என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? [QBR] எனக்கு உதவி செய்யாமலும், [QBR] நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்? [QBR]
தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; [QBR] என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, [QBR] என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, [QBR] என்னுடைய குடல்களின் நடுவே உருகினது. [QBR]
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; [QBR] பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; [QBR] என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள். [QBR]
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, [QBR] அவரைத் துதியுங்கள்; [QBR] யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; [QBR] இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள். [QBR]
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், [QBR] அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, [QBR] தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார். [QBR]
பூமியின் செல்வந்தர் அனைவரும் [§ சாப்பிட்டு ] பணிந்துகொள்வார்கள்; [QBR] புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். [QBR] ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே. [QBR]