Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 26 Verses

1 ஆசாரக் கூடாரத்தை அமைக்க வேண்டிய மாதிரி என்னவென்றால், முறுக்கிழையான மெல்லிய சணல் நூல்களாலும், நீலநிறம், இரத்த நிறம், இரு தடவை சாயம் தோய்த்த பொன்னிறமுள்ள நூல்களாலும் நெய்யப்பட்ட புடவையைக் கொண்டு பத்து மூடுதிரைகளைச் செய்வித்து, அவை சித்திர விசித்திரப் பின்னல் வேலையால் அலங்கரிக்கப்படும்.
2 ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாய் இருக்கும். மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாய் இருக்க வேண்டும்,
3 ஐந்து திரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும். மற்ற ஐந்தும் ஒன்றோடொன்று அதே விதமாய் இணைக்கப்படும்.
4 மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணையும்படி, அவற்றின் மேற்பக்கதிலும் ஓரங்களிலும் இளநீல நூலால் காதுகளை அமைப்பாய்.
5 ஒவ்வொரு மூடுதிரையின் இரு புறங்களிலும் ஐம்பது காதுகள் இருக்க வேண்டும். அவை ஒன்றோடொன்று இணையும்படி காதோடு காது ஒன்றுக்கொன்று நேர் நேராய் இருக்க வேண்டும்.
6 அன்றியும், ஆசாரக் கூடாரம் ஒரே உறைவிடமாய் அமையும்படி, ஐம்பது பொன் கொக்கிகளையும் செய்து மூடுதிரைகள் ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளாலே இணைக்கப்பட வேண்டும்.
7 ஆசாரக் கூடாரத்தின் மேற்புறத்தை மூடுவதற்காக வெள்ளாட்டு மயிரினால் பதினொரு கம்பளிகளைச் செய்வாய்.
8 ஒவ்வொரு கம்பளியின் நீளம் முப்பது முழமும் அகலம் நான்கு முழமும் இருக்கவேண்டியது. எல்லாக் கம்பளிகளும் ஒரே அளவாய் இருக்க வேண்டும்.
9 ஐந்து கம்பளிகளை ஒன்றாகத் தனித்தனியே சேர்ப்பாய். ஆறு கம்பளிகளை ஒன்றோடொன்றாகச் சேர்த்து, ஆறாவது கம்பளியை மேற்புறத்தில் முகப்புக்கு முன் மடித்துப் போடும்படியாய்த் தைக்கக்கடவாய்.
10 இணைக்கப்பட்ட ஒரு கம்பளி மற்றொரு கம்பளியோடு சேரத்தக்கதாக, ஒவ்வொரு கம்பளியின் ஓரத்திலே ஐம்பது காதுகளை அமைத்து விடுவாயானால், அந்தக் கம்பளிகள் ஒன்றோடொன்று சேரச் செய்யக் கூடும்.
11 ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் செய்வாய். அந்தக் கொக்கிகளிலே கம்பளிகளின் காதுகளை ஒன்றோடொன்று மாட்டி இணையச் செய்தால், கம்பளிகளெல்லாம் ஒரே கம்பளியாய்ச் சேரும்.
12 மேற்புறத்தை மூடுவதற்குத் தயார் செய்யப்படும் கம்பளிகளிலே ஒன்று எஞ்சி இருக்குமே, அதன் ஒரு பாதிப் பாகத்தை உறைவிடத்தின் பின்புறத்தில் தொங்க விடுவாய்.
13 (கூடாரத்தின் மேற்புறத்தை மூடும் கம்பளிகளின் நீளத்திலே) ஒரு முழமளவு தென்புறத்திலும் வடப்புறத்திலும் தொங்க விடுவதுமன்றி, நீளத்திலே மீதியான கம்பளி உறைவிடத்தின் இரு பக்கங்களையும் மூடும்.
14 சிவப்பு தோய்ந்த செம்மறிக் கிடாய்த் தோல்களால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும், அதன் ளமேல் வைப்பதற்கு ஊதா தோய்ந்த தோல்களால் வேறொரு மூடியையும் அமைப்பாய்.
15 ஆசாரக் கூடாரத்தில் நட்டமே நிற்கும் பலகைகளையும் சேத்தீம் மரங்களால் செய்வாய்.
16 அவை ஒவ்வொன்றும் பத்து முழ உயரமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்க வேண்டும்.
17 ஒவ்வொரு பலகையும் அடுத்த பலகையோடு இசைந்திருக்கும்படி பலகைகளின் ஓரங்களிலே இரண்டு காடியும் கழுத்தும் அமைத்து வைப்பாய். பலகைகளெல்லாம் அவ்விதமே தயார் செய்யப்படும்.
18 அந்தப் பலகைகளில் இருபது பலகைகள் தென்திசைக்கு எதிரே நிற்கும்.
