என் சகோதரியே! என் மணவாளியே! [QBR] நான் என் தோட்டத்திற்கு வந்தேன், [QBR] என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; [QBR] என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; [QBR] என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன். [QBR] சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே! [QBR] குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள். [PS] மணவாளி [QBR]
{சூலமித்தியாளின் இரவு} [PS] நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது; [QBR] கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: [QBR] என் சகோதரியே! என் பிரியமே! [QBR] என் புறாவே! என் உத்தமியே! [QBR] கதவைத் திற; [QBR] என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார். [QBR]
என் உடையைக் கழற்றிப்போட்டேன்; [QBR] நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன், [QBR] என் பாதங்களைக் கழுவினேன், [QBR] நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன். [QBR]
என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; [QBR] பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், [QBR] என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது. [QBR]
என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; [QBR] என் நேசரோ இல்லை, போய்விட்டார்; [QBR] அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. [QBR] அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; [QBR] அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை. [QBR]
பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! [QBR] மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? [QBR] நீ இப்படி எங்களை ஆணையிட, [QBR] மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? [PE][PS] மணவாளி [QBR]
அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், [QBR] பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது. [QBR]
அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; [QBR] அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும் [QBR] கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது. [QBR]