Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 25 Verses

1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, அம்மோனியருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி இறைவாக்குக் கூறு:
3 அவர்களுக்குச் சொல்: அம்மோன் மக்களே, ஆண்டவராகிய இறைவன் சொல்வதைக் கேளுங்கள்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நமது பரிசுத்த இடம் பங்கப்படுத்தப்பட்ட போதும், இஸ்ராயேல் நாடு பாழாக்கப்பட்ட போதும், யூதா மக்கள் சிறைப்பட்ட போதும், நீங்கள், 'ஆம், அது சரியே!' என்று சொல்லி அக்களித்தீர்கள் .
4 ஆகையால் உங்களைக் கீழ்த்திசையாரின் கையில் ஒப்படைப்போம்; அவர்கள் உங்கள் நடுவில் தங்கள் பாளையங்களை அமைத்துக் கூடாரங்களை அடிப்பார்கள்; உங்கள் கனிகளை உண்டு, பாலைப் பருகுவார்கள்.
5 இராபா நகரை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும், அம்மோனியரின் நகரங்களை மந்தைகளை மடக்கும் கிடைகளாகவும் ஆக்குவோம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
6 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் நாட்டுக்கு எதிராக நீங்கள் கைகொட்டிக் கால்தட்டி மனப்பூர்வமாய் மகிழ்ச்சியடைந்தீர்களே!
7 ஆகையால் நமது கரத்தை உங்கள் மீது நீட்டிப் புறவினத்தார்க்கு உங்களைக் கொள்ளைப் பொருளாகக் கையளிப்போம்; உங்களை உலகத்தில் இல்லாதபடி கொன்று பூண்டோடு அழிப்போம்; அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
8 "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மோவாபும் செயீரும், 'இதோ யூதா வீட்டாரும் மற்ற நாட்டாரைப் போன்றவர்கள் தான்' என்று சொல்லியபடியால்,
9 மோவாப் நாட்டின் மலைப் பகுதியைத் திறப்போம்; அதன் மகிமையாயுள்ள எல்லைப் புறத்து பட்டணங்களாகிய பேத்தியேசிமோத், பேயேல்மியோன், காரியாத்தாயீம் ஆகியவற்றையும் அழிப்போம்.
10 அம்மோனியரைச் செய்தது போலவே, மோவாப் நாட்டினரையும் கீழ்த்திசையார் கைகளில் உரிமையாக ஒப்படைப்போம்; அவர்களுடைய பெயர் மக்கள் நடுவிலிருந்து அற்றுப் போகும்.
11 மோவாப் மீது நீதி செலுத்தும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
12 "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதுமேயர் யூதா வீட்டாரைப் பழி வாங்கக் கருதி அவர்கள் மேல் தங்கள் பகையைத் தீர்த்துக் கொண்ட பெரும் பாதகத்தைக் குறித்து,
13 ஆண்டவராகிய இறைவன் தீர்ப்புக் கூறிச் சொல்லுகிறார்: இதோ இதுமேயா நாட்டுக்கு எதிராக நமது கரத்தை நீட்டுவோம்; அதிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழித்துக் காடாக்குவோம்; வடக்கில் உள்ள தேமான் முதல் தேதான் வரையுள்ள எல்லா மக்களும் வாளால் வெட்டுண்டு வீழ்வர்.
14 நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் கெண்டே இதுமேயரைப் பழிவாங்கி அழிப்போம்; அவர்கள் இதுமேயாவில் நமது கோபத்தின்படியும் ஆத்திரத்தின்படியும் செய்து, இதுமேயரைத் தண்டிப்பார்கள்; அப்போது நாம் பழிதீர்ப்பதை இதுமேயா நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
15 "ஆண்டவராகிய இறைவன் மீண்டும் கூறுகிறார்: பிலிஸ்தியர் தங்கள் பழைய பகைமையை மனத்தில் கொண்டு இஸ்ராயேலரை அழிக்கத்தேடி தங்களால் இயன்றவாறெல்லாம் பழிவாங்கினபடியால்,
16 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அவர்கள் மீது நமது கரத்தை நீட்டி, கெரெதைத்தியர்களைக் கொன்று, கடற்கரை ஊர்களில் உள்ளவர்களையும் அழிப்போம்;
17 கடுமையான தண்டனைகளை அவர்களுக்குக் கொடுத்து, ஆத்திரத்தோடு அவர்களைப் பழிவாங்கி நீதிசெலுத்துவோம்; அவ்வாறு அவர்களைப் பழிவாங்கும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள். "
×

Alert

×