Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 35 Verses

1 யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, [QBR] என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும். [QBR]
2 நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து, [QBR] எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும். [QBR]
3 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து: [QBR] நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும். [QBR]
4 என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; [QBR] எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் அவமானமடைவார்களாக. [QBR]
5 அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக; [QBR] யெகோவாவுடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. [QBR]
6 அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக; [QBR] யெகோவாவுடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக. [QBR]
7 காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; [QBR] காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள். [QBR]
8 அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்; [QBR] அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக. [QBR]
9 என்னுடைய ஆத்துமா யெகோவாவில் சந்தோஷித்து, [QBR] அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். [QBR]
10 ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும், [QBR] ஏழையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவர் யார் யெகோவாவே, [QBR] என்று என்னுடைய எலும்புகளெல்லாம் சொல்லும். [QBR]
11 கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள். [QBR]
12 நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; [QBR] என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள். [QBR]
13 அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; [QBR] நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; [QBR] என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை. [QBR]
14 நான் அவனை என்னுடைய நண்பனாகவும் [QBR] சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்; [QBR] தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல் [QBR] துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன். [QBR]
15 ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது [QBR] அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; [QBR] அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, [QBR] ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள். [QBR]
16 அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு [QBR] சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள். [QBR]
17 ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? [QBR] என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். [QBR]
18 மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், [QBR] திரளான மக்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன். [QBR]
19 வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், [QBR] காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் [QBR] கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக. [QBR]
20 அவர்கள் சமாதானமாகப் பேசாமல், [QBR] தேசத்திலே அமைதலாக இருக்கிறவர்களுக்கு விரோதமாக வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். [QBR]
21 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து, [QBR] ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள். [QBR]
22 யெகோவாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்; [QBR] ஆண்டவரே, எனக்குத் தூரமாகாமலிரும். [QBR]
23 என் தேவனே, என் ஆண்டவரே, [QBR] எனக்கு நியாயஞ்செய்யவும் என்னுடைய வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும். [QBR]
24 என் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், [QBR] என்னைக்குறித்து அவர்களை மகிழவிடாமலிரும். [QBR]
25 அவர்கள் தங்களுடைய இருதயத்திலே: [QBR] ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், [QBR] அவனை [* விழுங்கிவிட்டோம்] என்று பேசாதபடிக்கும் செய்யும். [QBR]
26 எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு, [QBR] எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் [QBR] அவமானத்தாலும் மூடப்படவேண்டும். [QBR]
27 என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் [QBR] கெம்பீரித்து மகிழ்ந்து, [QBR] தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற யெகோவாவுக்கு மகிமை [QBR] உண்டாவதாக என்று எப்போதும் சொல்லட்டும். [QBR]
28 என் நாவு உமது நீதியையும், [QBR] நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும். [PE]
×

Alert

×