Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 20 Verses

1 பிறகு ஆண்டவர் திருவுளம் பற்றிய எல்லா வாக்கியங்களுமாவன:
2 எகிப்து நாட்டிலிருந்தும் அடிமை வாழ்வினின்றும் உன்னை விடுவித்த ஆண்டவராகிய நாமே உன் கடவுள்.
3 நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக.
4 மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.
5 அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவராய் இருக்கிற நாம் வல்லவரும் எரிச்சல் உள்ளவருமாய் இருக்கிறோம்; நம்மைப் பகைக்கிறவர்களைக் குறித்து, தந்தையரின் அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை விசாரித்து வருகிறவராய் இருக்கிறோம்.
6 நம்மிடம் அன்பு கூர்ந்து, நம் கட்டளைகளைக் கைக்கொண்டு ஒழுகிவருகிறவர்களுக்கோ, ஆயிரமாயிரம் தடவையும் தயவு காட்டுவோம்.
7 உன் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயரை வீணாய்ச்சொல்ல வேண்டாம். ஏனென்றால், ஆண்டவர் தம்முடைய பெயரை வீணில் சொல்பவனைத் தண்டியாமல் விடமாட்டார்.
8 ஒய்வு நாளைப் பரிசுத்தமாய்க் கொண்டாட நினைவு கூர்வாயாக.
9 ஆறு நாளும் நீ வேலை செய்து உன் தொழிலுக்கடுத்த காரியங்களை எல்லாம் நடத்துவாயாக.
10 எழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவரின் ஓய்வு நாளாய் இருப்பதனால், அன்று நீயாவது, உன் மகன் மகளாவது, உன் வேலைக்காரன் வேலைக்காரியாவது, உன் மிருகங்கள் அல்லது உன் வாயில்களில் இருக்கிற அந்நியனாவது யாதொரு வேலையும் செய்ய வெண்டாம்.
11 ஏனென்றால், ஆண்டவர் ஆறு நாளில் விண்ணையும் மண்ணையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து, ஏழாம் நாளிலே ஓய்வு கொண்டமையால், ஆண்டவர் ஓய்வு நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.
12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப் போகிற நாட்டிலே நீ நெடுநாள் வாழும் பொருட்டு உன் தந்தையையும் தாயையும் மதித்து நடப்பாயாக.
13 கொலை செய்யாதிருப்பாயாக.
14 விபசாரம் செய்யாதிருப்பாயாக.
15 களவு செய்யாதிருப்பாயாக.
16 உன் அயலானுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
17 உன் அயலான் வீட்டை விரும்பாதே: அவனுடைய மனைவியையாவது, வேலைக்காரனையாவது, வேலைக்காரியையாவது, மாட்டையாவது, கழுதையையாவது, மேலும் அவனுக்குக் கிடைத்த யாதொன்றையாவது விரும்பாதிருப்பாயாக என்றருளினார்.
18 மக்கள் அனைவரும் இடி, மின்னலையும் எக்காள ஒலியையும் புகைந்து கொண்டிருந்த மலையையும் கண்டு அச்சமுற்றுத் திடுக்கிட்டவர்களாய்த் தூரத்திலே அசைவற்று நின்றனர்.
19 மோயீசனை நோக்கி: நீர் எங்களோடு பேசும்; நாங்கள் கேட்போம். கடவுள் எங்களோடு பேச வேண்டாம்; பேசினால், நாங்கள் சாவோம் என்றனர்.
20 அதற்கு மோயீசன்: அஞ்ச வேண்டாம். உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் அவருக்குப் பயந்து பாவம் செய்யாமல் இருப்பதற்காகவும் கடவுள் இவ்வாறு எழுந்தருளி வந்தார் என்றார். மக்கள் தூரத்திலே நின்று கொண்டிருந்தனர்.
21 மோயீசனோ கடவுள் இருந்த காரிருளுள் அண்டை சென்றார்.
22 அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: நாம் வானத்திலிருந்து உங்களோடு பேசினதாக உங்களுக்குத் தெரியும்.
23 நீங்கள் வெள்ளியாலேனும் பொன்னாலேனும் விக்கிரகங்களை உங்களுக்கு உண்டாக்கிக்கொள்ள வேண்டாம்.
24 நம்முடைய பெயர் கொண்டாடப்படும் இடத்தில் நீங்கள் மண்ணாலே ஒரு பலிப்பீடத்தைக் கட்டி எழுப்பி அதன்மேல் தகனப் பலியாகவும் சமாதானப் பலியாகவும் உங்கள் ஆடுமாடு முதலியவற்றைச் சமர்ப்பித்து வாருங்கள். நாம் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்போம். சில வேளை கல்லினாலே பலிப்பீடத்தை நமக்குக் கட்டுவீர்களாயின்,
25 கொத்தி வெட்டப்பட்ட கல்லாலே அதைச் செய்யாதீர்கள். ஏனென்றால், அதன்மேல் உன் உளி பட்டாலே அது தீட்டாகி விடும்.
26 மேலும், உன் நிருவாணம் காணப்படாதபடிக்குப் படிகளால் நம்முடைய பலிப்பீடத்தின் மேல் ஏற வேண்டாம்.
×

Alert

×