Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 112 Verses

1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, [QBR] அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். [QBR]
2 அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், [QBR] செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். [QBR]
3 செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; [QBR] அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். [QBR]
4 செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; [QBR] அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். [QBR]
5 இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான். [QBR]
6 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; [QBR] நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன். [QBR]
7 துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; [QBR] அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும். [QBR]
8 அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; [QBR] அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான். [QBR]
9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; [QBR] அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். [QBR]
10 துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, [QBR] தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; [QBR] துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும். [PE]
×

Alert

×