Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Colossians Chapters

Colossians 1 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Colossians Chapters

Colossians 1 Verses

1 கிறிஸ்துவுக்குள் வாழ்வோரும் விசுவாசமுள்ள சகோதரர்களுமான கொலோசே நகரத்து இறைமக்களுக்கு,
2 கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயசுவின் அப்போஸ்தலனான சின்னப்பனும், சகோதரர் தீமோத்தேயுவும் எழுதுவது: நாம் தந்தையாகிய கடவுளிடமிருந்து உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
3 உங்களுக்காகச் செபிக்கும்போது நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய கடவுளுக்கு என்றும் நன்றிகூருகிறோம்.
4 ஏனெனில், வானகத்தில் உங்களுக்கென வைத்திருக்கும் நன்மைகளில் நீங்கள் நம்பிக்கை கொண்டதால் கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கு எத்தகைய விசுவாசம் உண்டென்றும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் எவ்வித அன்பு காட்டுகிறீர்களென்றும் கேள்வியுற்றோம்.
5 நற்செய்தியாகிய உண்மை வார்த்தையை நீங்கள் முன்பு கேட்டபோது இந்நம்பிக்கை உங்களுக்கு உண்டாயிற்று.
6 இந்த நற்செய்தி உலகம் முழுவதும் பரவிப் பயனளித்து வளர்ந்து வருகிறது. அது உங்களையும் வந்தடைந்தது. கடவுளுடைய அருளைப் பற்றிய அச்செய்தியை நீங்கள் கேட்டு, அதன் உண்மையான பொருளை உணர்ந்த நாள்முதல் உங்களிடையிலும் வளர்ந்து வருகிறது.
7 எம் அன்புள்ள உடன் ஊழியரான எப்பாப்பிரா இந்த அருளைப் பற்றி உங்களுக்குக் கற்பித்தார். இவர் எங்கள் சார்பில் பணி செய்பவர், கிறிஸ்துவின் விசுவாசமுள்ள பணியாளர்.
8 தேவ ஆவியினால் உங்களிடம் உண்டான அன்பைப்பற்றி அவர்தான் எங்களுக்கு அறிவித்தார்.
9 அதனால் நாங்கள் இச்செய்தியைக் கேள்விப் பட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாது செபிக்கிறோம், நீங்கள் முழு ஞானத்தையும் தேவ ஆவிக்கேற்ற அறிவுத் திறனையும் அடைந்து இறைவனுடைய திருவுளத்தை உணரும் அறிவை நிறையப் பெறுமாறு மன்றாடுகிறோம்.
10 இவ்வாறு நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவர்களாய் இருக்கும்படி, அவருக்கு ஏற்ப வாழ்க்கை நடத்துவீர்கள்; எல்லா வகையான நற்செயல்களால் நற்பயன் விளைத்து கடவுளை அறியும் அறிவில் நீங்கள் மேன்மேலும் வளர்வீர்கள்;
11 அவருடைய மாட்சிமை மிக்க ஆற்றலுக்கேற்ப எந்நிலையிலும் பொறுமையும் மன உறுதியும் கொண்டிருக்கும்படி முழு வல்லமையாலும் வலப்படுத்தப் பெறுவீர்கள்;
12 பரம தந்தை ஒளியினிடையே தம் மக்களுக்குத் தந்த உரிமைப் பேற்றில் பங்கு பெற நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கியதற்காக அவருக்கு மகிழ்வோடு நன்றிக்கூருவீர்கள்.
13 அவரே இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுவித்து, தம் அன்பார்ந்த மகனுடைய அரசில் கொண்டு வந்து சேர்த்தார்.
