Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 20 Verses

1 ஏழாம் ஆண்டின் ஐந்தாம் மாதத்தில் பத்தாம் நாள் இஸ்ராயேல் மக்களின் மூப்பர் சிலர் ஆண்டவருடைய ஆலோசனையைக் கேட்பதற்காக என் முன் வந்து உட்கார்ந்தார்கள்:
2 அப்போது ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
3 மனிதா, இஸ்ராயேலின் மூப்பர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் நம்மிடம் ஆலோசனை கேட்க வருகிறீர்களோ? நம் உயிர் மேல் ஆணை! உங்களுக்கு ஆலோசனை அளிக்கப்படாது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
4 நீ அவர்களை விசாரிக்கப் போகிறாயா? மனிதா, நீ அவர்களுக்குத் தீர்ப்புச் சொல்லப் போகிறாயா? அப்படியானால், அவர்கள் தந்தையரின் அருவருப்பான குற்றங்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டு.
5 அவர்களிடம் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் இஸ்ராயேலைத் தேர்ந்துகொண்ட நாளில், யாக்கோபின் குலத்தார்க்கு நாம் கைநீட்டி ஆணையிட்டு, எகிப்து நாட்டில் அவர்களுக்கு நம்மை வெளிப்படுத்தி, 'ஆண்டவராகிய உங்கள் இறைவன் நாமே' என்று கையுயர்த்தி ஆணையிட்டோம்.
6 அந்நாளில் நாம் அவர்களை எகிப்து நாட்டிலிருந்து வரச் செய்து, அவர்களுக்காக நாம் தெரிந்து கொண்டதும், பாலும் தேனும் பொழிவதும், மற்றெல்லா நாடுகளிலும் தலை சிறந்ததுமான நாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று ஆணையிட்டோம்.
7 மேலும் அவர்களைப் பார்த்து, 'உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் கண்களுக்கு விருந்தளிக்கும் அருவருப்பானவற்றை விட்டெறியட்டும்; எகிப்து நாட்டின் சிலைகளால் தீட்டுப்படாதீர்கள்; ஆண்டவராகிய உங்கள் இறைவன் நாமே' என்று சொன்னோம்.
8 அவர்கள் நம் வார்த்தையைக் கேட்க மனமில்லாமல் நமக்கு எதிராக எழுந்தார்கள். அவரவர் தத்தம் கண்களுக்கு விருந்தளித்த அருவருப்பானவற்றை விட்டெறியவுமில்லை; எகிப்து நாட்டின் சிலைகளைத் தள்ளிவிடவுமில்லை; ஆகையால் எகிப்து நாட்டின் நடுவில் நமது ஆத்திரத்தை அவர்கள்மீது காட்டி, நமது கோபத்தைத் தீர்த்துக் கொள்வோம், என்றோம்.
9 எனினும் அவர்கள் நடுவிலிருந்த புறவினத்தார் கண் முன் நமது பெயர் அவசங்கையாகாதிருக்க நாம் கோபத்தைச் செலுத்தவில்லை; ஏனெனில், அந்தப் புறவினத்தார் அறிய, அவர்களை எகிப்து நாட்டிலிருந்து வரச் செய்து நம்மை அவர்களுக்கு வெளிபடுத்தினோம் அன்றோ?
10 ஆகவே நாம் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்து, பாலைநிலத்திற்குக் கூட்டி வந்தோம்.
11 நம் கற்பனைகளையும் நீதி முறைமைகளையும் அவர்களுக்குக் கொடுத்தோம். அவற்றைக் கடைப்பிடிப்பவன் வாழ்வான்.
12 மேலும் அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் ஆண்டவர் நாமே என்பதை அவர்கள் அறியும்படி, நமக்கும் அவர்களுக்கும் அடையாளமாக ஒய்வு நாட்களையும் அவர்களுக்கும் கட்டளையிட்டோம்.
