Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 30 Verses

1 {ஆகூரின் நீதிமொழிகள்} [PS] யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து, [QBR] ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்: [QBR]
2 மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; [QBR] மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. [QBR]
3 நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, [QBR] பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. [QBR]
4 வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? [QBR] காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? [QBR] தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்? [QBR] பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்? [QBR] அவருடைய பெயர் என்ன? [QBR] அவருடைய மகனுடைய பெயர் [QBR] என்ன? அதை அறிவாயோ? [QBR]
5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; [QBR] தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர். [QBR]
6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, [QBR] கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், [QBR] நீ பொய்யனாவாய். [QBR]
7 இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; [QBR] நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். [QBR]
8 மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; [QBR] தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக. [QBR]
9 நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; [QBR] தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், [QBR] என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும். [QBR]
10 எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே; [QBR] அவன் உன்னைச் சபிப்பான், [QBR] நீ குற்றவாளியாகக் காணப்படுவாய். [QBR]
11 தங்களுடைய தகப்பனைச் சபித்தும், [QBR] தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு. [QBR]
12 தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், [QBR] தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு. [QBR]
13 வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள். [QBR]
14 தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் [QBR] சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு. [QBR]
15 கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. [QBR] திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு. [QBR]
16 அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், [QBR] தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. [QBR]
17 தகப்பனைப் பரியாசம்செய்து, [QBR] தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், [QBR] கழுகின் குஞ்சுகள் சாப்பிடும். [QBR]
18 எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, [QBR] என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. [QBR]
19 அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், [QBR] கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், [QBR] ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே. [QBR]
20 அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; [QBR] அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; [QBR] நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். [QBR]
21 மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது, [QBR] நான்கையும் அது தாங்கமுடியாது. [QBR]
22 அரசாளுகிற அடிமைக்காகவும், [QBR] உணவால் திருப்தியான மூடனுக்காகவும், [QBR]
23 பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், [QBR] தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே. [QBR]
24 பூமியில் சிறியவைகளாக இருந்தும், [QBR] மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு. [QBR]
25 அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், [QBR] கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும், [QBR]
26 பெலமில்லாத உயிரினமாக இருந்தும், [QBR] தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும், [QBR]
27 ராஜா இல்லாமல் இருந்தும், [QBR] கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், [QBR]
28 தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி, [QBR] அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே. [QBR]
29 விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; [QBR] விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு. [QBR]
30 அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும், [QBR]
31 பெருமையாய் நடக்கிற சேவலும் [* போர்க்குதிரை] , வெள்ளாட்டுக் கடாவும், [QBR] ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே. [QBR]
32 நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, [QBR] துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு. [QBR]
33 பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; [QBR] மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; [QBR] அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும். [PE]
×

Alert

×