Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Samuel Chapters

1 Samuel 18 Verses

1 சவுலிடம் பேசி முடிந்தபோது, யோனத்தாசின் உள்ளமும் தாவீதின் உள்ளமும் ஒன்று பட்டன. யோனத்தாசு அவனைத் தன் உயிர் போல் அன்பு செய்தான்.
2 அந்நாளில் சவுல் தாவீதைத் தம்முடன் வைத்துக் கொண்டார்; அவனுடைய தந்தை வீட்டுக்குத் திரும்பிப் போக அவனுக்கு விடை கொடுக்கவில்லை.
3 யோனத்தாசும் தாவீதும் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். ஏனென்றால், அவன் இவனைத் தன்னுயிர் போல் அன்பு செய்தான்.
4 யோனத்தாசு தான் அணிந்திருந்த உள் சட்டையைக் கழற்றி அதைத் தாவீதுக்குக் கொடுத்தான். தன் வாள், வில், கச்சை, மற்றும் சட்டைகளையும் கொடுத்தான்.
5 சவுல் தனக்கு இட்ட அலுவல்கள் அனைத்தையும் தாவீது விவேகமுடன் செய்து வந்தான். எனவே சவுல் அவனைப் போர் வீரர்களுக்குத் தலைவனாக்கினார். எல்லா மக்களும் சிறப்பாகச் சவுலுடைய ஊழியர்களும் தாவீதைப் பெரிதும் விரும்பினர்.
6 தாவீது பிலிஸ்தியனை வென்று திரும்பி வருகையில் இஸ்ராயேலின் எல்லா நகரங்களிலுமிருந்தும் பெண்கள் கஞ்சிராக்களுடனும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சியாய் ஆடிப்பாடிச் சவுல் அரசரை எதிர்கொண்டு வந்தார்கள்.
7 அப்பெண்கள், "சவுல் கொன்றது ஆயிரம் பேர்; தாவீது கொன்றதோ பதினாயிரம் பேர்" என்று ஆடிப்பாடிக் கொண்டு சென்றனர்.
8 அது கேட்ட சவுல் மிகுந்த எரிச்சல் அடைந்தார். ஏனெனில் அது அவர் மனத்துக்குப் பிடிக்கவில்லை. அவர்கள், தாவீதுக்குப் பதினாயிரமும் எமக்கு ஆயிரமும் கொடுத்தார்களே; இன்னும் ஆட்சியை விட அவனுக்கு என்ன குறைவாய் இருக்கிறது?" என்று அவர் சொன்னார்.
9 அன்று முதல் சவுல் தாவீதை நல்ல கண் கொண்டு பார்க்கவில்லை.
10 மறுநாள் ஆண்டவரால் அனுப்பப்பட்ட தீய ஆவி சவுலைப் பிடித்துக் கொண்டது. அவர் தம் வீட்டிற்குள்ளே அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். தாவீது நாள்தோறும் செய்வது போலத் தன் கையால் யாழை மீட்டிக் கொண்டிருந்தான்.
11 சவுல் ஈட்டியைக் கையில் எடுத்து, தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த எண்ணி ஈட்டியை அவன் மேல் எறிந்தார். தாவீதோ இருமுறையும் தந்திரமாகத் தப்பித்துக் கொண்டான்.
12 ஆண்டவர் தம்மை விட்டுத் தாவீதுடன் இருப்பதினால் சவுல் அவனுக்குக் அஞ்சினார்.
13 சவுல் அவனைத் தம் பார்வையினின்று அகற்றி அவனை ஆயிரம் வீரர்களுக்குத் தலைவராக ஏற்படுத்தினார். எனவே, தாவீது மக்கள் முன்னிலையில் போகவர இருந்தான்.
14 தாவீது தான் செய்தவற்றில் எல்லாம் விவேகமாய் நடந்து கொண்டான். ஆண்டவர் அவனுடன் இருந்தார்.
15 அவன் மிகவும் விவேகத்துடன் நடந்து வரக்கண்டு சவுல் அவன் பால் எச்சரிக்கையாயிருக்கத் தொடங்கினார்.
16 இஸ்ராயேலரும், யூதாவின் மக்கள் அனைவரும் தாவீதுக்கு அன்பு செய்து வந்தனர். ஏனெனில் அவனே அவர்களுக்கு முன்பாகப் போகவர இருந்தான்.