13 ஆனால் இஸ்ராயேல் மக்கள் பாலைநிலத்தில் நமக்கு எதிராக எழும்பி, நம் கட்டளைகளின்படி நடவாமல், மனிதனுக்கு வாழ்வளிக்கும் நம் நீதி முறைமைகளைக் காலால் மிதித்து, ஒய்வு நாட்களையும் மனந்துணிந்து மீறினார்கள்; ஆகவே பாலைநிலத்திலேயே நம் கோபத்தின் வேகத்தை அவர்கள் மேல் காட்டி, அவர்களை அழித்துவிடத் தீர்மானித்தோம்.
14 ஆனால் புறவினத்தார் கண் முன் நமது பெயரின் பரிசுத்தம் குலையாதபடி, அவர்களை நாம் பழிவாங்கவில்லை; ஏனெனில் அந்தப் புறவினத்தார் காண, அவர்களை எகிப்தினின்று புறப்படச் செய்தோம் அன்றோ?
15 அன்றியும், பாலும் தேனும் பொழிவதும், மற்றெல்லா நாடுகளிலும் தலை சிறந்ததுமான நாட்டுக்குள் அவர்களைக் கூட்டிச் செல்ல மாட்டோம் என்று பாலை நிலத்தில் அவர்களுக்கு எதிராய் நம் கையுயர்த்தி ஆணையிட்டோம்;
16 ஏனெனில் அவர்கள் நம் நீதி முறைமைகளைக் காலால் மிதித்து, நம் கட்டளைகளின்படி நடவாமல், ஒய்வு நாளையும் கடைப்பிடிக்காமல் சிலைகளையே பின்பற்றி நடந்தார்கள்.
17 ஆயினும் நமது கண் அவர்கள் மேல் இரக்கம் காட்டிற்று; அவர்கள் அனைவரையும் பாலை நிலத்தில் நாம் அழிக்கவோ கொன்றொழிக்கவோ இல்லை.
18 நாம் பாலை நிலத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: உங்கள் தந்தையரின் முறைமைகளின்படி நீங்கள் நடவாமலும், அவர்களுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காமாலும் அவர்களுடைய சிலைகளினால் தீட்டுப்படாமலும் இருங்கள்;
19 ஆண்டவராகிய நாமே உங்கள் இறைவன்; நம் கட்டளைகளின்படி நடந்து, நம் நீதி முறைமைகளைக் கைக்கொண்டு அவற்றைக் கடைப்பிடியுங்கள்.
20 நாமே ஆண்டவராகிய உங்கள் இறைவன் என்று நீங்கள் அறியும்படி, நம் ஒய்வு நாட்களைப் பரிசுத்தப்படுத்தி, அவற்றை நமக்கும் உங்களுக்கும் அடையாளமாகக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தோம்.
21 அவர்கள் பிள்ளைகளோ நமக்கு எதிராய்க் கலகம் செய்தார்கள்: நம் கட்டளைகளின்படி நடவாமலும், வாழ்வளிக்கும் நம் நீதி முறைமைகளைக் கடைப்பிடிக்காமலும், ஓய்வு நாட்களை அவசங்கை செய்தும் நமக்குக் கோபத்தை மூட்டினார்கள்; ஆகையால் நமது ஆத்திரத்தை அவர்கள் மேல் காட்டி, பாலை நிலத்தில் நம்முடைய கோபத்தைத் தீர்த்துக் கொள்வோம் என்று தீர்மானித்தோம்.
22 ஆயினும் புறவினத்தார் கண் முன் நமது திருப்பெயரின் பரிசுத்தம் குலையாதிருக்க, ஓங்கின கையைத் திருப்பிக் கொண்டோம்; ஏனெனில் அந்தப் புறவினத்தார் காண நாம் அவர்களைப் புறப்படச் செய்தோம் அன்றோ?
23 மறுபடியும் பாலைநிலத்தில் நம் கையுயர்த்தி ஆணையிட்டு, அவர்களைப் புறவினத்தார் நடுவில் சிதறடித்து நாடுகளுக்கெல்லாம் துரத்துவோம் என்று சொன்னோம்;
24 ஏனெனில், நம் நீதி முறைமைகளின்படி செய்யாமல், நம் கட்டளைகளை வெறுத்து நம் ஒய்வு நாட்களை கடைபிடிக்காமல், அவர்கள் கண்கள் அவர்கள் தந்தையரின் சிலைகளையே பின்பற்றின.
