Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Timothy Chapters

1 Timothy 4 Verses

1 ஆவியானவர் தெளிவாய்க் கூறுகிறபடி, இறுதிக் காலத்தில் சிலர் தீய ஆவிகளின் வஞ்சனைகளுக்கும், பேய்களின் போதனைகளுக்கும் செவிமடுத்து விசுவாசத்தை மறுத்து விடுவர்.
2 பேய்க்குரியவன் என மனச்சாட்சியில் சூடிடப்பட்ட பொய்யர்களின் போலிப் பேச்சுகளால் கவரப்படுவர்.
3 அந்தப் பொய்யர்கள் திருமணத்தை விலக்குகின்றனர். சிலர் உணவுகளைத் தவிர்க்க வேண்டுமென்கின்றனர். உண்மையை நன்கறிந்த விசுவாசிகள் நன்றிக் கூறித் தூய்க்கவன்றோ இதெல்லாம் கடவுள் படைத்தார் ?
4 கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதுதான். நன்றி கூறி உட்கொண்டால், எந்த உணவையும் விலக்கவேண்டியதில்லை.
5 கடவுளுடைய வார்த்தையும் நம் செபமும் அதைப் புனிதமாக்கும்.
6 இக்கருத்துக்களையெல்லாம் சகோதரர்களுக்கு எடுத்துக்காட்டினால் நீர் இயேசு கிறிஸ்துவின் நல்ல ஊழியராய் இருப்பீர். விசுவாசக் கோட்பாடுகளிலும், நற்போதனையிலும் பயிற்சி பெற்றவராயும் விளங்குவீர்.
7 ஆனால், இலௌகீகக் கட்டுக் கதைகளைப் பாட்டிக் கதைகளெனத் தள்ளிவிடும். பக்திப் பயிற்சியில் நிலைத்திரும்.
8 உடற்பயிற்சி ஓரளவு தான் பயன் தரும். பக்தியோ அளவில்லாப் பயன் தரும். ஏனெனில், இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு பெறுவோம். என்னும் உறுதிப்பாடு பக்தியில் அடங்கியுள்ளது.
9 இது உண்மையான வார்த்தை. எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
10 நாம் வருந்தியுழைப்பது உயிருள்ள கடவுளை நம்புவதால் தான். அவரே மனிதர் எல்லாருக்கும், சிறப்பாக விசுவாசிகளுக்கும் மீட்பர்.
11 நீர் விடுக்கும் ஆணைகளும், தரும் போதனைகளும் இதற்கேற்ப அமையட்டும்.
12 நீர் இளைஞராயிருப்பதால் உம்மை யாரும் அவமதியாதிருக்கட்டும். சொல், நடத்தை, அன்பு, விசுவாசம், தூய்மை முதலியவற்றில் நீர் விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும்.
13 விசுவாசிகளுக்கு வாசித்துக்காட்டுவதிலும், அறிவுரை கூறுவதிலும் போதிப்பதிலும் நான் வரும்வரை கருத்தாய் இரும்.
14 மூப்பர் ஒன்றுகூடி உம்மீது கைகளை விரித்தபோது, இறைவாக்கினால் ஞானவரம் உமக்களிக்கப்பட்டது. உம்மில் இருக்கும் அவ்வரத்தைப் பற்றி அசட்டையாய் இராதீர்.
15 உமது முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியும்படி இவற்றைச் செய்வதில் கவலையாயிரும். இவற்றிற்கே உம்மை முழுவதும் ஒப்படைத்துவிடும்.
16 உம் வாழ்க்கை முறைப்பற்றியும் போதனைபற்றியும் விழிப்பாயிரும். இவற்றில் நிலையாயிரும். இவ்வாறு நடந்தால் நீர் மீட்படைவீர். உமக்குச் செவிசாய்ப்பவர்களையும் மீட்படையச் செய்வீர்.
×

Alert

×