1
|
மேலும் சாலமோன் இருபது முழ நீளமும் இருபது முழ அகலமும், பத்து முழ உயரமுமுள்ள ஒரு வெண்கலப் பலிபீடத்தைக் கட்டினார். |
2
|
கடல் என்னும் தொட்டியையும் அவர் வார்ப்பித்தார். அது வட்டவடிவமானது. அதன் அகலம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம். |
3
|
அதன் கீழ் சுற்றிலும் எருதுகளின் உருவங்கள் இருந்தன. அதைச் சுற்றிலும் பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. இவை தொட்டியோடு ஒன்றாகவே வார்க்கப் பட்டிருந்தன. |
4
|
அத்தொட்டி பன்னிரு எருதுகளின் மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. எருதுகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது. தொட்டியின் களம் ஒருச்சாண். |
5
|
அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப் போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும். |
6
|
சாலமோன் பத்துக் கொப்பரைகளையும் செய்தார்; ஐந்தை வலப்பக்கத்திலும், ஐந்தை இடப்பக்கத்திலும் வைத்தார். தகனப் பலிப் பொருளெல்லாம் அவற்றில் கழுவப்பட்டன. கடல் தொட்டியோ குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக வைக்கப் பட்டிருந்தது. |
7
|
மேலும், பத்துப் பொன்விளக்குத் தண்டுகளையும் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு செய்தார். ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாக ஆலயத்தில் வைத்தார். |
8
|
பத்து மேசைகளைச் செய்து ஐந்தை வலப்புறமும், ஐந்தை இடப்புறமுமாக ஆலயத்தில் வைத்தார். நூறு பொற்கிண்ணங்களையும் செய்தார். குருக்களின் வளாகத்தையும், |
9
|
பெரிய வளாகத்தையும் கட்டினார். ஆலயத்தின் கதவுகளை வெண்கலத் தகட்டால் வேய்ந்தார். |
10
|
கடல் தொட்டியை ஆலயத்தின் வலப்பக்கம் தென்கிழக்கே வைத்தார். |
11
|
ஊராம் செப்புப் பாத்திரங்களையும் சாம்பலை எடுக்கத்தக்க பெரிய முட்கரண்டிகளையும் கிண்ணங்களையும் செய்தான். இவ்வாறு அரசர் செய்யச் சொல்லியிருந்த ஆலய வேலைகளை எல்லாம் அவன் செய்து முடித்தான். |
12
|
அவையாவன: இரு தூண்கள், அவற்றின் மேல் இரு போதிகைகள், குமிழ்கள், அக்குமிழ்களை மூட இரண்டு முனையின் மேல் வலைப்பின்னல்கள், |
13
|
மாதுளம் பழங்களைப் போன்ற நானூறு குமிழ்கள், இரு வலைப்பின்னல்களுமாம். அவை ஒவ்வொன்றிலும் மாதுளம் பழங்கள் இரண்டு வரிசைகளில் வைக்கப் பட்டிருந்தன. வலைப் பின்னல்களோ தூண்களின் போதிகைகளையும் குமிழ்களையும் மூடியிருந்தன. |
14
|
கொப்பரைகள், இவற்றைத் தாங்கும் ஆதாரங்கள், |
15
|
ஒரு கடல் தொட்டி, அதன்கீழ் இருந்த பன்னிரு எருதுகள், செப்புப்பாத்திரங்கள், |
16
|
பெரிய முட்கரண்டிகள், கிண்ணங்கள் முதலியன. தந்தையைப் போன்று இருந்த ஊராம்- அபி ஆண்டவரின் ஆலயத்துக்கு வேண்டிய தட்டு முட்டுகளைக் கலப்பற்ற வெண்கலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தான். |
17
|
அரசர் யோர்தானின் அக்கரையில் சொக்கோத்துக்கும் சரேதத்தாவுக்கும் நடுவிலுள்ள சமவெளியில் அவற்றை வார்ப்பித்தார். |
18
|
அவை எண்ணிலடங்கா. அவற்றைச் செய்வதற்கு அளவிடற்கரிய வெண்கலம் செலவானது. |
19
|
சாலமோன் ஆலயத்துக்கு வேண்டிய தட்டு முட்டுகள் எல்லாவற்றையும், பொற்பீடத்தையும் காணிக்கை அப்பங்களை வைக்கும் மேசைகளையும், |
20
|
உள்தூயகத்திற்கு முன்பாக முறைப்படி கொளுத்தவேண்டிய விளக்குகளையும், அவற்றின் தண்டுகளையும், பசும் பொன்னால் செய்தார். |
21
|
அதேபோன்று பூக்களையும், விளக்குகளையும், இடுக்கிகளையும் பசும்பொன்னால் செய்தார். |
22
|
நறுமண எண்ணெய்ச் சிமிழ்களையும் தூபக் கலசங்களையும் கிண்ணங்களையும் சிறிய உரல்களையும் பசும் பொன்னால் செய்தார். உள்தூயகக் கதவுகளில் வேலைப்பாடுகளை அமைத்து, ஆலய வெளிவாயில்களைத் தங்கத்தால் செய்தார். இவ்வாறு சாலமோன் செய்து வந்த ஆண்டவரின் ஆலய வேலை முடிவுற்றது. |
2-Chronicles 4:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...