Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 111 Verses

1 அல்லேலூயா, [QBR] செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன். [QBR]
2 யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், [QBR] அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. [QBR]
3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, [QBR] அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். [QBR]
4 அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், [QBR] யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர். [QBR]
5 தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; [QBR] தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். [QBR]
6 தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், [QBR] தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். [QBR]
7 அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; [QBR] அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். [QBR]
8 அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், [QBR] அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள். [QBR]
9 அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, [QBR] தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; [QBR] அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது. [QBR]
10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; [QBR] அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; [QBR] அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். [PE]
×

Alert

×