25 ஆகையால் நன்மை பயக்காத கற்பனைகளையும், வாழ்வு அளிக்காத நீதி முறைமைகளையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
26 தங்கள் பாவங்களுக்காகத் திகிலடையும்படி, அவர்கள் தங்கள் தலைச்சன் பிள்ளைகளைப் பலியிடச் செய்து, அந்தக் காணிக்கைகளாலேயே அவர்கள் தீட்டுப்படச் செய்தோம்; நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறியும் பொருட்டே அவ்வாறு செய்தோம்.
27 ஆகையால், மனிதா, இஸ்ராயேல் மக்களிடம் பேசி நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்கள் தந்தையர் நம்மைப் புறக்கணித்து நிந்தித்ததோடு, நம்மைப் பழித்துரைக்கவும் தொடங்கினார்கள்.
28 ஏனெனில், நாம் அவர்களுக்கு வாக்களித்திருந்த நாட்டுக்கு அவர்களைக் கூட்டி வந்து விட்ட பின், அவர்கள் உயர்ந்த குன்றுகளையும் தழைத்த மரங்களையும் கண்டு, அங்கெல்லாம் தங்கள் பலிகளைச் செலுத்தி நமக்குக் கோபமூட்டும் காணிக்கைகளைப் படைத்து, நறுமணப் புகையினைக் காட்டிப் பானப்பலிகளை வார்த்தார்கள்.
29 (அப்போது நாம் அவர்களை நோக்கி: நீங்கள் போகும் அந்த மேடு என்பது என்ன என்று கேட்டோம்; அதன் காரணமாய் இந்நாள் வரை அவ்விடத்திற்கு மேடு என்ற பெயர் வழங்குகிறது.)
30 ஆகையால் இஸ்ராயேல் மக்ககளுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மெய்யாகவே உங்கள் தந்தையரின் வழியிலேயே நீங்களும் நடந்து அவர்களின் வெறுக்கத்தக்க செயல்களைப் பின் பற்றி, நீங்களும் தீட்டுப்படுவீர்களோ?
31 நீங்கள் பலி ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் பிள்ளைகளைத் தீயிலிட்டுப் பலியாக்கும் போது, இந்நாள் வரை சிலைகளினால் தீட்டுப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். இஸ்ராயேல் வீட்டாரோ, நீங்களா என்னிடத்தில் ஆலோசனை கேட்க வந்தீர்கள்? நம் உயிர்மேல் ஆணை! நாம் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவே மாட்டோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
32 உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆசை- 'மரத்தையும் கல்லையும் வழிபட்டுக் கொண்டு புறவினத்தார், மற்ற நாட்டு மக்கள் இவர்களைப் போலவே இருப்போம்'- என்றும் அந்த ஆசை ஒருகாலும் நிறைவேறாது.
33 நம் உயிர்மேல் ஆணை! பலத்த கையினாலும் ஒங்கிய புயத்தினாலும், வேகத்தோடு வெளிப்படும் கோபத்தோடும் உங்களுக்கு நாமே அரசராய் இருப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
34 பலத்த கையினாலும் ஒங்கிய புயத்தினாலும், வேகத்தோடு வெளிப்படும் கோபத்தோடும் உங்களை வேற்று நாட்டார் நடுவிலிருந்தும், சிதறிக் கிடக்கும் நாடுகளினின்றும் உங்களைக் கூட்டிக் கொண்டு வருவோம்.
35 உங்களை வேற்றினத்தாரின் பாலை நிலத்துக்குக் கொண்டு போய் அங்கே நேருக்கு நேராய் உங்களைத் தீர்ப்பிடுவோம்.
36 எகிப்து நாட்டின் பாலை நிலத்தில் உங்கள் தந்தையரைத் தீர்ப்பிட்டது போலவே உங்களையும் தீர்ப்பிடுவோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
37 உங்களை நமது ஆளுகைக்குப் பணியச் செய்து, உடன் படிக்கையின் கடமைகளுக்குக் கட்டுப் படுத்துவோம்.
