1
|
இஸ்ரவேலின் மேய்ப்பரே, [QBR] யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, [QBR] செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும். [QBR] |
2
|
எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, [QBR] எங்களைக் காப்பாற்ற வந்தருளும். [QBR] |
3
|
தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், [QBR] உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், [QBR] அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். [QBR] |
4
|
சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, [QBR] உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர் [QBR] எதுவரைக்கும் கோபங்கொள்வீர். [QBR] |
5
|
கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும், [QBR] மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர். [QBR] |
6
|
எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; [QBR] எங்களுடைய எதிரிகள் எங்களைக் கேலிசெய்கிறார்கள். [QBR] |
7
|
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், [QBR] உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், [QBR] அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். [QBR] |
8
|
நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து, [QBR] தேசங்களைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். [QBR] |
9
|
அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; [QBR] அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. [QBR] |
10
|
அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது. [QBR] |
11
|
அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும், [QBR] தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது. [QBR] |
12
|
இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக, [QBR] அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்? [QBR] |
13
|
காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, [QBR] வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது. [QBR] |
14
|
சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, [QBR] இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்; [QBR] |
15
|
உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், [QBR] உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும். [QBR] |
16
|
அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது; [QBR] உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள். [QBR] |
17
|
உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும், [QBR] உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக. [QBR] |
18
|
அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; [QBR] எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம். [QBR] |
19
|
சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, [QBR] எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; [QBR] உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், [QBR] அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். [PE] |
Psalms 80:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...