நான் சாரோனின் [* சாரோன் ஒரு இடத்தின் பெயர். இஸ்ரவேல் தேசத்தின் மத்திய தரைக்கடல் (ஏசாயா. 35:2, 65:10). இது சமபூமி. இங்கே கிச்சிலி மரங்கள் அடர்த்தியாக இருந்தன.] ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன். [PE][PS] மணவாளன் [QBR]
காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, [QBR] அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; [QBR] அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன், [QBR] அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது. [QBR]
என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்; [QBR] இதோ, அவர் எங்கள் மதிலுக்கு வெளியே நின்று [QBR] சன்னல் வழியாகப் பார்த்து, [QBR] தட்டியின் வழியாகத் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார். [QBR]
அத்திமரம் காய்காய்த்தது; [QBR] திராட்சைக்கொடிகள் பூப்பூத்து [QBR] வாசனையும் நறுமணத்தையும் கொடுக்கிறது; [QBR] என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! [QBR] நீ எழுந்து வா. [QBR]
கன்மலையின் வெடிப்புகளிலும், [QBR] மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! [QBR] உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு, [QBR] உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; [QBR] உன் சத்தம் இன்பமும், [QBR] உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார். [QBR]