என்னுடைய ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? [QBR] ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; [QBR] அவர் சமுகத்து இரட்சிப்பிற்காக நான் இன்னும் அவரைத் துதிப்பேன். [QBR]
ஆகிலும் யெகோவா பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; [QBR] இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது; [QBR] என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன். [QBR]
நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி: [QBR] ஏன் என்னை மறந்தீர்? [QBR] எதிரியால் ஒடுக்கப்பட்டு, [QBR] நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன். [QBR]
உன் தேவன் எங்கே என்று [QBR] என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி, [QBR] என்னை நிந்திப்பது [QBR] என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. [QBR]
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? [QBR] ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? [QBR] தேவனை நோக்கிக் காத்திரு; [QBR] என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். [PE]