17 ஒருநாள் சவுல் தாவீதை நோக்கி, "இதோ என் மூத்த மகள் மேரோபை உனக்கு மண முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் மாவீரனாய் இருந்து ஆண்டவருடைய போர்களை நடத்து" என்றார். "என் கை அவன் மேல் படாமல், பிலிஸ்தியர் கையே அவன் மேல் விழட்டும்" என்று சவுல் தனக்குள் சொல்லிக் கொண்டார்.
18 தாவீது சவுலை நோக்கி, "அரசரின் மருமகன் ஆவதற்கு நான் யார்? என் வாழ்க்கை என்ன? என் தந்தையின் வம்சமும் என்ன?" என்றான்.
19 சவுலின் மகள் மேரோபைத் தாவீதுக்குக் கொடுக்க வேண்டியிருக்க அவள் மோலாதித்தனாகிய அதிரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.
20 சவுலின் வேறொரு மகளான மிக்கோல் தாவீதுக்கு அன்பு செய்தாள். இச்செய்தி சவுலுக்கு அறிவிக்கப்பட்ட போது அவர் மகிழ்வுற்றார்.
21 நான் அவளை அவனுக்கு கொடுப்பேன். ஏனெனில் அவள் அவனுக்கு இடையூறாய் இருப்பாள். பிலிஸ்தியர் கையும் அவன் மேல் விழும் என்று சவுல் சொன்னார். மேலும் அவனைப் பார்த்து, "நீ இரண்டு காரியங்களை முன்னிட்டு இன்று எனக்கு மருமகனாய் இருப்பாய்" என்றார்.
22 பிறகு சவுல் தம் ஊழியக்காரரை நோக்கி, "நீங்கள் தாவீதோடு இரகசியமாய்ப் பேசி, 'அரசர் உன் மேல் பிரியமாய் இருக்கிறார். அவருடைய ஊழியர் எல்லாம் உன்மேல் அன்பு கொண்டுள்ளனர். ஆதலால் நீ அரசனுக்கு மருமகனாய் இரு' என்று சொல்லுங்கள்" என்றார்.
23 அவ்விதமே அவர்கள் இச்சொற்களை எல்லாம் தாவீதிடம் கூறினார்கள். அதற்குத் தாவீது, "அரசனின் மருமகனாய் இருப்பது உங்களுக்கு அற்பமென்று தோன்றுகின்றதா? நானோ எளியவனும் தாழ்ந்த நிலையில் உள்ளவனுமாய் இருக்கிறேனே" என்றான்.
24 தாவீது இவ்வாறு சொன்னான்" என்று சவுலின் ஊழியர்கள் அவருக்குத் தெரிவித்தார்கள்.
25 அதைக் கேட்டுச் சவுல், "நீங்கள் அவனைப் பார்த்து, 'அரசருக்குப் பரிசம் அவசியமில்லை; அரசருடைய எதிரிகளைப் பழிவாங்கிப் பிலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கொண்டு வந்தால் போதும்' என்று சொல்லுங்கள்" என்றார். ஏனெனில் தாவீதை பிலிஸ்தியரின் கையில் ஒப்படைக்கச் சவுல் எண்ணியிருந்தார்.
26 சவுல் சொன்ன வார்த்தைகளை அவருடைய ஊழியர்கள் தாவீதுக்குத் திரும்பத் தெரிவித்த போது தாவீது மகிழ்வுற்று அரசருடைய மருமகனாய் இருக்க மனம் இசைந்தான்.
27 சில நாட்களுக்குப் பின் தாவீது எழுந்து தனக்குக் கீழிருந்த மனிதர்களோடு போய்ப் பிலிஸ்தியரில் இருநூறு பேரைக் கொன்று அவர்களுடைய நுனித்தோல்களைக் கொண்டு வந்து அரசரின் மருமகனாகும் பொருட்டு அவற்றை அவர்முன் எண்ணி வைத்தான். ஆகையால் சவுல் தம் மகள் மிக்கோலை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தார்.
28 ஆண்டவர் தாவீதோடு இருப்பதாக சவுல் உணர்ந்து கொண்டார். சவுலின் மகள் மிக்கோல் தாவீதிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தாள்.
29 சவுல் தாவீதுக்கு அதிகம் அஞ்சத் தொடங்கினார். அது முதல் எந்நாளும் தாவீதின் பகைவரானார்.
30 பிலிஸ்தியரின் தலைவர்கள் போருக்குப் புறப்பட்டனர். அவர்கள் புறப்பட்டது முதல் தாவீது சவுலின் ஊழியர்களை விட விவேகமாய் நடந்து கொண்டான். அவனுடைய பெயர் மிகப் புகழடைந்தது.
×

Alert

×