Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 29 Verses

1 தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; [QBR] கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். [QBR]
2 யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; [QBR] பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். [QBR]
3 யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; [QBR] மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; [QBR] யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். [QBR]
4 யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; [QBR] யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது. [QBR]
5 யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; [QBR] யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார். [QBR]
6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், [QBR] சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார். [QBR]
7 யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும். [QBR]
8 யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; [QBR] யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார். [QBR]
9 யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, [QBR] காடுகளை வெளியாக்கும்; [QBR] அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் [QBR] யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள். [QBR]
10 யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; [QBR] யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார். [QBR]
11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; [QBR] யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, [QBR] அவர்களை ஆசீர்வதிப்பார். [PE]
×

Alert

×