1
|
இஸ்ராயேல் மக்களே, உங்களுக்கு எதிராக- எகிப்து நாட்டினின்று நாம் கூட்டிவந்த முழுக்குடும்பமாகிய உங்களுக்கு எதிராக- ஆண்டவர் உரைத்த இந்த வாக்கைக் கேளுங்கள்: |
2
|
உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத் தான் நாம் அறிந்து கொண்டோம்; ஆதலால் உங்கள் அக்கிரமங்கள் அனைத்திற்காகவும் நாம் உங்களைத் தண்டிப்போம். |
3
|
தங்களுக்குள் ஏற்கெனவே உடன்படாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ? |
4
|
இரை அகப்படாமல் இருக்கும் போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? தான் ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையில், குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்கம் செய்யுமோ? |
5
|
வேடன் தரையில் வலை விரிக்காதிருக்கும் போதே பறவை கண்ணியில் சிக்கிக் கொள்வதுண்டோ? ஒன்றுமே கண்ணியில் படாதிருக்கும் போது வலை தரையை விட்டு மேலெழும்புமோ? |
6
|
நகரத்தில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ? ஆண்டவர் அனுப்பாமல், நகரத்துக்குத் தீமை தானாக வருமோ? |
7
|
தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்கும் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், ஆண்டவராகிய இறைவன் ஏதும் செய்வதில்லை. |
8
|
சிங்கம் கர்ச்சனை செய்கிறது, அஞ்சி நடுங்காதவன் எவன்? கடவுளாகிய ஆண்டவர் பேசுகிறார், இறைவாக்கு உரைக்காதவன் எவன்?" |
9
|
அசீரியாவின் அரண்மனைகள் மேலும் எகிப்து நாட்டின் அரண்மனைகள் மேலும் நின்று கொண்டு இதை விளம்பரப்படுத்து: "சமாரியாவின் மலைகள் மேல் ஒன்று கூடுங்கள், அதனுள் நடக்கும் பெருங் குழப்பங்களையும் அதில் செய்யப்படும் கொடுமைகளையும் பாருங்கள்." |
10
|
நேர்மையானதைச் செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை" என்கிறார் ஆண்டவர். "அவர்கள் தங்கள் அரண்மனைகளில் வன்முறைகளையும் கொள்ளையையும் குவிக்கிறார்கள்." |
11
|
ஆகையால் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "நாட்டைப் பகைவன் வந்து சூழ்ந்து கொள்வான், உன் அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான், உன் மாளிகைகள் கொள்ளையிடப்படும்." |
12
|
ஆண்டவர் கூறுவது இதுவே: "சிங்கத்தின் வாயிலிருந்து இடையன் தன் ஆட்டின் இரண்டு கால்களையோ, காதின் ஒரு பகுதியையோ விடுவிப்பது போலவே, சமாரியாவில் பஞ்சணை மீதும் மெல்லிய படுக்கையின் மேலும் அமர்ந்திருக்கும் இஸ்ராயேல் மக்கள் விடுவிக்கப்படுவார்கள்." |
13
|
இதைக் கேளுங்கள், கேட்டு யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச் சாட்சியம் சொல்லுங்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன், சேனைகளின் கடவுள். |
14
|
அதாவது: இஸ்ராயேலை அதன் மீறுதல்களுக்காகத் தண்டிக்கும் நாளில், பேத்தேலில் உள்ள பீடங்களையும் நாம் தண்டிப்போம்; பலி பீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டுத் தரையிலே வீழும். |
15
|
குளிர்கால மாளிகை, வேனிற்கால அரண்மனைகளை இடித்திடுவோம், தந்தத்தால் இழைத்த வீடுகள் அழிந்துபோகும், எண்ணிறந்த வீடுகள் பாழாய்ப்போகும்" என்கிறார் ஆண்டவர். |
Amos 3:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...