள் தங்கள் வாளை உருவி, எகிப்தியர் மேல் பாய்ந்து கொன்று, கொலையுண்ட உடல்களால் நாட்டை நிரப்புவார்கள்.
12 நைல் நதியை வற்றச் செய்வோம்; கொடியவர் கையில் நாட்டை விற்போம்; அந்நியர்களின் கையால் நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும் பாழாக்குவோம்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்.
13 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் சிலைகளை அழிப்போம்; மெம்பீஸ் நகரத்தில் இருக்கும் படிமங்களை ஒழிப்போம்; இனி எகிப்து நாட்டில் தலைவன் இரான்; எகிப்து நாட்டில் திகில் பரவி இருக்கும்.
14 பாத்துரேஸ் நாட்டைப் பாழாக்குவோம்; தப்னீஸ் நகருக்குத் தீ வைப்போம்; அலெக்சாந்திரியா நகரத்தாரை ஆக்கினைக்கு உள்ளாக்குவோம்.
15 எகிப்திற்கு அரணாக விளங்கும் பெலுஸ் நகரத்தின் மீது நமது ஆத்திரத்தைக் காட்டுவோம்; அலெக்சாந்திரியா பட்டணத்தின் கணக்கிலடங்கா மக்களைக் கொன்றொழிப்போம்.
16 எகிப்துக்குத் தீ வைப்போம். பிரசவிக்கும் பெண்ணைப் போலப் பெலுஸ் நகரம் மிகுந்த வேதனைப்படும்; அலெக்சாந்திரியா நகரம் பாழாகும்; மெம்பீஸ் நகருக்கு நாடோறும் நெருக்கமிருக்கும்.
17 எலியோப்பொலி நகரத்து வாலிபர்களும், புபாஸ்தி நகரத்தின் இளைஞர்களும் வாளால் வெட்டுண்டு வீழ்வர்; அவ்வூர்ப் பெண்களும் அடிமைகளாய்ச் சிறைப்படுத்திக் கொண்டுபோகப்படுவர்;
18 தப்னீஸ் நகரத்திலே எகிப்தின் அதிகாரத்தை முறித்து, அதன் செருக்கெல்லாம் அற்றுப்போக நாம் செய்யும் போது, அங்கே கதிரவன் மங்கிப்போகும்; அழகிய வானமும் இருண்டு போகும்; பெண்கள் அடிமைகளாக்கப்படுவர்.
19 இங்ஙனம் நாம் எகிப்தைத் தண்டிக்கும் போது, நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்."
20 பதினோராம் ஆண்டின் முதல் மாதத்தில் ஏழாம் நாள் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது;
21 மனிதா, எகிப்தின் அரசனான பார்வோனின் புயத்தை நாம் முறித்துவிட்டோம்; ஆனால் அது நலமடையும்படி காயத்துக்கு வேண்டிய மருத்துவம் செய்வாரில்லை; அவன் வாளேந்த சக்தி பெறும்படி புயத்திற்குத் துணி சுற்றி நாடாவால் கட்டுப்போடவுமில்லை.
22 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் எகிப்தின் அரசனான பார்வோனுக்கு எதிராகச் செல்வோம்; சென்று அவனது நன்றாயிருக்கும் கையையும், ஏற்கெனவே முறிந்த கையையும் முற்றிலும் ஒடித்து, அவன் கையிலிருக்கும் வாளை விழச் செய்வோம்;
23 மேலும் எகிப்தியரை வேற்றினத்தார் நடுவில் சிதறடிப்போம்; பல்வேறு நாடுகளுக்கு அவர்களை விரட்டியடிப்போம்;
24 பபிலோன் மன்னனின் புயங்களை நாம் பலப்படுத்தி, அவன் கையிலே நம் வாளைக் கொடுப்போம்; பார்வோனின் புயங்களை முறிப்போம்; அப்பொழுது குற்றுயிராய்க் கிடப்பவன்போல், அவன் முன் கிடந்து தவிப்பான்.
25 நாம் பபிலோன் அரசனின் புயங்களை வலுப்படுத்துவோம்; பார்வோனின் புயங்கள் வலுவற்று வீழும்; நமது வாளைப் பபிலோன் அரசனின் கையில் கொடுத்தால், அவன் அதை எகிப்து நாட்டின்மேல் நீட்டுவான்; அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
26 எகிப்தியரை வேற்றினத்தார் நடுவில் சிதறடிப்போம்; பல்வேறு நாடுகளுக்கு அவர்களை விரட்டியடிப்போம்; அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
×

Alert

×