Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 29 Verses

1 {ஞானத்தின் போதனை} [PS] அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் [QBR] உதவியின்றி திடீரென்று நாசமடைவான். [QBR]
2 நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்; [QBR] துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள். [QBR]
3 ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை [QBR] சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான். [QBR]
4 நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; [QBR] லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான். [QBR]
5 பிறனை முகஸ்துதி செய்கிறவன், [QBR] அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான். [QBR]
6 துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; [QBR] நீதிமானோ பாடி மகிழுகிறான். [QBR]
7 நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; [QBR] துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான். [QBR]
8 பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; [QBR] ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள். [QBR]
9 ஞானி மூடனுடன் வழக்காடும்போது, [QBR] கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை. [QBR]
10 இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்; [QBR] செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள். [QBR]
11 மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; [QBR] ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான். [QBR]
12 அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், [QBR] அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள். [QBR]
13 தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; [QBR] அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார். [QBR]
14 ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் [QBR] என்றும் நிலைபெற்றிருக்கும். [QBR]
15 பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; [QBR] தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ [QBR] தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான். [QBR]
16 துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; [QBR] நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள். [QBR]
17 உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், [QBR] உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான். [QBR]
18 தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்; [QBR] வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். [QBR]
19 அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; [QBR] அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான். [QBR]
20 தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், [QBR] அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம். [QBR]
21 ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், [QBR] முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான். [QBR]
22 கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; [QBR] கடுங்கோபி பெரும்பாதகன். [QBR]
23 மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; [QBR] மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான். [QBR]
24 திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்; [QBR] சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான். [QBR]
25 மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; [QBR] யெகோவாவை நம்புகிறவனோ [QBR] உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். [QBR]
26 ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; [QBR] ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும். [QBR]
27 நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; [QBR] சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன். [PE]
×

Alert

×