Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Amos Chapters

Amos 8 Verses

1 இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: இதோ, கனிந்த பழங்களுள்ள கூடையொன்று கண்டேன்.
2 அவர், "ஆமோசே, என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்; நான், "கனிந்த பழங்களுள்ள கூடை" என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்: "நம் மக்களாகிய இஸ்ராயேல் மீது முடிவு வந்து விட்டது, இனி அவர்களை ஒருபோதும் மன்னியோம்.
3 அந்நாளில் கோயில் பாடல்கள் புலம்பல்களாய் மாறும், திரளான மக்கள் மாண்டு கிடப்பார்கள், கண்ட கண்ட இடங்களில் அவை எறியப்படும், எங்கும் மயான அமைதி! " என்கிறார் இறைவனாகிய ஆண்டவர்.
4 எளியவர்களை நசுக்கி, நாட்டில் உள்ள ஏழைகளை ஒழிக்கத் தேடுகிறவர்களே, இதைக் கேளுங்கள்:
5 நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? முடிந்தால், கோதுமையை நல்ல விலைக்கு விற்கலாம், படியைச் சிறிதாக்கி, ஷூக்கெல் நிறையை உயர்த்தி கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்;
6 பணத்துக்கு ஏழைகளையும், ஒரு சோடி செருப்புக்கு எளியவர்களையும் வாங்கலாம், கோதுமைப் பதர்களையும் விற்கலாம்" என்றெல்லாம் நீங்கள் ஏங்குகிறீர்கள்.
7 ஆண்டவர் யாக்கோபின் பெருமை மீது ஆணையிட்டுக் கூறுகிறார்: "அவர்களுடைய இந்தச் செயல்களில் ஒன்றையேனும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
8 இதனாலன்றோ நிலம் நடுங்குகிறது? இதில் வாழ்பவர் யாவரும் புலம்புகின்றனர்? நிலம் முழுவதும் நைல் நதியின் வெள்ளம் போலப் பொங்கி, எகிப்து நாட்டு நைல் நதி போல் அலை மோதி அடங்குகிறது?
9 இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: "அந்நாளில், நண்பகலில் கதிரவனை மறையச் செய்து பட்டப் பகலிலே நாம் பூமியை இருள் சூழச் செய்வோம்.
10 உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களையெல்லாம் புலம்பல்களாகவும் மாற்றுவோம்; ஒவ்வொருவனையும் இடையில் கோணியுடுத்தவும், ஒவ்வொரு தலையும் மழிக்கப்படவும் செய்வோம். ஒரே பிள்ளையைப் பறிகொடுத்துப் புலம்புவது போலப் புலம்பச் செய்வோம்; அதன் முடிவு கசப்பு மிக்க நாளாய் இருக்கும்.
11 இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ நாட்கள் வருகின்றன; அப்போது நாட்டில் பஞ்சம் அனுப்புவோம்; அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று, ஆண்டவரின் வார்த்தையைக் கேட்காதிருக்கும் பஞ்சமே அது.
12 ஒரு கடல் முதல் இன்னொரு கடல் வரைக்கும் வடதிசை முதல் கீழ்த்திசை வரை தேடியலைந்து அங்குமிங்கும் தள்ளாடி ஆண்டவரின் வார்த்தையைத் தேடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைக் கண்டடைய மாட்டார்கள்.
13 அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும் இளைஞர்களும் நீர் வேட்கையால் சோர்ந்து வீழ்வார்கள்.
14 சமாரியா நாட்டு அஷீமா தெய்வத்தின் பேரால் ஆணையிட்டு, ' தாண் நாடே, உன் கடவுளின் உயிர் மேல் ஆணை!' என்றும், 'பெயேர்ஷூபாவே, உன் அன்பரின் உயிர் மேல் ஆணை!' என்றும் சொல்லுகிறவர்கள் (மாண்டு) வீழ்வார்கள், வீழ்ந்தவர்கள் எழவே மாட்டார்கள்."
×

Alert

×