Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 78 Verses

1 என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; [QBR] என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள். [QBR]
2 என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; [QBR] ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன். [QBR]
3 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; [QBR] எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். [QBR]
4 பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், [QBR] யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், [QBR] அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். [QBR]
5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, [QBR] இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, [QBR] அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி [QBR] நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். [QBR]
6 இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, [QBR] அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; [QBR]
7 தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, [QBR] தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; [QBR]
8 இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், [QBR] தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய [QBR] தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார். [QBR]
9 ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள் [QBR] யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள். [QBR]
10 அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், [QBR] அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும், [QBR]
11 அவருடைய செயல்களையும், [QBR] அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். [QBR]
12 அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, [QBR] அவர் அதிசயமானவைகளைச் செய்தார். [QBR]
13 கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, [QBR] தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார். [QBR]
14 பகலிலே மேகத்தினாலும், [QBR] இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். [QBR]
15 பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து, [QBR] மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார். [QBR]
16 கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து, [QBR] தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார். [QBR]
17 என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, [QBR] பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள். [QBR]
18 தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு, [QBR] தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். [QBR]
19 அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி: [QBR] தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? [QBR]
20 இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது; [QBR] அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ? [QBR] தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள். [QBR]
21 ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; [QBR] அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், [QBR] அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால், [QBR]
22 யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது; [QBR] இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது. [QBR]
23 அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, [QBR] வானத்தின் கதவுகளைத் திறந்து, [QBR]
24 மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து, [QBR] வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். [QBR]
25 தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்; [QBR] அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார். [QBR]
26 வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, [QBR] தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து, [QBR]
27 இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து, [QBR]
28 அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார். [QBR]
29 அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; [QBR] அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார். [QBR]
30 அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை; [QBR] அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே.
31 தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, [QBR] அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார். [QBR]
32 இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், [QBR] பின்னும் பாவஞ்செய்தார்கள். [QBR]
33 ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், [QBR] அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார். [QBR]
34 அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, [QBR] அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி; [QBR]
35 தேவன் தங்களுடைய கன்மலையென்றும், [QBR] உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள். [QBR]
36 ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, [QBR] தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள். [QBR]
37 அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; [QBR] அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை. [QBR]
38 அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; [QBR] அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், [QBR] அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார். [QBR]
39 அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார். [QBR]
40 எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, [QBR] பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள். [QBR]
41 அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, [QBR] இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள். [QBR]
42 அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள். [QBR]
43 அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், [QBR] சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார். [QBR]
44 அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய [QBR] ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார். [QBR]
45 அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், [QBR] அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். [QBR]
46 அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், [QBR] அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார். [QBR]
47 கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், [QBR] ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து, [QBR]
48 அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், [QBR] அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார். [QBR]
49 தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், [QBR] பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். [QBR]
50 அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், [QBR] அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். [QBR]
51 எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், [QBR] காமின் [* காமின் எகிப்து தேசத்தை குறிக்கிறது. காம் நோவாவின் குமாரன், எகிப்தின் மூதாதையர் என்று ஆதியாகமம் 10:6 ல் சொல்லியிருக்கிறது] கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து; [QBR]
52 தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, [QBR] அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்; [QBR]
53 அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; [QBR] அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது. [QBR]
54 அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், [QBR] தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து, [QBR]
55 அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, [QBR] தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, [QBR] அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார். [QBR]
56 ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, [QBR] அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய், [QBR]
57 தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி, [QBR] துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு, [QBR]
58 தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, [QBR] தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். [QBR]
59 தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து, [QBR] இஸ்ரவேலை மிகவும் வெறுத்து, [QBR]
60 தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள [† சீலொவோம் எருசலேமின் வடக்கே 32 கிமீ தூரத்தில் இருக்கிறது. இஸ்ரவேலின் ஆரம்ப நாட்களில் தேவனுடைய உடன்பட்டிக்கைபெட்டி சீலோவோமில் வைக்கப்பட்டிருந்தது. ] வாசஸ்தலத்தை விட்டுவிலகி, [QBR]
61 தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து, [QBR]
62 தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார். [QBR]
63 அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, [QBR] அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள். [QBR]
64 அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், [QBR] அவர்களுடைய விதவைகள் அழவில்லை. [QBR]
65 அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், [QBR] திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து, [QBR]
66 தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, [QBR] அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார். [QBR]
67 அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; [QBR] எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல், [QBR]
68 யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார். [QBR]
69 தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், [QBR] என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். [QBR]
70 தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, [QBR] ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். [QBR]
71 கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, [QBR] தம்முடைய மக்களாகிய யாக்கோபையும் [QBR] தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, [QBR] அழைத்துக்கொண்டுவந்தார். [QBR]
72 இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, [QBR] தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான். [PE]
×

Alert

×