Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 105 Verses

1 யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், [QBR] அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். [QBR]
2 அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; [QBR] அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். [QBR]
3 அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; [QBR] யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. [QBR]
4 யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; [QBR] அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள். [QBR]
5 அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! [QBR] அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! [QBR]
6 அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், [QBR] அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். [QBR]
7 அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, [QBR] அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். [QBR]
8 ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், [QBR] ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், [QBR]
9 அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
10 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், [QBR] இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: [QBR]
11 உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். [QBR]
12 அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள். [QBR]
13 அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும், [QBR] ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள். [QBR]
14 அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், [QBR] அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு: [QBR]
15 நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், [QBR] என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார். [QBR]
16 அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார். [QBR]
17 அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; [QBR] யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். [QBR]
18 அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; [QBR] அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது. [QBR]
19 யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை [QBR] அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. [QBR]
20 ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; [QBR] மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான். [QBR]
21 தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், [QBR] தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும், [QBR]
22 அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், [QBR] தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார். [QBR]
23 அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; [QBR] யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான். [QBR]
24 அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, [QBR] அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார். [QBR]
25 தம்முடைய மக்களைப் பகைக்கவும், [QBR] தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், [QBR] அவர்களுடைய இருதயத்தை மாற்றினார். [QBR]
26 தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார். [QBR]
27 இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், [QBR] காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள். [QBR]
28 அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; [QBR] அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை. [QBR]
29 அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, [QBR] அவர்களுடைய மீன்களை சாகடித்தார். [QBR]
30 அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; [QBR] அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது. [QBR]
31 அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது. [QBR]
32 அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, [QBR] அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார். [QBR]
33 அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, [QBR] அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார். [QBR]
34 அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து, [QBR]
35 அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து, [QBR] அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது. [QBR]
36 அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், [QBR] அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார். [QBR]
37 அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; [QBR] அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. [QBR]
38 எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். [QBR]
39 அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, [QBR] இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார். [QBR]
40 இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்; [QBR] வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார். [QBR]
41 கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது. [QBR]
42 அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், [QBR] தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து, [QBR]
43 தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும், [QBR] தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து, [QBR]
44 தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், [QBR] தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும், [QBR]
45 அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்; [QBR] அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். [QBR] அல்லேலூயா. [PE]
×

Alert

×