Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 9 Verses

1 யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; [QBR] உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். [QBR]
2 உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; [QBR] உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன். [QBR]
3 என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, [QBR] உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள். [QBR]
4 நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, [QBR] நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர். [QBR]
5 தேசங்களைக் கடிந்துகொண்டு, [QBR] துன்மார்க்கர்களை அழித்து, [QBR] அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர். [QBR]
6 எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; [QBR] அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; [QBR] அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது. [QBR]
7 யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; [QBR] தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார். [QBR]
8 அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, [QBR] எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார். [QBR]
9 சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்; [QBR] நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். [QBR]
10 யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; [QBR] ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள். [QBR]
11 சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி, [QBR] அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள். [QBR]
12 ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, [QBR] அவர்களை நினைக்கிறார்; [QBR] எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார். [QBR]
13 மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே, [QBR] நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, [QBR] உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு, [QBR]
14 தேவனே நீர் எனக்கு இரங்கி, [QBR] என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். [QBR]
15 தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: [QBR] அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன. [QBR]
16 யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; [QBR] துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.) [QBR]
17 துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், [QBR] நரகத்திலே தள்ளப்படுவார்கள். [QBR]
18 எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; [QBR] ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. [QBR]
19 எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; [QBR] தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும் [QBR]
20 தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, [QBR] அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா). [PE]
×

Alert

×