14 இம் மகனால் தான் நமக்கு மீட்பு உண்டு, பாவமன்னிப்பு உண்டு.
15 அவர் கட்புலனாகாக் கடவுளின் சாயல், படைப்புக் கெல்லாம் தலைப்பேறானவர்;
16 ஏனெனில், அவரில் அனைத்தும் உண்டாயிற்று. விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை கட்புலனாவன, கட்புலனாகாதன, அரியணை சூழ்வோர், ஆட்சி புரிவோர், தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்குவோர் ஆகிய வானதூதர் அனைவரும் உண்டானது அவரிலேதான். அவராலேயே அவருக்காகவே அனைத்தும் ஆயின.
17 அனைத்துக்கும் முன்பே உள்ளவர் அவர்; அனைத்தும் அவரில் இணைந்து நிலைக்கும்.
18 திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் அவரே. ஆதியானவரும் அவரே. அனைத்திலும் முதன்மை பெறும்படி இறந்தோரினின்று பிறந்த தலைப்பேறு அவரே.
19 முழுநிறைவும் அவரில் குடிகொள்ள வேண்டுமென்று இறைவன் திருவுளம் கொண்டார்.
20 சிலுவையில் அவர் சிந்திய இரத்தத்தால் சமாதானம் உண்டாக்கி விண்ணிலும் மண்ணிலும் உள்ள யாவற்றையும் அவர் வழியாகத் தம்மோடு ஒப்புரவாக்க விரும்பினார்.
21 முன்னர் நீங்கள் இறைவனோடு உறவிழந்து நின்றீர்கள்; அவர்மீது பகையுள்ளம் கொண்டவர்களாய்த் தீய செயல்களில் மூழ்கி இருந்தீர்கள்.
22 இப்பொழுதோ உங்களை மாசு மறுவும் குறைப்பாடுமின்றிப் பரிசுத்தர்களாய்த் தம் திருமுன் நிறுத்த இறைவன் விரும்பி, கிறிஸ்துவுடைய ஊனுடலில் அவருடைய சாவின் வழியாக உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
23 ஆனால் நீங்கள் கேட்ட நற்செய்தியில் அடங்கியுள்ள நம்பிக்கையை நழுவவிடாது, விசுவாசத்தில் உறுதியாக ஊன்றி நிலைத்து நிற்கவேண்டும். வானத்தின் கீழுள்ள எல்லாப் படைப்புக்கும் அறிவிக்கப்பட்ட இந்த நற்செய்திக்குத் தான் சின்னப்பனாகிய நான் பணியாளன் ஆனேன்.
24 உங்களுக்காக நான் படும் துன்பங்களில் இப்பொழுது மகிழ்ச்சிகொள்கிறேன். திருச்சபையாகிய தம் உடலின் பொருட்டு கிறிஸ்துபடவேண்டிய வேதனைகளில் இன்னும் குறைவாய் இருப்பதை என் உடலில் நிறைவாக்குகிறேன்.
25 கடவுளின் வார்த்தையை அறிவிக்கும் அலுவலை. நிறைவேற்ற, கடவுள் உங்களை முன்னிட்டு எனக்களித்த பொறுப்பை ஏற்றுள்ளதால் நான் திருச்சபையின் பணியாளன் ஆனேன்.
26 நான் அறிவிப்பதோ மறைவான இறைத்திட்டம். ஊழூழியாக, தலைமுறை தலைமுறையாக ஒளிவிலிருந்த இத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளியாக்கப் பட்டுள்ளது.
27 ஏனெனில், இத்திட்டத்தின் மாட்சிமை புறவினத்தாரிடையே எவ்வளவு வளமிக்கதாய் உள்ளது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க இறைவன் திருவுளங் கொண்டார். கிறிஸ்து உங்களுக்குள் இருத்தலே அத்திட்டம் நாம் மாட்சிமை அடைவோம் என்பதற்கு அவரே, நம் நம்பிக்கை.
28 அவரையே நாங்கள் அறிவிக்கிறோம். கிறிஸ்துவுக்குள் ஒவ்வொருவருக்கும் முழு ஞானத்தோடு போதிக்கிறோம்.
29 என்னுள் வல்லமையோடு செயல்படும் ஆற்றலுக்கேற்ப இந்நோக்கத்திற்காகவே நான் பாடுபட்டு உழைக்கிறேன்,.
×

Alert

×