என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து: [QBR] நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும். [QBR]
அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; [QBR] நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; [QBR] என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை. [QBR]
நான் அவனை என்னுடைய நண்பனாகவும் [QBR] சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்; [QBR] தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல் [QBR] துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன். [QBR]
ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது [QBR] அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; [QBR] அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, [QBR] ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள். [QBR]
ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? [QBR] என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். [QBR]
அவர்கள் தங்களுடைய இருதயத்திலே: [QBR] ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், [QBR] அவனை [* விழுங்கிவிட்டோம்] என்று பேசாதபடிக்கும் செய்யும். [QBR]
என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் [QBR] கெம்பீரித்து மகிழ்ந்து, [QBR] தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற யெகோவாவுக்கு மகிமை [QBR] உண்டாவதாக என்று எப்போதும் சொல்லட்டும். [QBR]