Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Deuteronomy Chapters

Deuteronomy 22 Verses

1 உன் சகோதரனுடைய ஆடேனும் மாடேனும் வழிதப்பி அலைவதை நீ கண்டால், அப்பால் செல்லாமல் அதை உன் சகோதரனிடத்திற்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.
2 உன் சகோதரன் உன் உறவு முறையானாய் இராமலும், அறிமுகமாய் இராமலும் இருந்தபோதிலும் நீ அவற்றை உன் வீட்டுக்குக் கொண்டுபோய், அவற்றை உன் சகோதரன் தேடி வருமட்டும் உன்னிடத்திலே வைத்திருந்து அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.
3 அப்படியே அவன் கழுதையைக் குறித்தும், ஆடையைக் குறித்தும், அவனிடத்திலிருந்து காணாமற்போன எந்தப் பொருளைக் குறித்தும் செய்யக் கடவாய். நீ அவைகளில் எதையேனும் கண்டுபிடிப்பாயாயின், காணாதவன் போல்: எனக்கென்ன என்று அதை விட்டுப்போகலாகாது.
4 உன் சகோதரனுடைய கழுதையேனும் மாடேனும் வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டாயாயின், அதைக் காணாதவன் போல் விட்டுப்போகாமல், அவனோடு சேர்ந்து அதைத் தூக்கி எடுக்கக்கடவாய்.
5 ஆடவரின் உடைகளைப் பெண்களும் பெண்களின் உடைகளை ஆடவரும் அணியலாகாது. அப்படிச் செய்கிறவர்களைக் கடவுள் வெறுக்கிறார்.
6 நீ வழியில் நடந்துபோக, ஒரு மரத்திலேனும் தரையிலேனும் ஒரு குருவிக்கூடு தென்பட்டது. அப்பபொழுது குஞ்சுகளின் மேல் அல்லது முட்டைகளின் மேல் தாய் அடைகாத்துக் கொண்டு இருக்குமாயின், நீ குஞ்சுகளோடு தாயையும் பிடிக்கலாகாது.
7 ஆனால், தாயைப் போகவிட்டுக் குஞ்சுகளை முட்டும் எடுத்துக்கொண்டு போகலாம். அப்படிச் செய்தால் நீ நன்றாய் இருப்பாய்; உன் வாழ்நாட்களும் நீடித்திருக்கும்.
8 நீ புது வீட்டை கட்டினால், சிலவேளை ஒருவன் மேல்மாடியிலிருந்து கால் நழுவிக் கீழே விழுந்தால், இரத்தப்பழி உன் வீட்டையே சாரும். அப்படி நிகழாவண்ணம், உன்மேல் பாவம் வராதபடிக்கு வீட்டு மாடியைச் சுற்றிலும் கைபிடிச்சுவரைக் கட்டவேண்டும்.
9 உன் கொடிமுந்திரித் தோட்டத்திலே வேறு விதையை விதைக்காதே. விதைத்தால், நீ விதைத்தவைகளின் பயிரும் கொடிமுந்திரித் தோட்டத்தின், பயிரும் கடவுளுக்கே நேர்ச்சி செய்ய வேண்டியதாகும்.
10 மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழலாகாது,
11 ஆட்டுமயிரும் சணல்நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்திக் கொள்ளலாகாது.
12 நீ அணிந்து கொள்கிற உன் மேற்போர்வையின் நான்கு விளிம்புகளிலும் தொங்கல்களை அமைத்துக் கொள்வாயாக.
13 ஒரு பெண்ணை மணந்து கொண்ட ஒருவன் பிறகு அவளை வெறுத்து:
14 நான் அந்தப் பெண்ணை மணம் புரிந்து அவளிடம் மணவுறவு கொண்டபோது அவள் கன்னியல்லள் என்று கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அவள்மீது பொல்லாத அவதூறான காரியங்களைத் தூற்றி அவளைத் தள்ளிவைக்க நேரம் பார்த்துக் கொண்டிருப்பானாயின்,
15 அவளுடைய தந்தையும் தாயும் நகரவாயிலிலுள்ள பெரியோர்களிடம் அவளைக் கூட்டிக்கொண்டுபோய், அவளுடைய கன்னிமையின் அடையாளங்களைக் காண்பிக்க ஆயத்தமாய் இருப்பார்கள்.
16 என் மகளை இவனுக்கு மனைவியாகக் கொடுத்தேன். இவன் அவள்மேல் வெறுப்புக் கொண்டமையால்:
