Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 106 Verses

1 அல்லேலூயா, யெகோவாவை துதியுங்கள்; [QBR] அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
2 யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி, [QBR] அவருடைய துதியையெல்லாம் சொல்லக்கூடியவன் யார்? [QBR]
3 நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், [QBR] எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள். [QBR]
4 யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, [QBR] உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, [QBR] உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு, [QBR]
5 உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, [QBR] உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும். [QBR]
6 எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து, [QBR] அக்கிரமம் நடப்பித்து, தீமைகளைச் செய்தோம். [QBR]
7 எங்களுடைய முன்னோர்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், [QBR] உம்முடைய கிருபைகளின் பெருக்கத்தை நினைக்காமலும் போய், [QBR] சிவந்த கடலின் ஓரத்திலே கலகம்செய்தார்கள். [QBR]
8 ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, [QBR] தம்முடைய பெயரினிமித்தம் அவர்களைக் காப்பாற்றினார். [QBR]
9 அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது; [QBR] காய்ந்த தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகச்செய்தார். [QBR]
10 பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார். [QBR]
11 அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; [QBR] அவர்களில் ஒருவனும் மீதியாக இருக்கவில்லை. [QBR]
12 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, [QBR] அவருடைய துதியைப் பாடினார்கள். [QBR]
13 ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்; [QBR] அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல், [QBR]
14 வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி, [QBR] பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். [QBR]
15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், [QBR] அவர்கள் சரீரத்திலோ வியாதியை அனுப்பினார். [QBR]
16 முகாமில் அவர்கள் மோசேயின்மேலும், [QBR] யெகோவாவுடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள். [QBR]
17 பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, [QBR] அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது. [QBR]
18 அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது; [QBR] நெருப்பு ஜூவாலை துன்மார்க்கர்களை எரித்துப்போட்டது. [QBR]
19 அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, [QBR] வார்க்கப்பட்ட சிலையை வழிபட்டார்கள். [QBR]
20 தங்களுடைய மகிமையைப் [QBR] புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள். [QBR]
21 எகிப்திலே பெரிய செயல்களையும், [QBR] காமின் தேசத்திலே அதிசயங்களையும், [QBR] சிவந்த கடலினருகில் பயங்கரமானவைகளையும் செய்தவராகிய, [QBR]
22 தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள். [QBR]
23 ஆகையால், அவர்களை நாசம்செய்வேன் என்றார்; [QBR] அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, [QBR] அவர்களை அவர் அழிக்காதபடி, [QBR] அவருடைய கடுங்கோபத்தை ஆற்றுவதற்கு, [QBR] அவருக்கு முன்பாகத் திறப்பின் வாசலிலே நின்றான். [QBR]
24 அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல், [QBR] விரும்பத்தக்க தேசத்தை அசட்டைச்செய்தார்கள். [QBR]
25 யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல், [QBR] தங்களுடைய கூடாரங்களில் முறுமுறுத்தார்கள். [QBR]
26 அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும், [QBR] அவர்கள் சந்ததி தேசங்களுக்குள்ளே அழியவும், [QBR]
27 அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், [QBR] அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார். [QBR]
28 அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, [QBR] உயிரில்லாதவைகளுக்கு செலுத்தின பலிகளை சாப்பிட்டு, [QBR]
29 தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; [QBR] ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது. [QBR]
30 அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; [QBR] அதினால் வாதை நிறுத்தப்பட்டது. [QBR]
31 அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. [QBR]
32 மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; [QBR] அவர்களினால் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது. [QBR]
33 அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே, [QBR] தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான். [QBR]
34 யெகோவா தங்களுக்குச் சொன்னபடி, [QBR] அவர்கள் அந்த மக்களை அழிக்கவில்லை. [QBR]
35 அந்நிய ஜாதிகளோடு கலந்து, அவர்களுடைய செயல்களைக் கற்று; [QBR]
36 அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்; [QBR] அவைகள் அவர்களுக்குக் கண்ணியானது. [QBR]
37 அவர்கள் தங்களுடைய மகன்களையும் [QBR] தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள். [QBR]
38 அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு, [QBR] தங்களுடைய மகன்கள் மகள்களுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; [QBR] தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது. [QBR]
39 அவர்கள் தங்களுடைய செயல்களினால் அசுத்தமாகி, [QBR] தங்களுடைய செயல்களினால் வேசித்தனம் செய்தார்கள். [QBR]
40 அதினால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது; [QBR] அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார். [QBR]
41 அவர்களைத் தேசங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; [QBR] அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஆண்டார்கள். [QBR]
42 அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்; [QBR] அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள். [QBR]
43 அநேகமுறை அவர்களை விடுவித்தார்; [QBR] அவர்களோ தங்களுடைய யோசனையினால் அவருக்கு விரோதமாகக் கலகம்செய்து, [QBR] தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள். [QBR]
44 அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, [QBR] அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் பார்த்து, [QBR]
45 அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, [QBR] தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து, [QBR]
46 அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார். [QBR]
47 எங்கள் தேவனாகிய யெகோவாவே, [QBR] நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி, [QBR] உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி, [QBR] எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும். [QBR]
48 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா [QBR] அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். [QBR] மக்களெல்லோரும் ஆமென், என்பார்களாக, [QBR] அல்லேலூயா. [PE]
×

Alert

×