Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 34 Verses

1 யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்; [QBR] அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும். [QBR]
2 யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்; [QBR] ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். [QBR]
3 என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; [QBR] நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. [QBR]
4 நான் யெகோவாவை தேடினேன், [QBR] அவர் எனக்குச் செவிகொடுத்து, [QBR] என்னுடைய எல்லாப் பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். [QBR]
5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; [QBR] அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. [QBR]
6 இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு, [QBR] அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார். [QBR]
7 யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி [QBR] முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார். [QBR]
8 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; [QBR] அவர்மேல் நம்பிக்கையாக இருக்கிற மனிதன் பாக்கியவான். [QBR]
9 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; [QBR] அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. [QBR]
10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்; [QBR] யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது. [QBR]
11 பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; [QBR] யெகோவாவுக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். [QBR]
12 நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி, [QBR] நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்? [QBR]
13 உன் நாவை தீங்கிற்கும், [QBR] உன்னுடைய உதடுகளை பொய் வார்த்தைகளுக்கும் விலக்கிக் காத்துக்கொள். [QBR]
14 தீமையை விட்டு விலகி, நன்மை செய்; [QBR] சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள். [QBR]
15 யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது; [QBR] அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. [QBR]
16 தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய, [QBR] யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது. [QBR]
17 நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு, [QBR] அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். [QBR]
18 உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, [QBR] நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார். [QBR]
19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும், [QBR] யெகோவா அவைகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார். [QBR]
20 அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; [QBR] அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. [QBR]
21 தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; [QBR] நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். [QBR]
22 யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; [QBR] அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது. [PE]
×

Alert

×