Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ephesians Chapters

Ephesians 4 Verses

1 ஆகவே, ஆண்டவருடைய கைதியாகிய நான், உங்களுக்கு அறிவுறுத்துவதாவது: நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ற வாழ்க்கை நடத்துங்கள்.
2 நிறைவான தாழ்ச்சியும் சாந்தமும் பொறுமையும் உள்ளவர்களாய், நடந்து, அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்.
3 தேவ ஆவி அளிக்கும் ஒருமைப்பாட்டைச் சமாதானம் என்னும் பிணைப்பால் காப்பாற்றக் கண்ணும் கருத்துமாய் இருங்கள்.
4 ஒரே நம்பிக்கையில் பங்கு பெற நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே நம்பிக்கை இருப்பதுபோல், ஒரே உடலும் ஒரே ஆவியும் உண்டு.
5 அவ்வாறே ஒரே ஆண்டவர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்தானம் உண்டு.
6 எல்லாருக்கும் கடவுளும் தந்தையும் ஒருவரே, அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லாரிலும் செயலாற்றுபவர், எல்லாருக்குள்ளும் இருப்பவர்.
7 ஆனால், கிறிஸ்து கொடுக்க விரும்பிய அளவுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டது.
8 ஆகையால் தான், 'அவர் உள்ளத்திற்கு ஏறிச் சென்றபோது பகைவரைக் கைதியாக்கிக் கொண்டு சென்றார்; மனிதர்களுக்குக் கொடைகளை அருளினார்' என்று எழுதியுள்ளது.
9 "ஏறிச் சென்றார்" என்பதனால் முதலில் மண்ணுலகின் கீழ்ப்பகுதிக்கு இறங்கினார் என்று விளங்குகிறதன்றோ.
10 கீழே இறங்கியவர் தான் ஏழு உலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர். இங்ஙனம் சென்றது, அனைத்தும் நிறைவு பெறச் செய்வதற்கே.
11 பின்னர், அவர் தம் 'கொடைகளை' அருளிச் சிலரை அப்போஸ்தலராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியின் தூதர்களாகவும் ஆயர்களாகவும் போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.
12 கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும், திருப்பணிக்குரிய வேலையை முன்னிட்டு இறைமக்களைப் பக்குவப்படுத்தவும் அக்கொடகைளை அளித்தார்.
13 இவ்வாறு, இறுதியாக நாம் எல்லாரும் கடவுளின் திரு மகனைப் பற்றிய விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பாட்டை எய்துவோம்; கிறிஸ்துவினுடைய முழுப் பருவத்தின் அளவை அடைந்து முதிர்ச்சிபெற்ற மனிதனாவோம்.
14 ஆகவே, இனி நாம் குழந்தைகளாய் இருத்தலாகாது. மனிதருடைய சூழ்ச்சியையும், கைதேர்ந்த ஏமாற்று வித்தையையும் நம்பி, அவர்களுடைய போதனையாகிய காற்றால், அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக் கூடாது.
15 அன்பினாலே உண்மையைப் பற்றிக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள்ளாக எல்லாவற்றிலும் நாம் வளரவேண்டும்.
16 இறுக்கிப் பிணைக்கும் தசை நார்களால் உடல் செயலால் முழுமையும் அவர் ஒன்றாய் இணைந்து, இசைவாய்ப் பொருந்தி இருக்கிறது. அதனால், ஒவ்வொரு உறுப்பும் அதனதன் அலுவலுக்கேற்பச் செயல்படுவதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பினால் கட்டடமாக எழும்புகிறது.
17 எனவே ஆண்டவருக்குள் நான் உங்களுக்கு வற்புறுத்திக் கூறுவதாவது. புற இனத்தார் நடப்பதுபோல் இனி நீங்கள் நடக்கலாகாது. அவர்கள் மனத்தில் தோன்றும் எல்லா வீண் எண்ணங்களையும் பின்பற்றி வாழ்கின்றனர்.
18 அவர்களுடைய அறிவு இருளடைந்து உள்ளம் மழுங்கியதால் அவர்களுக்கு ஏற்பட்ட அறியாமையால், கடவுள் தரும் உயிரோடு தொடர்பின்றி வாழ்கின்றனர்.
19 உள்ளம் மரத்துப்போனவர்களாய், தீராத இச்சைக்கு உட்பட்டு, எல்லா வகையான அசத்த செயல்களையும் செய்ய, காமவெறிக்குத் தங்களையே கையளித்துவிட்டனர்.
20 ஆனால், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றி இவ்வாறு கற்றறியவில்லை.
21 உங்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவிக்கப்பட்டதும், போதிக்கப்பட்டதும் அவரில் அடங்கியுள்ள உண்மைக்கு ஏற்ப இருந்ததன்றோ?
22 அதன்படி உங்களுடைய முந்தின நடத்தையை விட்டுவிட்டு, தீய இச்சைகளால் ஏமாந்து பாழ்பட்டுப் போகும் பழைய இயல்பைக் களைந்துவிடுங்கள்;
23 உள்ளத்தின் ஆழத்தில் உங்களைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்;
24 உண்மையால் ஏற்படும் நீதியிலும் புனிதத்திலும் கடவுள் சாயாலாகப் படைக்கப் பட்ட புதிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்.
25 ஆகையால், பொய்யை விலக்கி, ஒருவரிடம் ஒருவர் உண்மையே பேசுங்கள். ஏனெனில், நாம் ஒருவருக்கொருவர் உறுப்புகளாய் இருக்கிறோம்.
26 சினம்கொண்டாலும் பாவத்திற்காளாகாதீர்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும்.
27 அலகைக்கு இடம் கொடாதீர்கள். திருடன் இனித் திருடாமலிருக்கட்டும்.
28 மாறாக, வறியவர்களுக்கு உதவக்கூடிய முறையில், நேர்மையோடு கையால் பாடுபட்டு உழைக்கவேண்டும்.
29 தீய சொல் எதுவும் உங்கள் வாயினின்று வராதிருக்கட்டும். கேட்போருக்கு அருட் பயன் விளையுமாறு தேவைக்கு ஏற்றபடி ஞான வளர்ச்சி தரக்கூடிய நல்ல வார்த்தைகளையே சொல்லுங்கள்.
30 கடவுளின் பரிசுத்த ஆவிக்கு வருத்தம் விளைவிக்காதீர்கள். ஏனெனில், அவர் மீட்பின் நாளை முன்னிட்டு உங்களுக்குத் தம் முத்திரையிட்டிருக்கிறார்.
31 மனக்கசப்பு, சீற்றம், சினம், வீண்கூச்சல், பழிச்சொல் ஆகிய அனைத்தும் உங்களை விட்டொழியட்டும். எல்லா வகையான தீய மனமும் நீங்கட்டும்.
32 ஒருவருக்கொருவர் பரிவும், இரக்கமும் காட்டுங்கள், கிறிஸ்துவுக்குள் கடவுள் உங்களை மன்னித்தது போல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.
×

Alert

×