19 அவற்றின் அடியில் வைக்கும்படி நாற்பது வெள்ளிப்பாதங்களை அமைப்பாய். இருபக்கத்து ஓரத்தின் கீழே ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு பாதங்கள் இருக்கும்படி செய்வாய்.
20 ஆசாரக் கூடாரத்தின் மறுபக்கமாகிய வடப்புறத்திலே இருபது பலகைகள் இருக்க வேண்டும்.
21 அவைகளின் கீழே வைப்பதற்கும் நாற்பது வெள்ளிப் பாதங்கள் தயார் செய்யப்படும். அதாவது: ஒவ்வொரு பலகைக்கும் கீழே இரண்டு பாதம் இருக்கும்.
22 ஆசாரக் கூடாரத்தின் மேற்றிசைக்கு ஆறு பலகைகளையும்,
23 ஆசாரக் கூடாரத்தின் பின்பக்கத்து ஓரங்களிலே இரண்டு பலகைகளையும் அமைப்பாய்.
24 அவற்றைக் கீழிருந்து மேலே வரையிலும் ஒரே கூட்டு மூட்டினாலே சேர்த்து வைக்கவேண்டும். மேலும், ஓரங்களிலே வைக்க வேண்டிய இரண்டு பலகைகளிலும் அவ்விதமே செய்யவேண்டும்.
25 அவ்வாறு எட்டுப் பலகைகள் இருக்கும். ஒவ்வொரு பலகைக்குங் கீழ் இரண்டிரண்டு பாதங்கள் இருப்பதனால் மொத்தம் வெள்ளிப் பாதங்கள் பதினாறு இருக்கும்.
26 உறைவிடத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளை நிலைப்படுத்துவற்தகாகச் சேத்தீம் மரத்தால் ஐந்து தாழ்ப்பாள்களையும்,
27 மறுபக்கத்திலே ஐந்து குறுக்குச்சட்டங்களையும், உறைவிடத்தின் மேற்றிசைக்கு இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும் அமைப்பாய்.
28 அவை பலகைகளின் மையத்தில் குறுக்கே வைக்கப்பட்டு, ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஊடுருவப் பாய்ச்சத் தக்கவைகளாக இருக்க வேண்டும்.
29 அந்தப் பலகைகளையும் பொன் தகட்டால் மூட வேண்டியதுமன்றி, எந்தக் குறுக்குச் சட்டங்களினால் பலகையெல்லாம் நிலைப்படுத்தப்பட்டிருக்குமோ அந்தக் குறுக்குச் சட்டங்களைப் பாய்ச்சத்தக்க வளையங்களையும் பொன்னால் அமைப்பாய். குறுக்குச் சட்டங்களைப் பொன் தகட்டாலே மூடவேண்டும்.
30 இவ்விதமாய், மலையின் மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரிப்படி ஆசாரக் கூடாரத்தை அமைப்பாயாக.
31 நீல நிற நூல், கருஞ்சிவப்பு நூல், இரட்டிப்புச் சாயமுள்ள இரத்த நிற நூல், திரித்த மெல்லிய சணல் நூல் முதலிய நூல்களை நெய்து, இவற்றால் ஒரு திரை செய்வாய். அதைச் சித்திர விசித்திரப் பின்னல் வேலைகளால் அலங்கரித்திருக்க வேண்டும்.
32 சேத்தீம் மரத்தால் செய்து பொன் தகட்டால் மூடப் பட்ட நான்கு தூண்களின் முன் புறத்தில் (அதைத்) தொங்க விடுவாய். அத்தூண்களுக்கோ நான்கு பொன் போதிகைகளும் நான்கு வெள்ளிப் பாதங்களும் இருக்கும்.
33 அந்தத் திரையை வளையங்களில் கோத்துக் கட்டிய பின் உடன்படிக்கைப் பெட்டகத்தை அதற்குள்ளே மறைத்து வைப்பாய். அந்தத் திரையோ பரிசுத்த இடத்திற்கும், பரிசுத்தத்திலும் பரிசுத்த இடத்திற்கும் நடுவில் இருக்கும்.
34 பிறகு பரிசுத்தத்திலும் பரிசுத்த இடத்தில் உடன்படிக்கைப் பெட்டகத்தின் மேலே இரக்கத்தின் அரியணையை நிறுவி வைப்பாய்.
35 திரைக்கு வெளியே மேசையையும், மேசைக்கு எதிராகக் குத்து விளக்கையும் வைக்கக் கடவாய். மேசையோ வடப்புறத்திலே வைக்கப்படும்.
36 அன்றியும், ஆசாரக் கூடாரத்தின் வாயிலில் நீல நிற நூல், கருஞ்சிவப்பு நூல், இரட்டிப்புச் சாயமுள்ள இரத்த நிற நூல், திரித்த மெல்லிய சணல் நூல்--இவற்றை நெய்து சித்திரப் பின்னல் வேலையால் அலங்கரித்த தெந்தோரியம் என்னும் தொங்கு திரையையும் அமைப்பாயாக.
37 சேத்தீம் மரங்களால் செய்யப் பட்ட ஐந்து தூண்களையும் பொன்னால் மூடுவாய். அவற்றின் முன் மேற்சொன்ன தொங்கு திரை தொங்க வைக்கப்படும். அத்தூண்களின் பொதிகைகள் பொன்னாலும், பாதங்கள் வெள்ளியாலும் செய்யப்படும்.
×

Alert

×