எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; [QBR] உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; [QBR] பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன். [QBR]
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது, [QBR] அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா). [QBR] தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். [QBR]
என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; [QBR] தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; [QBR] அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது. [QBR]