Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Chronicles Chapters

2 Chronicles 9 Verses

1 சாபாவின் அரசி சாலமோனின் புகழைக் கேள்விப்பட்டு, அவரைப் புதிரான வினாக்களால் சோதிக்கும்படி யெருசலேமுக்கு வந்தாள். நறுமணப் பொருட்கள், பொன், விலையேறப்பெற்ற இரத்தினங்கள் முதலிய திரளான செல்வங்களைச் சுமந்து வந்த ஒட்டகங்களோடு அவள் சாலமோனிடம் வந்து, தன் மனத்திலிருந்த எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துச் சொன்னாள்.
2 அப்பொழுது சாலமோன் அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தகுந்த பதில் சொன்னார். அவரால் விளக்கிக் கூறமுடியாதது ஒன்றுமே இல்லை.
3 சாலமோனின் ஞானத்தையும் அவர் கட்டியிருந்த அரண்மனையையும்,
4 அவர் பந்தியில் பரிமாறப்பட்ட உணவு வகைளையும் அவருடைய அலுவலர்களின் இருக்கைகளையும் ஊழியரின் ஒழுங்கையும், அவர்கள் ஆடைகளையும், பந்தி பரிமாறுவோரையும், அவர்கள் உடுத்தியிருந்த துணி வகைகளையும், ஆண்டவரின் ஆலயத்தில் அவர் செலுத்தி வந்த பலிகளையும் அவள் கண்ட போது பெரிதும் வியப்புற்றாள்.
5 பின் அரசரை நோக்கி, "உம் செயல்களையும், ஞானத்தையும் குறித்து என் நாட்டில் நான் கேள்விப் பட்டதெல்லாம் உண்மையே.
6 நான் இங்கு வந்து நேரில் காணுமுன், மக்கள் சொன்னதை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் அவர்கள் உமது ஞானத்தைப்ற்றிப் பாதி கூடச் சொல்லவில்லை என்று, இப்போது எனது சொந்த அனுபவத்தால் அறிந்து கொண்டேன். நான் கேள்விப்பட்டதை விட நீர் பெரியவராகவே இருக்கின்றீர்! உம் மனைவியர் பேறுபெற்றோர்.
7 எப்போதும் உமக்கு முன்பாக நின்று உமது ஞானத்தின் வார்த்தைகளைக் கேட்கிற உம் ஊழியர்களும் பேறுபெற்றோர்.
8 உம்மைத் தமது அரியணையில் ஏற்றித் தம் அரசராக ஏற்படுத்திய உம் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! ஏனெனில் இஸ்ராயேலருக்கு அவர் அன்பு செய்வதாலும், அவர்களை என்றென்றும் காக்க விரும்புவதாலுமே, அவர்களுக்கு நீதி வழங்குவதற்காக உம்மை அரசராக அவர் ஏற்படுத்தியுள்ளார்" என்று இயம்பினாள்.
9 மேலும் அவள் அரசருக்கு நூற்றிருபது தாலந்து நிறையுள்ள பொன்னையும் திரளான நறுமணப் பொருட்களையும் விலையுர்ந்த இரத்தினங்களையும் கொடுத்தாள். சாபாவின் அரசி சாலமோன் அரசருக்குக் கொடுத்த நறுமணப்பொருட்கள் என்றுமே கண்டிராதவை.
10 ஈராமின் வேலையாட்களும், சாலமோனின் வேலையாட்களும் ஒப்பீரிலிருந்து பொன்னையும் வாசனை மரங்களையும் விலையுர்ந்த இரத்தினங்களையும் கொண்டு வந்தனர்.
11 வாசனை மரங்களால் அரசர் ஆண்டவரின் ஆலயத்திற்கும் அரண்மனைக்கும் படிக்கட்டுகளையும், பாடகர்களுக்குச் சுரமண்டலம், தம்புரு முதலிய இசைக் கருவிகளையும் செய்தார். அதற்கு முன் இத்தகைய மரங்களை யூதேயா நாட்டினர் கண்டதில்லை.
12 சாபாவின் அரசி விரும்பியவற்றையும் கேட்டவற்றையும் சாலமோன் அவளுக்குத் கொடுத்தார். அவள் அரசருக்குக் கொடுத்ததை விட அதிகமாகவே பெற்றுக் கொண்டு தன் பரிவாரத்துடன் நாடு திரும்பினாள்.
13 ஆண்டுதோறும் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையுள்ள பொன் சாலமோனுக்கு வந்து கொண்டிருந்தது.