17 நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லை என்று அவள்மேல் மிகக்கேடான அவதூறு சாற்றியிருக்கிறான். என் மகளுடைய கன்னிமையின் சான்று இங்கே இருக்கிறது, பாருங்கள் என்று சொல்லி, (அவளுடைய) ஆடையை நகரப் பெரியார்களின் முன்பாக விரித்துக் காட்டுவான்.
18 அப்பொழுது அந்நகரப் பெரியார்கள் அந்த மனிதனைப் பிடித்துக் கசையால் அடிப்பார்கள்.
19 அவன் இஸ்ராயேலில் ஒரு கன்னியை மிகக்கேடான அவதூறு செய்தமையால், பெரியோர்களின் தீர்ப்புப்படி அவன் பெண்ணின் தந்தைக்கு நூறு சீக்கில் வெள்ளியை அபராதம் செலுத்த வேண்டியது மன்றி, அவளைத் தன் மனைவியாகவே வைத்துக்கொண்டு, தன் உயிருள்ளளவும் அவளைத் தள்ளிவிடவும் கூடாது.
20 ஆனால், அந்தப் பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்னும் காரியம் மெய்யானால்,
21 (பெரியோர்கள்) அந்தப் பெண்ணைத் தன் தந்தையின் வீட்டு வாயிலினின்று துரத்திவிட, அவள் தன் தந்தையின் வீட்டிலே விபசாரம் செய்ததனால் இஸ்ராயேலில் மதிகெட்ட அக்கிரமஞ்செய்தாளென்று அந்நகர மனிதர் அவளைக் கல்லாலெறிந்து கொல்லக்கடவார்கள். இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
22 ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு மணஉறவு கொண்டால், விபசாரனும் விபசாரியுமாகிய அவ்விருவரும் சாவார்கள். இப்படியே தீமையை இஸ்ராயேலினின்று விலக்கக்கடவாய்.
23 கன்னிப்பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு அவளோடு உறவு கொண்டால்,
24 அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிட்டுக் கூப்பிடாததனாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கெடுத்ததனாலும், இருவரும் அந்த நகரத்து வாயிலுக்கு முன் கொண்டுபோகப்பட்ட பின்பு கால்லாலெறியப்பட்டுச் சாகக்கடவார்கள். இப்படியே நீ தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாய்.
25 ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை மற்றொருவன் வெளியே கண்டு வலுவந்தமாய்ப் பிடித்து அவளோடு உறவு கொண்டால் இவன் மட்டும் சாகக்கடவான்.
26 அந்தப் பெண்ணுக்கு ஒரு தீங்கும் செய்யலாகாது. அவள்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை. உள்ளபடி ஒரு பாதகன் தன் சகோதரன்மேல் விழுந்து அவனுடைய உயிரை வாங்கினால் எவ்விதமோ, அவ்விதமே இந்தப் பெண்ணுக்கும் நேர்ந்தது.
27 அவள் வெளியே துணையில்லாமல் இருந்தாள். அவள் கூக்குரலிட்டும், அவளை விடுவிப்பார் ஒருவருமில்லை.
28 ஒருவருக்கும் நியமிக்கப்படாத கன்னிப் பெண்ணை ஒருவன் கண்டு வலுவந்தமாய்ப் பிடித்து அவளோடு உறவுகொண்டான். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, காரியம் வழக்குக்கு வந்தால்,
29 அவளோடு உறவுகொண்ட மனிதன் ஐம்பது சீக்கல் வெள்ளியைப் பெண்ணின் தந்தைக்குக் கொடுக்கக்கடவான். அவன் அவளைக் கெடுத்தனால், அவளை மனைவியாகக் கொண்டு, உயிர் உள்ளளவும் அவளைத் தள்ளி விடலாகாது.
30 ஒருவனும் தன் தந்தையின் மனைவியைச் சேரலாகாது, அவளுடைய மறைவிடத்தை வெளிப்படுத்தலும் ஆகாது.
×

Alert

×