Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ephesians Chapters

Ephesians 2 Verses

1 நீங்களோ உங்கள் குற்றங்களாலும் பாவங்களாலும் இறந்தவர்களாய் இருந்தீர்கள்.
2 ஒரு காலத்தில் வான்வெளியில் தலைவனுக்கு அடங்கி இவ்வுலகப் போக்கின் படி பாவ வழியில் நடந்தீர்கள். இறைவனுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்பொழுது செயலாற்றும் அந்த ஆவிக்குப் பணிந்து இருந்தீர்கள்.
3 இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இருந்தோம். தம்முடைய ஊனியல்பின் இச்சைகளின்படி வாழ்ந்து, அவ்வியல்பும் அதன் நாட்டங்களும் தூண்டியவாறு நடந்து, மற்றவர்களைப் போல நாமும் இயல்பாக இறைவனின் சினத்திற்கு ஆளாகியிருந்தோம்.
4 ஆனால், கடவுள் இரக்கப் பெருக்கமுள்ளவர், அன்புமிக்கவர், நம் குற்றங்களால் நாம் இறந்தவர்களாய் இருந்தபோதிலும்,
5 அவர் நம்மீது கொண்ட பேரன்பினால் கிறிஸ்துவோடு நாம் உயிர்பெறச் செய்தார்.
6 நீங்கள் மீட்புப் பெற்றிருப்பது அருளாலேயே கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் அவரோடு உயிர்த்தெழவும், விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார்.
7 கிறிஸ்து இயேசுவில் இறைவன் நம்மீது காட்டிய பரிவினாலே தம் அளவற்ற அருள் வளத்தை, வரப்போகும் காலங்களில் காண்பிப்பதற்காகவே இவையெல்லாம் செய்தார்.
8 அந்த அருளாலேயே விசுவாசத்தின் வழியாக மீட்பு அடைந்திருக்கிறீர்கள். இது உங்களால் ஆனதன்று; கடவுளின் நன்கொடையே.
9 இது மனித செயல்களால் ஆனதன்று; எனவே, எவனும் பெருமை பாராட்டிக்கொள்ளலாகாது. ஏனென்றால் நாம் இறைவனின் கைவேலையே.
10 நாம் செய்ய வேண்டுமென்று கடவுள் முன்னேற்பாடு செய்த நற்செயல்களில் நாம் ஈடுபடுவதற்கே கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் படைக்கப்பட்டோம்.
11 எனவே, உங்கள் முன்னைய நிலையை எண்ணிப் பாருங்கள்: பிறப்பால் புற இனத்தாராகத் தானே இருந்தீர்கள். கையால் செய்த விருத்தசேதனத்தை உடலில் மட்டுமே பெற்றுக்கொண்டவர்கள் உங்களை விருத்தசேதனம் பெறாதவர்கள் என இகழ்ந்தார்கள்.
12 ஒரு காலத்தில் மெசியாவின்றி, இஸ்ராயேலரின் சமுதாயத்தோடு உறவின்றி இருந்தீர்கள்; வாக்குறுதியைக் கொண்டிருந்த உடன்படிக்கைகளுக்கு அந்நியராகவும் இருந்தீர்கள். நம்பிக்கையற்றவராய் கடவுள் இல்லாதவராய் இவ்வுலகில் இருந்தீர்கள்.
13 ஒரு காலத்தில் தொலைவில் நின்ற நீங்கள். இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் அவருடைய இரத்தத்தினால் அருகே கொணரப்பெற்றீர்கள்.
14 ஏனெனில், கிறிஸ்துவே நம் சமாதானம். அவரே யூத இனத்தையும் புறவினத்தையும் ஒன்றாய் இணைத்தார். தடைச் சுவரென நின்ற பகைமையைத் தம் ஊனுடலில் தகர்த்தெறிந்தார்;
15 இவ்விரு இனத்தாரிலிருந்தும் தமக்குள் புதியதொரு மனுக்குலத்தைப் படைத்துச் சமாதானம் செய்யும்படி, பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை வெறுமையாக்கினார்;
16 சிலுவையினால் பகைமையை ஒழித்து, அதன் வழியாக இவ்விருதிறத்தாரையும் ஒரே உடலில் கடவுளோடு ஒப்புரவாக்கும்படியும் இவ்வாறு செய்தார்.
17 அவர் வந்து, தொலைவில் நின்ற உங்களுக்கும் அருகிலிருந்தவர்களுக்கும் சமாதான நற்செய்தியை அறிவித்தார்.
18 அவர் வழியாகவே இருதிறத்தாராகிய நாம் ஒரே தேவ ஆவியில் தந்தையை அணுகும் பேறு பெற்றோம்.
19 எனவே, இனி நீங்கள் அந்நியரல்ல, வெளிநாட்டாருமல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர், கடவுளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
20 அப்போஸ்தலர், இறைவாக்கினர் இவர்களை அடிக்கல்லாகவும். கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டமாயிருக்கிறீர்கள்.
21 கட்டடம் முழுவதும் அவரில் இசைவாய்ப் பொருந்தி, பரிசுத்த ஆலயமாக ஆண்டவருக்குள் வளர்ச்சி, பெறுகிறது.
22 நீங்களும் அவருக்குள்ளே கடவுளின் ஒரே உறைவிடமாக, தேவ ஆவிக்குள் கட்டுப்பட்டு வருகிறீர்கள்.
×

Alert

×