Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Peter Chapters

1 Peter 5 Verses

1 கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சிமையில் பங்குக்குரியவனுமாகிய நான் உங்கள் மூப்பர்களுள் ஒருவன் என்ற முறையில் அவர்களுக்குக் கூறும் அறிவுரையாவது:
2 மூப்பர்களே, உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளின் மந்தையை மேய்த்து வாருங்கள். கட்டாயத் தினாலன்று, மன உவப்புடன், கடவுளின் விருப்பத்திற்கேற்ப அதைக் கண்காணித்தல் வேண்டும். இழிவான ஊதியத்திற்காகச் செய்யாமல், உள்ளத்தார்வமுடன் பணி செய்யுங்கள்.
3 உங்களிடம் ஒப்பமைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல், மந்தைக்கு முன்மாதிரியாய் இருந்து, அதை மேய்ப்பீர்களாக.
4 அப்போதுதான் தலைமை ஆயர் தோன்றும் நாளில், மகிமையின் வாடாத வெற்றிவாகை சூட்டப்பெறுவீர்கள்.
5 இளைஞர்களே, நீங்கள் மூப்பர்களுக்குப் பணிந்து நடங்கள். ஒருவரோடு ஒருவர் பழகுகையில் மனத்தாழ்ச்சியை ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். ஏனெனில், " செருக்குற்றவர்களைக் கடவுள் எதிர்க்கிறார். தாழ்ச்சியுற்றவர்களுக்கோ அருளை அளிக்கிறார் ".
6 கடவுளது கைவன்னமைக்குப் பணிந்து, உங்களைத் தாழ்த்துங்கள்; குறித்த காலத்தில் அவர் உங்களை உயர்த்துவார்.
7 உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள்: உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு.
8 தெளிந்த மனத்தோடு விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் எதிரியான அலகை, கர்¢ச்சிக்கும் சிங்கம்போல் யாரை விழுங்கலாமெனத் தேடித் திரிகிறது.
9 விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாய், அதை எதிர்த்து நில்லுங்கள்; உலகமெங்குமுள்ள உங்கள் சகோதரர்களும் அதே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமன்றோ?
10 அருளுக்கெல்லாம் ஊற்றாகிய கடவுள், கிறிஸ்துவுக்குள் தம் முடிவில்லா மகிமைக்கு உங்களை அழைத்தவர், சிறிதுகாலம் நீங்கள் துன்புற்றபின், அனைத்தையும் சீர்ப்படுத்தி, உங்களுக்கு உறுதியும் உரமும் நிலைபேறும் அளிப்பார்.
11 அவரது வல்லமை என்றென்றும் உள்ளது. ஆமென்.
12 நம்பிக்கைக்குரியவன் என நான் கருதும் உங்கள் சகோதரன் சில்வானுவின் வழியாக உங்களுக்குச் சுருக்கமாக எழுதியனுப்பினேன். உங்களுக்கு அறிவுரை கூறவும், கடவுளுடைய உண்மை அருள் இதுவே எனச் சான்று பகரவும் விரும்பினேன்.
13 இந்த அருளில் நிலைத்திருங்கள். உங்களைப்போல் தேர்ந்துகொள்ளப்பட்டு, பாபிலோனில் வாழும் திருச்சபையினர் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்.
14 அன்பு முத்தம் தந்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். கிறிஸ்துவுக்குள் வாழும் உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக.
×

Alert

×