Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Thessalonians Chapters

2 Thessalonians 2 Verses

1 சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைப்பற்றியும், அவரோடு நாம் ஒன்று கூடுதல் பற்றியும் உங்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது
2 ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என யாராவது தேவ ஆவியின் வாக்காகவோ, திருவுரையாகவோ, நாங்கள் எழுதிய கடிதத்தின் செய்தியாகவோ சொன்னால், நீங்கள் உடனே நிலைகுலைந்து மனங்கலங்கவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
3 எவனும் உங்களை எவ்வாறேனும் ஏமாற்ற விடாதீர்கள். அந்த நாள் வருமுன் இறைவனை எதிர்க்கும் கிளர்ச்சி நிகழ வேண்டும். அக்கிரமமே உருவான மனிதன், அழிவுற வேண்டியவன் வெளிப்பட வேண்டும்.
4 இவன் இறைவனுக்கு எதிரி. தெய்வம் எனப்படுவது, வழிபாடு பெறுவது அனைத்திற்கும் மேலாகத் தன்னையே உயர்த்திக்கொள்வான். கடவுளுடைய ஆலயத்தில் அமர்ந்து, தன்னைக் கடவுளெனக் காட்டிக்கொள்ளும் அளவுக்குத் துணிவான்.
5 உங்களோடிருந்தபொழுது இவற்றையெல்லாம் நான் உங்களுக்குக் கூறிவந்தேன்; உங்களுக்கு நினைவு இல்லையா?
6 குறித்த காலம் வருமுன், அவன் வெளிப்படாதபடி இப்பொழுது தடையாயிருப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியுமே.
7 அக்கிரமத்தின் மறைவான ஆற்றல் ஏற்கனவே செயல்படுகிறது. ஆனால், தற்போது தடையாயிருப்பவன் நீக்கப்படும்வரையில் தடைசெய்வான்.
8 பின்னரே அந்த அக்கிரமி வெளிப்படுவான். ஆண்டவர் தம் வாயின் ஆவியினால் அவனை அழித்து விடுவார். அவர் விரும்பியபோது தம் பிரசன்னத்தால் அவனைத் தொலைந்துவிடுவார்.
9 சாத்தானின் வல்லமையோடு அவன் வருவான். எல்லா வகையான போலி அருங்குறிகளையும் அற்புதங்களையும், வல்லமை மிக்க செயல்களையும் செய்து காட்டுவான்.
10 அழிவுறுபவர்களுக்குக் கேடாக அநீதி ஏமாற்றச் செயல்களெல்லாம் நடக்கும். ஏனெனில், அவர்கள் தங்களுக்கு மீட்பைத் தரவல்ல உண்மையின் மீது அன்பு கொள்ள மறுத்தனர்.
11 இதனால், பொய்மையை நம்பச் செய்யும் வஞ்சக ஆற்றலுக்குக் கடவுள் அவர்களை உட்படுத்தினார்.
12 அவ்வாறு உண்மையை விசுவசியாது அநீதத்தில் பற்றுக்கொள்ளும் அனைவரும் தீர்ப்புக்கு உள்ளாவார்கள்.
13 ஆண்டவரால் அன்பு செய்யப்படும் சகோதரர்களே, நாங்கள் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், பரிசுத்தமாக்கும் தேவ ஆவியாலும், உண்மை மீதுள்ள விசுவாசத்தாலும் நீங்கள் மீட்பு அடைவதற்கென்று கடவுள் உங்களைத் தொடக்கமுதல் தேர்ந்துகொண்டுள்ளார்.
14 இதற்காகவே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக, இறைவன் உங்களை அழைத்தார்.
15 எனவே, சகோதரர்களே, எங்களிடமிருந்து வாய் மொழியாகவோ, கடிதத்தின் வழியாகவோ நீங்கள் கற்றறிந்த பரம்பரைப் படிப்பினைகளைப் பற்றிக்கொண்டு நிலையாயிருங்கள்.
16 நம்மேல் அன்பு கூர்ந்து, தம் அருளால் முடிவில்லாத ஆறுதலும், நல்ல நம்பிக்கையும் அளித்த நம் தந்தையாகிய கடவுளும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்
17 உங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளித்து எல்லா வகையான நற்செயலிலும் நற்சொல்லிலும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக.
×

Alert

×