38 கலகக்காரரையும், சட்டத்தை மீறுகிறவர்களையும் உங்களிடமிருந்து பிரித்து, அவர்களை அவர்கள் வாழும் நாட்டினின்று புறப்படச் செய்வோம்; ஆயினும் இஸ்ராயேல் நாட்டுக்கு அவர்கள் வரமாட்டார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
39 ஆண்டவராகிய இறைவர் கூறுகிறார்: நீங்களோ, இஸ்ராயேல் வீட்டாரே, நாம் சொல்வதை நீங்கள் கேட்கவில்லையானால், நீங்கள் ஒவ்வொருவனும் தன் தன் சிலைகளுக்கு இப்பொழுதும் இனி மேலும் வழிபாடு செய்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் காணிக்கைளாலும் சிலைகளாலும் நமது பரிசுத்த பெயரை அவசங்கைப்படுத்த உங்களால் ஒரு போதும் முடியாது.
40 ஆண்டராகிய இறைவன் கூறுகிறார்: நமது பரிசுத்த மலையில்- இஸ்ராயேல் நாட்டின் உயர்ந்த மலையாகிய நமது மலையில்- இஸ்ராயேல் வீட்டாரனை வரும் நம்மைச் சேவிப்பார்கள்; ஆம், அங்கே உங்கள் மேல் நாம் விருப்பம் கொள்வோம்; அங்கே உங்கள் காணிக்கைகளையும், கொடைகளில் சிறந்தவற்றையும், உங்கள் பரிசுத்த பலிகளையும் ஏற்றுக் கொள்வோம்.
41 புறவினத்தாரின் நடுவிலிருந்து நாம் உங்களைப் புறப்படப் பண்ணின பின்பும், சிதறுண்டிருந்த நாடுகளினின்று உங்களை ஒன்று சோர்த்த பிறகும், உங்களை நறுமணக் காணிக்கையாக ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு புறவினத்தார் கண் முன் நமது பரிசுத்தத்தை உங்கள் நடுவில் வெளிப்படுத்துவோம்.
42 நாம் உங்கள் தந்தையர்க்குத் தருவதாகக் கையுயர்த்தி ஆணையிட்டு வாக்களித்த இஸ்ராயேல் நாட்டுக்கு உங்களை நாம் கூட்டிக் கொண்டு வரும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
43 அங்கே உங்களுடைய தீய வழிகளையும், நீங்கள் தீட்டுப்படக் காரணமாயிருந்த அக்கிரமங்கள் அனைத்தையும் நினைத்து, நீங்கள் செய்த தீய செயல்களுக்கெல்லாம் உங்களையே நொந்து கொள்வீர்கள்.
44 இஸ்ராயேல் வீட்டாரே, உங்கள் தீய வழிகளுக்கும், இழிவான செயல்களுக்கும் தக்க தண்டனை தராமல், நமது திருப்பெயரை முன்னிட்டு உங்களுக்கு இவ்வாறு செய்தோம் எனக்காணும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
45 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
46 மனிதா, நீ உன் முகத்தைத் தென் திசைக்குத் திருப்பி, தென் திசைக்கு எதிராகப் பிரசங்கித்து நெகெபில் உள்ள காட்டு நிலத்திற்கு எதிராக இறைவாக்குக் கூறு.
47 நெகெபில் உள்ள காட்டுக்குச் சொல்: ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் உன்னில் அக்கினியை மூட்டி, உன்னிடத்தில் உள்ள பச்சை மரம், பட்ட மரம் யாவற்றையும் கொளுத்தப்போகிறோம்; கொழுந்து விட்டெரியும் சுவாலை அணைக்கப்படாது; தெற்கு முதல் வடக்கு வரை எல்லா முகங்களும் கருகிப் போகும்.
48 ஆண்டவராகிய நாமே அதைக் கொளுத்தினோம் என்பதை யாவரும் அறிவர்கள்; அதுவோ அவிந்து போகாது."
49 நான் அதைக் கேட்டு, "ஆண்டவராகிய இறைவனே, 'உவமைகளைப் புனைகிறவன் அல்லவா இவன்?' என்று என்னைக் குறித்துச் சொல்லுகிறார்களே" என்று முறையிட்டேன்.
×

Alert

×