Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 37 Verses

1 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; [QBR] நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. [QBR]
2 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, [QBR] பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள். [QBR]
3 யெகோவாவை நம்பி நன்மைசெய்; [QBR] தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். [QBR]
4 யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; [QBR] அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். [QBR]
5 உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, [QBR] அவர்மேல் நம்பிக்கையாயிரு; [QBR] அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார். [QBR]
6 உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், [QBR] உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார். [QBR]
7 யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; [QBR] காரியசித்தியுள்ளவன் மேலும் [QBR] தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே. [QBR]
8 கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; [QBR] பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். [QBR]
9 பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; [QBR] யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ [QBR] பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். [QBR]
10 இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; [QBR] அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. [QBR]
11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, [QBR] மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். [QBR]
12 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, [QBR] அவன்மேல் பல்லைக் கடிக்கிறான். [QBR]
13 ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; [QBR] அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். [QBR]
14 சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், [QBR] செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், [QBR] துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். [QBR]
15 ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; [QBR] அவர்கள் வில்லுகள் முறியும். [QBR]
16 அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, [QBR] நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. [QBR]
17 துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; [QBR] நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார். [QBR]
18 உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; [QBR] அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். [QBR]
19 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, [QBR] பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். [QBR]
20 துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், [QBR] யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல [QBR] புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள். [QBR]
21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; [QBR] நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். [QBR]
22 அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; [QBR] அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள். [QBR]
23 நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், [QBR] அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். [QBR]
24 அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; [QBR] யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார். [QBR]
25 நான் இளைஞனாயிருந்தேன், [QBR] முதிர்வயதுள்ளவனுமானேன்; [QBR] ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், [QBR] அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை. [QBR]
26 அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், [QBR] அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். [QBR]
27 தீமையை விட்டு விலகி, நன்மை செய்; [QBR] என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். [QBR]
28 யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; [QBR] அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; [QBR] அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; [QBR] துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும். [QBR]
29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, [QBR] என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள். [QBR]
30 நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, [QBR] அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். [QBR]
31 அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; [QBR] அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. [QBR]
32 துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, [QBR] அவனைக் கொல்ல வகைதேடுகிறான். [QBR]
33 யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; [QBR] அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. [QBR]
34 நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, [QBR] அவருடைய வழியைக் கைக்கொள்; [QBR] அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; [QBR] துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். [QBR]
35 கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் [QBR] அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். [QBR]
36 ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், [QBR] அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், [QBR] அவன் காணப்படவில்லை. [QBR]
37 நீ உத்தமனை நோக்கி, [QBR] செம்மையானவனைப் பார்த்திரு; [QBR] அந்த மனிதனுடைய முடிவு சமாதானம். [QBR]
38 அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; [QBR] அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு. [QBR]
39 நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; [QBR] இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். [QBR]
40 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, [QBR] அவர்களை விடுவிப்பார்; [QBR] அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், [QBR] அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார். [PE]
×

Alert

×