Indian Language Bible Word Collections
Psalms 4:2
Psalms Chapters
Psalms 4 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 4 Verses
1
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்; [QBR] நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; [QBR] எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும். [QBR]
2
மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி, [QBR] வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா) [QBR]
3
பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; [QBR] நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார். [QBR]
4
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்; [QBR] உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா) [QBR]
5
நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள். [QBR]
6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; [QBR] யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். [QBR]
7
அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, [QBR] அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர். [QBR]
8
சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; [QBR] யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர். [PE]