14 மேலும், பற்பல நாடுகளின் தூதுவர்களும் வணிகர்களும், அரேபியா நாட்டு அரசர்கள் அனைவரும், மாநில ஆளுநர்களும் சாலமோனுக்கு பொன்னும் வெள்ளியும் அளிப்பது வழக்கம்.
15 அரசர் சாலமோன் இருநூறு பொன் ஈட்டிகளைத் தமக்குச் செய்து கொண்டார். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் அறுநூறு சீக்கல் பொன் செலவானது.
16 முந்நூறு கேடயங்களையும் செய்து அவற்றிற்குப் பொன் முலாம் பூசினார். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் முந்நூறு சீக்கல் பொன் செலவானது. அக்கேடயங்களை அரசர் லீபானில் இருந்த 'வனபவனம்' என்ற அரச மாளிகையில் வைத்தார்.
17 அரசர் யானைத் தந்தத்தினால் பெரிய அரியணை ஒன்று செய்து அதைப் பசும்பொன் தகட்டால் வேய்ந்தார்.
18 அவ்வரியணைக்குப் பொன்னால் செய்யப்பட்ட ஆறு படிகளும் ஒரு பாதப்படியும், இரு பக்கத்திலும் கைதாங்கிகளும், ஒவ்வோரு கைதாங்கியின் அருகே இரண்டு சிங்கங்களும் இருந்தன.
19 அப்படிகள் மேல் வேறு பன்னிரு சிறிய பொற் சிங்கங்கள் இரு புறத்திலும் நின்றுகொண்டிருந்தன. எந்த நாட்டிலும் இத்தகைய அரியணை இருந்ததில்லை.
20 அரசருக்கு இருந்த எல்லா உணவுப் பாத்திரங்களும் லீபானில் இருந்த 'வனபவனம்' என்ற அரச மாளிகையின் எல்லாத் தட்டுமுட்டுகளும் பசும்பொன்னால் ஆனவையே. அக்காலத்தில் வெள்ளிக்கு மதிப்பே கிடையாது.
21 அரசரின் கப்பல்கள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை ஈராமின் ஆட்களுடன் தார்சீசுக்குப் போய் அங்கிருந்து பொன், வெள்ளி, யானைத்தந்தம், மனிதக் குரங்கு, மயில் முதலியவற்றைக் கொண்டு வரும்.
22 எனவே பூமியின் எல்லா அரசர்களையும் விடச் சாலமோன் செல்வத்திலும் புகழிலும் சிறந்து விளங்கினார்.
23 சாலமோனுக்குக் கடவுள் கொடுத்திருந்த ஞானத்தைக் கேட்பதற்காக மண்ணக அரசர் யாவரும் அவரைக் காண விரும்பினர்.
24 ஆண்டுதோறும் அவர்கள் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், நறுமணப் பொருட்களையும், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்து வந்தனர்.
25 சாலமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும் தேர்களும் இருந்தன. பன்னிரண்டாயிரம் குதிரை வீரரும் இருந்தனர். அவை தேர்கள் நிற்கும் நகர்களிலும், அரசர் இருந்து வந்த யெருசலேமிலும் இருந்தன.
26 யூப்ரட்டீஸ் நதி துவக்கி, பிலிஸ்தியர் நாடு வரைக்கும், எகிப்தின் எல்லை மட்டும் இருந்த அரசர்கள் அனைவரும் அவருக்கு அடிபணிந்து வந்தனர்.
27 யெருசலேமில் வெள்ளியானது கற்களைப்போலவும், கேதுரு மரங்கள் சமவெளிகளில் வளரும் அத்தி மரங்களைப் போலவும் மிகவும் சாதாரணமாய்க் கிடைக்கும்படி அவர் செய்தார்.
28 எகிப்திலும் மற்ற நாடுகளிலுமிருந்து குதிரைகள் அவருக்குக் கொண்டு வரப்படும்.
29 சாலமோனின் வரலாறு முழுவதும் இறை வாக்கினரான நாத்தானின் நூலிலும், சிலோனித்தரான அகியாவின் நூலிலும், நாபாத்தின் மகன் எரோபோவாமைப் பற்றி இத்தோ என்னும் திருக்காட்சியாளர் எழுதியுள்ள நூலிலும் காணக்கிடக்கிறது.
30 சாலமோன் யெருசலேமில் இஸ்ராயேலர் அனைவர்க்கும் அரசராக நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.
31 பின்பு அவர் தம் முன்னோரோடு துயில் கொண்டார். அவரைத் தாவீதின் நகரில் புதைத்தனர். அவருடைய மகன் ரொபோவாம் அவருக்கு பின் அரியணை ஏறினான்.
×

Alert

×