Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Chronicles Chapters

1 Chronicles 8 Verses

1 பென்யமீனின் தலைமகன் பெயர் பாலே. பின் ஆஸ்பேலையும், மூன்றாவதாக ஆகாராவையும், நான்காவதாக நொகாவையும்,
2 ஐந்தாவதாக ரப்பாவையும் பெற்றார்.
3 பாலேய்க்குப் பிறந்த புதல்வர்:
4 ஆதார், கேரா, ஆபியுத், அபிசுயே, நாமான், அகோவே,
5 கேரா, செப்புபான், உராம் ஆகியோர்.
6 நாமான், ஆக்கியா, கேரா ஆகியோர் ஆகோதின். புதல்வர்கள்.
7 குடும்பதலைவர்களாய் விளங்கி வந்த இவர்கள் காபாவிலிருந்து மனகாத்துக்கு நாடு கடத்தப் பட்டனர். இவர்களுள் எகிளாம் என்று அழைக்கப்பட்ட கேரா ஓசாவையும் அகியுதையும் பெற்றார்.
8 சகாராயீம் தம் மனைவியர் ஊசிம், பாரா என்பவர்களை அனுப்பிவிட்ட பிறகு, மோவாப் நாட்டில் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தன.
9 அதாவது, தம் மனைவி ஏதேசிடம் பொபாப்,
10 செயியா, மோசா, மொல்கோம், ஏகூஸ் செக்கியா, ஏகூஸ், செக்கியா, மார்மா என்பவர்களைப் பெற்றார். சகாராயீமின் புதல்வரான இவர்கள் குடும்பத் தலைவர்களாய் இருந்து வந்தார்கள்.
11 மெகூசிம் அபிதோப்பையும் எல்பாலையும் பெற்றார்.
12 எல்பாலின் புதல்வரோ: ஏபேர், மிசாம், ஓனோவையும் லோதையும் அவற்றின் சிற்றூர்களையும் தோற்றுவித்த சாமாத்,
13 காத்தின் குடிகளை முறியடித்து, ஆயியாலோனில் குடியிருந்த மக்களுக்குத் தலைவர்களாய் இருந்து வந்த பாரியா, சாமா, ஆகியோராவர்.
14 அகியோ, சேசாக், எரிமோத்,
15 சபதியா, ஆரோத்,
16 ஏதேர், மிக்காயேல், எஸ்பா, யொவா என்பவர்கள் பாரியாவின் புதல்வர்கள்.
17 சபாதியா, மொசொல்லாம், எசேசி,
18 ஏபேர், ஏசாமரி, எசுலியா, யோபாப் ஆகியோர் எல்பாலுக்குப் பிறந்த ஆண் மக்களாவர்.
19 யாசிம், செக்கிரி, சப்தி, எலியோவெனாய்,
20 செலேதாய், எலியேல், அதாபியா,
21 பறாயியா, சமராத் ஆகியோர் செமேயின் ஆண் மக்களாவர்.
22 எஸ்ப்பாம், ஏபேர், எலியேல்,
23 அப்தோன், செக்கிரி, ஆனான்,
24 ஆனானியா, ஏலாம், அனத்தோத்தியா,
25 எப்தையா, பானுவேல் என்போர் சேசாக்கின் புதல்வர்களாவர்.
26 சம்சரி, சொகோரியா, ஒத்தோலியா,
27 எர்சியா, எலியா, செக்கிரி ஆகியோர் எரொகாமின் புதல்வர்கள்.
28 இவர்கள் யெருசலேமில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் தத்தம் வம்ச முறைப்படி குலத்தலைவர்களாய் விளங்கி வந்தார்கள்.
29 காபாவோனில் அபிகபாவோன் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் மாக்கா.
30 அவருடைய மூத்த மகன் பெயர் அப்தோன்; இவருக்குப் பின் சூர்,
31 சீஸ், பால், நதாப், கேதோர், அகியோ, சாக்கேர், மசெலோத் ஆகியோர் பிறந்தனர்.
32 மசெலோத் சமாவைப் பெற்றார். இவர்கள் தங்கள் உறவினருடன் யெருசலேமில் அவர்களுக்கு அருகிலேயே வாழ்ந்து வந்தனர்.
33 நேர் என்பவர் சீசைப் பெற்றார்; சீஸ் சவுலைப் பெற்றார். சவுல் யோனதான், மெல்கிசுவா, அபினதாப், எஸ்பால் என்பவர்களைப் பெற்றார்.
34 யோனதானின் மகன் பெயர் மெரிபாவால்; மெரிபாவால் மிக்காவைப் பெற்றார்.
35 மிக்காவின் புதல்வர் பெயர்: பித்தோன், மெலேக், தரா, ஆகாசு என்பனவாம்.
36 ஆகாசு யோவதாவைப் பெற்றார்; யோவதா அலமாதையும் அசுமோத்தையும் சம்ரியையும் பெற்றார். சம்ரி மோசாவைப் பெற்றார்.
37 மோசா பானாவைப் பெற்றார்; இவருடைய மகன் பெயர் ராப்பா. இவருக்கு எலசா பிறந்தார். இவர் அசேலைப் பெற்றார்.
38 அசேலுக்கு ஆறு ஆண் மக்கள் இருந்தனர். இவர்களுக்கு எசுரிகாம், போக்ரூ, இஸ்மாயேல், சாரியா, ஒப்தியா, ஆனான் என்று பெயர்.
39 அசேலுடைய சகோதரர் எசேக்கின் மூத்த மகன் பெயர் உலாம்; இரண்டாவது மகன் பெயர் ஏகூஸ், மூன்றாவது மகன் பெயர் எலிப்பலெத்.
40 உலாமின் புதல்வர் ஆற்றல் மிக்கவரும் திறமை மிக்க வில் வீரராயும் விளங்கினர். அவர்களுக்குப் பல புதல்வரும், பேரப்புதல்வரும் இருந்தனர். சிலருக்கு நூற்றைம்பது புதல்வரும், பேரப்புதல்வரும் இருந்தனர். இவர்கள் எல்லாரும் பென்யமீன் வழிவந்தோர்.
×

Alert

×