Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Peter Chapters

2 Peter 1 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Peter Chapters

2 Peter 1 Verses

1 நம் கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் நீதிக்கேற்ப, நாங்கள் பெற்ற விசுவாசத்தைப் போலவே மதிப்புள்ள விசுவாசத்தைப் பெற்றுள்ளவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியனும் அப்போஸ்தலனுமான சீமோன் இராயப்பன் எழுதுவது:
2 கடவுளையும் நம் ஆண்டவராகிய இயேசுவையும் அறியச் செய்யும் அறிவினால், உங்களுக்கு அருளும் சமாதானமும் பெருகுக!
3 தமக்கேயுரிய மாட்சிமையாலும், ஆற்றலாலும் நம்மை அழைத்த இறைவனை அறியச் செய்யும் அறிவின் வாயிலாக, இறைப்பற்றுடன் கூடிய வாழ்வை வளர்க்கும் அனைத்தையும் அவரது தெய்வீக வல்லமை நமக்கு வழங்கியுள்ளது.
4 இறைவன் வாக்களித்த கொடைகள் அந்த மாட்சிமையாலும் ஆற்றலாலும் நமக்கு வழங்கப்பட்டன. மதிப்பும் மாண்பும் மிக்க இக்கொடைகளால் நீங்கள், இச்சையின் விளைவாக இவ்வுலகிலுள்ள அழிவுக்குத் தப்பி, இறை இயல்பில் பங்குபெறக்கூடும்.
5 இதை மனத்தில் வைத்து, முழு ஊக்கங்காட்டி, உங்களிடம் விசுவாசத்தோடு நற்பண்பும்,
6 நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மனவுறுதியும்,
7 மனவுறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேசமும், சகோதர நேசத்தோடு அன்பும் இணைந்திருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
8 இப்பண்புகள் உங்களிடம் நிறைந்து செழிக்குமானால், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறியச் செய்யும் அறிவைப் பொறுத்தமட்டில், இவை உங்களைச் சோம்பேறிகளாயும் பயணற்றவர்களாயும் இருக்கவிடா.
9 இவை யாரிடம் இல்லையோ அவன் குருடன், மங்கிய பார்வையுடையவன்: முன் செய்த பாவங்களினின்று தூயவனாக்கப்பட்டதை அவன் மறந்து விட்டான்.
10 சகோதரர்களே, நீங்களோ அழைக்கப்பட்டீர்கள், தேர்ந்து கொள்ளப்பட்டீர்கள்; அவ்வரத்தில் உறுதியாய் நிற்க ஊக்கங்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் ஒரு பொழுதும் தடுமாறமாட்டீர்கள்.
11 இங்ஙனம் நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்வின் முடிவில்லாத அரசில் நுழையும் பேறும் உங்களுக்குத் தாராளமாக அருளப்படும்.
12 இக்கருத்துக்களையெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஏற்றுக்கொண்ட உண்மையில் நிலைபெற்று இருக்கிறீர்கள்; எனினும், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைப்பூட்ட விழைகிறேன்.
13 என் உடலாகிய இக்கூடாரத்தில் தங்கி இருக்கும் வரையில், இப்படி நினைவுறுத்தி, உங்களுக்கு விழிப்பூட்டுவது என் கடமை எனக் கருதுகிறேன்.
14 இக்கூடாரம் பிரிக்கப்படும் நேரம் அடுத்துள்ளது என அறிவேன்; நம் அண்டவராகிய இயேசு கிறிஸ்து அதை எனக்குத் தெரிவித்துள்ளார்.
15 இக்கூடாரத்தைவிட்டு நான் வெளியேறிய பின்னும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவிற் கொள்ள வாய்ப்பு உண்டாகும்படி, என்னால் இயன்றதெல்லாம் இப்போது செய்யப்போகிறேன்.
16 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் நாங்கள் உங்களுக்கு எடுத்துரைத்தபோது, சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளைப் பின்பற்றிப் பேசவில்லை; அவரது மாண்பை நாங்களே கண்ணால் கண்டோம்.
17 "இவரே என் அன்பார்ந்த மகன்; இவரிடம் நான் பூரிப்படைகிறேன்" என்று அவரை நோக்கி உன்னத மாட்சிமையினின்று குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சிமையும் அவர் பெற்றபோது,
18 நாங்கள் அவரோடு பரிசுத்த மலையில் இருந்தோம்; விண்ணினின்று எழுந்த இக் குரலொலியை நாங்களே கேட்டோம்.
19 ஆகவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. இந்த இறைவாக்கை நீங்கள் இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கென மதித்து கவனித்தல் நலம். பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை, அவ்விளக்கு ஒளிர்கிறது.
20 ஆனால் மறைநூலில் உள்ள இறைவாக்கு எதுவும் அவனவன் தரும் விளக்கத்திற்கு உட்படக்கூடியதன்று என்பதை நீங்கள் முதன் முதல் மனத்தில் வைக்க வேண்டும்.
21 ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதரின் விருப்பத்தால் உண்டானதில்லை. மனிதர் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு கடவுளின் ஏவுதலால் பேசினர்.

2 Peter 1 Verses

2-Peter 1 Chapter Verses Tamil Language Bible Words display

COMING SOON ...

×

Alert

×